Wednesday, January 4, 2017

மோடிக்கு ஆதரவாக புளுகும் ஆனந்த விகடன்

இந்த வார விகடனில் சோ கார்த்திகேயன் என்ற பெயரில் ஒரு புளுகு வந்துள்ளது.

"
விரைவில் வரலாம்! 
அமெரிக்காவில் அனைவரிடமும் 10 டாலர் (இந்திய மதிப்பில் 670 ரூபாய்) மட்டுமே கையில் இருக்கும். மற்றபடி அனைவரிடமும் 2 அல்லது 3 கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பர். அமெரிக்காவில் கையில் இருந்து காசு எடுப்பதே தேவையில்லை. பெரும்பாலும் அனைத்துப் பரிவர்த்தனையும் கார்டு மூலமாகத்தான் நடைபெறும். இப்பொழுது இதுவரை இருந்த கறுப்புப் பணத்தை ஒரு வழியாகக் கட்டுப்படுத்தி வருகின்றனர். ஆனால், மீண்டும் கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பணமில்லா பரிவர்த்தனை மிகப் பெரிய அளவில் உதவும். இதற்காக ரூ.10,000க்கு மேல் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் பணத்துக்குப் பதிலாக கார்டாக செலுத்த வேண்டும் என்ற நடைமுறை விரைவில் வரலாம். அதை நோக்கியே மத்திய அரசின் ஒவ்வொரு அறிவிப்புகளும் வெளிவந்து கொண்டே உள்ளன. ஒரு சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்த பிறகு கூடிய விரைவிலோ அல்லது ஒரு சில ஆண்டுகளில் இந்த நடைமுறையும் நிச்சயம் வரலாம்" என்றார்.

மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பினையடுத்து தினம் தினம் ஏதாவது ஒரு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணமே உள்ளது. இவையனைத்தும் பணமில்லா பரிவர்த்தனையின் நோக்கிய பயணமே. அரசின் அறிவிப்புக்கு முன்னர்  பணமில்லா பரிவர்த்தனைக்கு கொஞ்சம், கொஞ்சமாக நம்மை நாமே தயார் படுத்திக்கொள்வதே நல்லது."

அமெரிக்காவின் சில்லரை வணிகத்தில் பெரும் பங்கு வகிக்கும்  வால்மார்ட் அனைவருக்கும் தெரிந்து இருக்கும் என்று நினைக்கின்றேன்.

சில்லரை மற்றும் மொத்த வியபாரமாக இரண்டு வெவ்வேறு நிறுவனங்களின் பெயரில் வர்த்தம்புரிந்து வருகின்றது.

ஒவ்வொரு சிறு ஊரிலும் 2 அல்லது 3 கடைகள் இருக்கும். ஒவ்வொரு பெரு நகரங்களுல் 10 முதல் 20 கடைகள் வரையிலும் இருக்கும்.

மிதமான கடைகளில் கூட ஒரு நாளைக்கு சுமாராக 10,000 டாலர்கள் வரை வியாபாரம் நடக்கும். ஒவ்வொரு கடைக்கும் குறைந்தது 20 முதல் 25 மக்கள் பொருட்களை விற்றுக்கொடுப்பார்கள்.

ஒவ்வொரு கவுண்டரிலும் துவக்கமாக 200 டாலர் வரை சில்லரை வைத்து இருப்பார்கள். ஒவ்வொரு கவுண்டரிலும் அதிகபட்சம் 2 மணி நேரம் தான் ஒரே ஆள் நின்று வியபாரம் செய்ய முடியும். அந்த இரண்டு மணி நேரத்தில் குறைந்தது ஒரு முறையாவது சில்லரை கொடுக்க பணம் இல்லை என்று கேட்டு பெற வேண்டி இருக்கும். மிகவும் கூட்டமாக இருக்கும் மாத 15 மற்றும் 30 தேதிகளுல் 2 மணி நேரத்தில் 2 அல்லது 3 முறை கூட அதிக சில்லரை தேவை இருக்கும்.

வால்மார்ட்டில் குறைந்தது $60 முதல் $400 வரை ஒருவர் வாங்கக்கூடும். அப்படி வாங்குபவர்களில் 60% முதல் 75% சதவிகிதம் பணமாகவும் 25% விகிதம் கடனட்டை அல்லது வேறு அட்டைகளின் மூலமும் வாங்குகிறார்கள்.

இது பழங்காலத்தில் நடந்தது அல்ல, தற்பொழுது நடந்துக்கொண்டு இருக்கும் நடைமுறை. அது மட்டும் அல்லாது. சிறு வணிகர்களான இந்தியர்கள் மற்றும் இதர நாட்டின் குறுவியபாரிகள். பணமாக கொடுத்தால் 5% முதல் 10% வரை தள்ளுபடி என்றும் $10க்கு கீழ் கடனட்டையில் பரிவர்த்தனைகள் கிடையாது என்றும் கைவிரிப்பார்கள்.

அமெரிக்காவில் இப்படி என்றால் ஐரோப்பாவின் நிலையோ இன்னும் வினோதம்.

ஐரோப்பாவில் யூரோ இருக்க அமெரிக்க டாலர் இருக்கிறதா என்று கேட்ப்பார்கள் அதுவும் சுற்றுலா இடங்களில் நம்மிடம் வந்து வியபாரம் பேசும் சிறு வணிகர்கள் அமெரிக்க டாலரிலே விலை பேசி விற்பார்கள்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பாவின் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரும்பாலும் வார சம்பளம் பெருபவர்கள். அவரகளது வார சம்பளம் $400 முதல் $500 வரை இருக்கலாம். இந்த $1000 முதல் $1500 வரை வாங்குபவர்களின் வாழ்க்கை வாங்கும் சம்பளத்தை அப்படியே வீட்டு வாடகை மற்றும் உணவுக்கு உடைக்கு என்று போக மிக சொற்பமான பணமே மிஞ்சும்.

இவர்களது சம்பளம் மற்றும் செலவும் கணக்கில் எடுத்து பார்த்து இவர்களுக்கு யாரும் கடனட்டை கொடுக்க முன்வருவது இல்லை. காரணம் ஏறாளமான கடனை முதல் தவனையிலே வாங்கிவிட்டு கட்டமுடியவில்லை என்று மஞ்சள் கடுதாசி கொடுப்பர்கள் என்று கடனட்டை நிறுவனம் அஞ்சும்.

சில தேவைகளுக்கு அட்டை இல்லை என்றால் வேலை ஆகாது என்று வருங்கால் இவர்களுக்கு என்று முன்கட்டிய கடனட்டைகள் கிடைக்கும். அதில் நாம் பணம் போட்டுவிட்டு பிறகு தான் பயன் படுத்த முடியும். இந்த முறை அட்டையை பயன் படுத்துவோர் பெரும்பாலும் முன் கட்டணம் செலுத்தும் போது பாதி நேரம் அவகளின் வங்கி கணக்கில் பணம் இருக்காது, முறைத்துக்கொண்டும் சபித்துக்கொண்டும் செல்வார்கள் அந்த இயலாதவர்கள்.

 நிலைமை இப்படி இருக்க, விகடனில் கார்த்திகேயனோ அமெரிக்காவில் 20 ஆண்டுகளாக குடியிருந்து மக்களின் பணபரிவர்த்தனைகளை நேரில் பார்த்தவர் போல் எழுதுகிறார் உண்மைக்கு புறம்பாக.

அமெரிக்காவின் வங்கிகளிலும் வாசலிலும் பணத்திற்காக தினமும் ஒரு பெருங்கூட்டம் வந்து போவதையும் இவர் அறியார்.

மோடியின் போதை இவர்க்கு தலை கால் புரியாத அளவிற்கு ஏறியுள்ளது இந்த போதை இறங்கும் வரை என்ன சொன்னாலும் குடிகாரன் கணக்காக உளருவார். என்ன அமெரிக்காவுல மைகேல் சாக்சன் கூப்டாக, ஜப்பான்ல சாக்கிசன் கூப்டாக என்று எத்தனை நாளை புளுக போகிறீர்கள் கார்த்திகேயன் வையராக்களே.............புளுகு மூட்டைகளா.......

4 comments:

Anonymous said...

american people are not using debit card?

Anonymous said...

you are absolutely correct. Vikatan and other magazines are lying regarding demonetization in many ways.

')) said...

Not everybody, to be specific about 48% are not using or having either debit card/Check card/Credit card because of lack of money or credit availability for them. Not only in small town or village in Large and very large cities as well.

')) said...

Yes they are may be they been compelled to do so I guess, recently Thanthi TV turned into Paytm TV have you noticed.