Wednesday, January 25, 2017

நல்லவேளை இந்த காவலர்கள் மருத்துவர்கள் ஆகவில்லை - ஒரு வேளை ஆகி இருந்தால்

வேறு யார சொல்லப்போரோம், காவலர்கள் தான் (Police). என்ன ஒரு அறிவுக்குக்கொழுந்து இவர்கள்.

மருத்துவரிடம் பாம்பு கடிச்சுதுன்னு ஒருவரை தூக்கிகொண்டு வந்தா, கடிச்ச இடத்தையும் அதன் சுற்றி இருக்கும் இடத்தில் இருந்து நச்சு பராவாத வண்ணம் தடுப்பை நிறுத்தி. நெஞ்சுக்கு நச்சு வராமலும், நாளங்களில் இரத்தம் உறையாமலும் வைத்தியம் செய்து இருப்பார்கள் மருத்துவர்கள்.

ஒரு வேளை இந்த காவலர்கள் மருத்துவர்களாக இருதிருந்தால், என்ன செய்து இருப்பார்கள். நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது.

காலில் பாம்பு கொத்தியது என்று சொன்னதும், தலையில் நச்சு ஏறப்பபோகிறது என்று மண்டையில் அடித்து உடைத்து இருப்பார்கள்.

அது மட்டுமா, நெஞ்சில் நச்சு தாக்கப்போகிறது என்று நெஞ்சை பிளந்து இருப்பார்கள்.

மற்றும் பாம்பு கொத்தாத கால் மற்றும் கைகளில் நச்சு தாக்கப்போகிறது என்று அடித்து அடித்து இரத்த ஓட்டத்தையே நிறுத்தி இனி எப்படி நச்சு ஏறும் என்றும் வடிவேலு பாணியில் சொல்லி இருப்பார்கள்.

திருவல்லிகேணியில் வன்முறை வந்தால் (அது நீங்களாக உருவாக்கியது என்று ஐ நா சபை வரை நிறுபிக்க சாட்சிகள் உண்டு). திருவல்லிகேணையையும் மற்ற இடங்களையும் துண்டித்து நடவடிக்கை எடுத்தீர்கள் என்றால் நீங்கள் உண்மையில் உயிரை காப்பாற்றும் காவல் என்று பொருள்.

அதைவிடுத்து மெரினாவில் 6 நாட்களாக இருந்த அப்பாவி இளைஞர்களை தடி கொண்டு தாக்கினால் அதற்கு ஒரே பொருள் தான், உங்களின் சுற்றமோ நட்போ அங்கு இல்லை என்றது மட்டும் தான்.

சட்டத்தின் மேலும் சட்ட அமைபின் மேலும் எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தால் எனது சகோதரிகளும், அம்மாக்களும், சிறார்களும் சிறுமிகளும் நம்பிக்கையுடன் அங்கு வந்து அமர்ந்திருப்பார்கள். போராட்டம் செய்திருப்பார்கள்.

இந்த அறப்போர் இந்தியனுக்கு சட்டத்தால் வழங்கப்பட்ட உரிமை அதை வேறுபாடில்லாமல் செயலாக்க நினைத்த என் மக்களை என்ன திமிர் கொண்டு தாக்கினீர்கள் காவலர்களே.

ஒரே ஒரு திமிர் தான், தன்னுடைய சொந்தமும் நட்பும் இதில் இல்லை என்று தான் என்று முடிவாகவே சொல்லமுடியும். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை.

அங்கு போராடிய பெண்கள் உங்களின் நண்பர்கள் உரவினர்கள் சொந்தங்களின் வயதை ஒத்தவர்கள் இல்லை.

இந்த பெண்கள் தங்களை பாதுகாத்துகொள்ளவும் அவர்களை பாதுகாக்க ஆண்கள் முன்னால் வருவதும் என்று வரும் அந்த போராட்டகாரர்களை பார்க்க உங்கள் உரவுகள் நினைவுக்கு வரவில்லை.

இதை எல்லாம் தாண்டி எங்களது இடத்தில் இருக்கும் மாணவர்களை அடிக்காதீர்கள் என்று மூதாட்டி முதல் பெண்கள் அனைவரும் வந்ததை குடும்ப பிரச்சனையில் உரவுக்கு உரவு கெடாமல் இருக்க நமது தாய்மார்கள் குறுக்கே நிற்கு படலம் உங்கள் கண்களுக்கு முன்னால் வரவில்லை.

என்ன கொடுத்துவிடப்போகிறார்கள் அந்த ஆசை வார்த்தைகளை வீசியவர்கள். விலை உயர்ந்த வண்டி பார்ப்பவர்கள் வாய்பிளக்கும் ஒரு வண்டி, இருக்க ஒய்யாரமாய் ஒரு வீடு. மனையாளின் கழுத்தில் கூண்விழும் படி தங்கம். இவை அனைத்தும் நீர் வாங்கலாம் இந்த காரியத்திற்கு பலனாய்.

ஆனால் உனக்கு பிறகு அதை அனுபவிக்க யார் இருக்க போகிறார், நீ முடியும் முன்னே உனது கண்ணெதிரிலேயே அத்தனையும் அழியக்காண்பாய்.

எப்படி தெரியுமா என் வீட்டு பெண்களும் யுவதிகளும் உயிருக்கு பயந்து ஓடிய அந்த காட்சியை போல். ஒன்று செய்துவிட  முடியாமல் நின்றானே அந்த இளைஞனை போல் நீயும் இருக்க காண்பாய்.

 நாணயத்தில் ஒரு பக்கம் இல்லை என்றால் அந்த நாணயமே மதிப்பிழக்கிறது அதுபோல் பால் வேறுபாடில்லாமல் ஆணுக்கு சளைத்தவள் இல்ல பெண் என்று வந்தவளை குலை நடுந்த ஓட்டியவர்களே நீங்களும் உங்களது மக்களும் என்ன செவ்வாய் கிரகணத்திலா போய் வாழப்போகிறீர்கள்.

அவனவன் விதைத்தை அவனவன் அறுவடை செய்வான், நல்லவைகளை விதை நல்லவைகளாகவே அறுவடை செய், மற்றதை பற்றி உனக்கு கவலை ஏன் என்று சென்ற யுவன் யுவதிகளையும் கர்பினி பெண்களையும் கொடுமை செய்த்த நீங்கள் எல்லாம் என்ன நல்ல சாவா அடைய போகிறீர்கள் நஞ்சுண்டவர்களே.

சொர்கமும் நரகமும் சாவிற்கு பின்னாளில் என்று நம்பிக்கொண்டு இருக்கும் காவலர்களே இன்னும் கொஞ்ச நாளில் நடந்தது என்ன என்ற நிகழ்வில் உங்களையும் நீங்கள் போற்றி வளர்த்த உரவுகளையும் நாங்கள் கட்டாயம் காண்போம்.

அப்பவும் உன்னை போல் அவர்களின் மேல் எனது உரவுகள் அமிலத்தை உன் போல் அடுத்தவன் விட்டெரியும் காசுக்காக உமிழும் என்று நம்பாதே, கருணையே காட்டுவார்கள்.

ஏன் தெரியுமா அவனுக்கும் அவளுக்கும் தான் தனது அடுத்தவன் என்று பிரித்து பார்க்க தெரியாதே, தெரிந்து இருந்தால் உன்னோடும் உனது கள்ள கூட்டோடும் அவன் வாட்சப்பில் இருந்திருப்பானே சென்று தப்பிருப்பானே, தனது சகோதரிகளை காத்து வீரன் என்று உன் போல் அவர்கள் முன் காட்டி இருப்பானே.

 நல்லவன் ஞாயம் தெரிந்தவன் மன சாட்சிக்கு பயந்தவன் இவர்கள் எல்லாம் ஏமாளிகள் என்று நீ நினைத்துக்கொள். இவன் செய்ய மறந்ததை கடவுள் அவனுக்காக செய்வான், அவன் அவள் கடவுளின் செயலை கவனிக்கும் பட்ச்சத்தில்............

உனக்காக கடவுளை வேண்டுவோம் இந்த தரம் கெட்ட தகப்பனின் தவறுக்கு ஒன்று அறியா அவனது குழந்தைகளி தண்டித்துவிடாதே என்று.

ஆனால் விதி வலியது நியூட்டன் சொன்னது போல் வினைக்கு எதிர்வினை உண்டு..... பொருத்து இருந்து பார்ப்போம் எனது விதியையும் உனது விதியையும்.

இங்கு காவலர்கள் என்று சொன்னது குளீரூட்ட அறையில் அமர்ந்து இப்போ தீ வை, பிறகு எல்லா மாவடங்களிலும் தடியடி நடத்து என்று சொன்ன அந்த மூளைகார அறிவாளையை தான் வெறி நாய் போல் மக்களின் மேல் விழுந்து பிடுங்கிய காவலர்களை அல்ல.

0 comments: