Tuesday, February 14, 2017

தமிழக அரசையே கவிழ்க்க கூடிய வலிமை பீட்டாவிற்கு உண்டா

சல்லிக்கட்டு இனி தடையின்றி நடக்கும் என்று சட்டம் ஏற்றியதில் இருந்து தமிழக அரசு தள்ளாட ஆரம்பித்துவிட்டது.

சட்டம் இயற்றி வெற்றியை கொண்டாடும் தருணம் வரைக்கூட பொருக்க முடியாமல் தமிழகத்தில் வன்முறையை விதைத்து அரசையும் மக்களையும் முட்டிக்க வைத்து வேடிக்கை பார்க்கிறது பீட்டா.

அதிமுக அரசு அல்ல வேறு எந்த அரசாக இருந்தாலும் இப்படி எங்களோடு மோதினால் விளைவு இப்படி தான் இருக்கும் என்று இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் மிரட்டல் விடும் தொணியில் தமிழக அரசியலில் ஒரு சூராவளியை உருவாக்கி இருக்கிறது பீட்டா.

தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்த நாளைக்கு அடுத்த நாளே தன் படைகளுடன் சென்று பிரதமரை சந்தித்து விலை பேசி இருக்கிறது பீட்டா. விலையும் அதன் விளைவுகளும் பிடித்து போகவே படிப்படியாக இந்த அரசியல் அலங்கோலத்தை சிந்தாமல் சிதராமல் செயல்படுத்தி இருக்கிறது பீட்டா.

இன்னும் ஒன்றை கவனிக்கலாம், தமிழகத்தில் எது நடந்தாலும் பாசகவினர் தான் பதில் சொல்கிறார்கள். பெரும்பான்மையை நிறுபிக்கும் காலம் வரை ஆளுனரின் செயல்களை ஞாயப்படுத்துவதில் இருந்து ஆட்சி பணி மற்றும் காவல் துறை அதிகாரிகள் வரை என்ன என்ன செய்ய வேண்டும் என்று மறைமுகமாக மைய அரசு ஆணையிடவும். அந்த நகர்வுகளை தமிழக பாசக ஞாயப்படுத்தி பேசுவதையும் நம்மால் காணமுடியும்.

தமிழகத்தின் அடுத்த அரசு அமைந்த கொஞ்ச நாளிலேயே எல்லோர் கண்களிலும் மண்ணை தூவி இனி எப்பொழுதும் சல்லிக்கட்டோ அல்லது நாட்டு மாடுகளையோ அல்லது சொந்த நிலத்தடி நீரையோ இனி தமிழகத்தில் ஒருவரும் கொள்ள முடியா வண்ணம் வழி செய்யப்பட்டு விடும். உதாரணமாக ஐயோடின் இல்லாத உப்பை இனி யாரும் விற்கவும் வாங்கவும் கூடாது என்று தடை வந்தது போல் இருக்கும்.

அப்படி என்ன தான் மந்திரம் ஓதி இருப்பார் பூர்வா சோசிபுரா, மகுடிக்கு மயங்கின பாம்பு போல் மோடி அரசு அரசபயங்கரவாதத்தில் இயங்குகின்றது.

நாம் முன்னறே சொன்னது போல் இந்தியாவின் அடுத்த பிரதமர் பூர்வா சோசிபுரா தான். இவ்வளவு சக்திவாய்ந்த தலைமை அமைவது தான் வலிய பாரதமாக அமையும் என்று பாசக சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை தான்........

சட்டம் இயற்றிய பன்னீர் செல்வம் இனி அரசியல் துறவரம் மேற்கொண்டு காணாமல் போகவேண்டியது தான் போலும்.

0 comments: