Friday, January 20, 2017

சல்லிக்கட்டு - கௌரி மாலிகுக்கு தெரியுமா இல்லை உங்களக்கு தெரியுமா - இந்தியா டுடே



உங்களை யாருயா நல்ல பால் குடிக்க சொன்னது, நீ பால் குடிக்கிறியோ இல்லையோ எங்களுக்கு பணம் வந்தா சரி தான்.

நீ இருந்தா என்ன செத்தா என்ன, எனக்கு வர வரும்படிய ஏன் சிதைகிறே, நாங்க நல்லபடியா காசுவாங்கி பிழைப்பது(எச்சகளை நாயா, பட்டுத்தி, ஆடிகாருல வலம் வருவது) உங்களுக்கு பிடிக்கலியா.

தமிழன் என்ன திங்கனுன்னு வடக்க கடை வச்சிருக்க நான் தான் முடிவு செய்யனும் தமிழன் இல்லை.

எங்க சிப்பா பார்த்து நீங்கள் ஆசைபடவில்லை, இல்லை இந்திப்பாடல் கேட்டு மயங்கவில்லை, இல்லை எங்கள் மானிலத்தில் வேலைக்கு வரவில்லை, பிறகு ஏன், அடங்கி நட, இல்லை அலங்கானல்லூரில் 250 பேரை சிறை வைத்தது போல் மொத்த தமிழகத்தையும் சிறையில் வைப்போம் முடிந்தால் மோதிப்பார்.

உங்களுக்கு கௌரி மாலிக்கு என்றால் யார் என்று தெரியவில்லை முட்டாள் தனமாக மொதுகிறீர்கள், பின்னாள் வருத்தப்படுவீர்கள். சாக்கிறதை சொல்லிப்புட்டேன்

தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி, தமிழகம் என்றால் இந்தியா, ஆனால் இந்தியாவுக்குள் தமிழகத்தை பிரித்துதாள ஒரு பகுதியினர் துணிந்துவிட்டனர். தேச துரோகி என்று வைத்துக்கொள்ளுங்களேன் . ஆனால் மற்ற இந்தியர்கள் ஏன் மௌனம் சாதிக்கின்றார்கள், கௌரி மாலிக்கை ஆதரிக்கிறார்களா இல்லை இந்தியனாக இருக்க போகிறீர்களா.... சொல்லுங்கள் இந்தியர்களே........

0 comments: