Wednesday, January 11, 2017

நடுத்தர மற்றும் ஏழைகளுக்கு மோடி கொடுக்கப்போகும் அல்வா - வங்கிகளில் இனி இப்படி தான் உங்கள் பணத்தை கொடுப்பார்கள்

பணமில்லா பரிவர்த்தனை, வங்கியில் செலுத்திய பணத்தில் கருப்பு பணம். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் வரி கட்டி இருக்க வேண்டும் இல்லை என்றால் குறைந்தது பாசக அரசு அமைத்த பிறகாவது வரி கட்டி இருக்க வேண்டும். இன்னமும் பணமில்ல பரிவர்த்தனையில் நீங்கள் எதையுமே வாங்காதால் என்று என்ன என்ன கணக்குகள் எல்லாம் மோடி வித்தை சாலங்கள் காட்ட முடியுமோ அத்தனையும் காட்டி விட்டு கடைசியில் உங்களுக்கும் இப்படி தான் அல்வா கொடுப்பார்.



அப்போ வங்கியில போட்ட பணம் எல்லாம் எடுக்க முடியாதா என்றா கேட்குறீர்கள் அது தான் தொகாவுக்கு தொகா பாசக மக்கள் சொல்கிறார்களே உங்களுக்கு எதுக்கு கையில பணம். பணம் எடுக்கனும்னா இனி மனு போட்டு அவுங்க அவசியம் கொடுக்கலாமா இல்லையா என்று ஆராய்ந்து பிறகு தீர்மானித்து ஆலோசித்து சொல்வார்கள். காத்து இருக்க வேண்டியது தான் மக்களே.

பாரத மாதாகீ சே........

எல்லையில குளிரிலும் மழையில் நிற்கும் இராணுவ வீரர் என்ன கையில பணமா வச்சுகிட்டு நிக்குறாரு சொல்லுங்க மக்களே, சொல்லுங்க. அது போல நீங்களும் நாட்டுக்காக தியாகம் செய்யுங்கள் கொஞ்ச நாளைக்கு தான் இந்த சங்கடம் எல்லாம், பிறகு பாருங்க சொர்கமாக பிறக்க போகும் புதிய இந்தியாவை............

0 comments: