Friday, January 20, 2017

பீட்டா - பாசகவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் பூர்வா சோசிபுரா வாழ்க

பூர்வா, இனி மெல்ல மோடி என்ற சொல் மறைந்து நாடுமுழுவது  பூர்வா பூர்வா என்று தான் முழங்கும்.

உலகின் இரண்டாம் பெரிய மக்களாட்ச்சி, மூத்த குடி, உலகிற்கு எழுத படிக்க  பழக என்று வேதங்களில் சொல்லும் அத்தனையையும் கற்றுக்கொடுத்த நாடு இந்தியா என்று உலகம் முழுவதும் பேசி வந்த மோடியை மெல்ல கழட்டி விட்டு விட்டு இனி அமெரிக்காவின் நேரடி முதளாலி பூர்வா சோசிப்புரா தான் இனி இந்திய நாட்டையும் ஏன் உலகையும் ஆள வல்லவர்.

நேருவிற்கு பிறகு முழு பலத்துடன் பாராளுமன்றம் சென்ற பாசக மண்டியிட்டது இந்த அமெரிக்கரின் காலடியில் தான்.

இந்த பெண்மணியின் உத்தவரவுக்காக காத்து இருக்கும் 56 இன்சு மார்பகன் நாளை என்ன செய்வாரோ தெரியவில்லை.

50 நாள் தானே கேட்டேன் என்ற பெருமகன் பூர்வாவின் ஆணைக்காக காத்து கிடக்கிறார் போலும்(இங்கே ஓ பன்னீரின் நினைவு வந்தால் கம்பெனி பொருப்பாகாது).

இந்த அமெரிக்ககாரியின் ஆணைக்கு இணங்க இந்தியர்கள் கடமை பட்டவர்கள் போலும்.

இங்கே எல்லையிலே இராணுவ வீரர் என்று எல்லாம் பேசக்கூடாது ஏன் என்றாலும் அவரும் பூர்வாவின் ஆணைக்காக சுடலாமா வேண்டாமா என்று காத்துக்கொண்டு தான் இருக்கிறார்.

தமிழச்சிகளுக்கு இங்கே என்ன வேலை சென்று சமையல் செய்து தொகாவில் தொடர் பார்ப்பதை விட்டு விட்டு, மனசுக்குள் பூர்வா சோசிபுரா என்ற நினைப்பா.........

1 comments:

')) said...

http://marubadiyumpookkum.blogspot.in/2017/01/blog-post_20.html