Saturday, January 21, 2017

பீட்டாவை நாம் முதலில் தடை செய்வோம்

எரியரத பிடுங்கினால் கொதிப்பது நிற்கும் என்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

மைய அரசு பீட்டாவை தடை செய்யும் முன் இன்று முதல் தமிழகத்தில் பீட்டாவை நாம் தடை செய்வோம்.

அடுத்த நாட்டில் வசூலாகும் பணத்தை வைத்துக்கொண்டு இந்தியாவில் வழக்கு நடத்த பீட்டாவின் அதிகாரிகள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

இந்தியாவில் வசூலாகும் பணத்தை கொண்டு தான் இந்த ஆட்டம் ஆடுகிறார்கள் பீட்டா அமைப்பினர்.

பீட்டாவின் இணைய தளத்தில் அவர்களுக்கு யார் யார் எல்லாம் பணம் கொடுக்கிறார்கள் என்ற விபரங்கள் இல்லை. இருப்பினும் வீகன் உணவை அவர்களிடம் இருந்து வாங்க விளம்பர படுத்தியுள்ளார்கள்.

இனி தமிழகத்தில் யாரும் அந்த தளத்தில் இருந்து உணவுகளை வாங்குவதை நிறுத்துவதில் இருந்து தொடங்குவோ.

 நாளை முதல் டீ குடிக்க கடைக்கு சென்றால் கூட பீட்டா(செர்சி) பால் டீ என்றால் வேண்டாம் என்று சொல்லுங்கள்.

தமிழகத்தில் பீட்டாவில் இணைந்து இருக்கும் எந்த ஒரு நடிகரின் நடிகைகளின் படங்களை புரக்கணியுங்கள். அது எப்பேர்பட்ட நாயகன் நாயகியாக இருந்தாலும் சரி என்று சபதம் எடுங்கள்.

உணவகங்களில் நாட்டு கோழி(தமிழகத்தில் வளர்த்தது என்று கேளுங்கள்) பிரியாணி கடைகளில் நாட்டுக்கோழி பிரியாணி என்று ஒரு தனி இரகம் உண்டு என்று அனேகர்களுக்கு தெரியும்.

உங்கள் ஊரின் அருகில் இருக்கும் ஊரில் விளைவிக்கப்பட்டதை ஊக்கப்படுத்துங்கள்.

குளிர் பாணங்களில் எவர் எவர் எல்லாம் பீட்டாவிற்கு நன்கொடை கொடுத்தார்கள் என்று தெரிந்துக்கொண்டு அவைகளை வாங்குவதை நிறுத்துங்கள்.

காலப்போக்கில் இது non-supporter of Peta என்ற அறிவிப்புடன் வர துவங்கும்.

நமக்காக விளைவிக்கும் விவசாயிகளையும் அவர்களை சார்ந்தவர்களையும் இப்படி தான் இனிமேல் மீட்டு எடுக்க வேண்டும்.

பீட்டாவையும் ஒழித்தால் போல் ஆச்சு நமது மக்களையும் மீட்டு எடுத்தார் போலும் ஆச்சு என்று துவங்குங்கள்.

பிறகு பாருங்கள் பீட்டாவில் இருந்து உங்களிடம் காவடி ஏந்தி வருவார்க, தவிச்ச வாய்க்கு தண்ணீர் கூட கொடுக்காதீர்கள். அவர்களுக்கு உதவுவது பாம்புக்கு பால்வார்ப்பதற்கு சமம். சமயம் பார்த்து நம்மளையே கொல்ல வரும்.............

இன்றில் இருந்து செயல்பட துவங்குங்கள், நம்மால் முடியாதது இல்லை. இது ஒரு வகையில் சுதேசி இயக்கப்போராட்டமாக நாம் செயல்படுத்த துவங்க வேண்டும்.

பீட்டாவை ஆதரித்தால் உங்களுக்கு சொர்கமே கிடைக்கும் என்று சொன்னால் கூட அதற்கு நான் நரகத்திற்கே போகிறேன் கூட வரியான்னு கேளுங்கள்.......

0 comments: