Friday, December 30, 2016

இந்துவும் இரத்தமும் Bloodம் மற்றும் இயக்குனர் பாலாவும்

தமிழ் சினிமா 2016: நம்பிக்கை தகர்த்த ஐவர்! என்று தமிழிலும்

The Revenant: a pure, visceral experience என்று ஆங்கிலத்திலும் இந்து இதழ் செய்திகளை வெளியிட்டு இருக்கிறது.

இதோ முதலில் ஆங்கில செய்திகளை இங்கே எடுத்து வைப்போம் பிறகு காணாமலும் போகலாம்.

This is a Man vs Wild survival drama, a revenge saga and an existential journey, besides its artistic politicking. And at times, you feel it is too much to meld into a coherent film. Viewers looking for an overall emotional impact may be disappointed. It works not so much as a movie with a message but as a pure, visceral experience.

DiCaprio’s daredevilry as an actor and the extreme conditions with which the film has been made has made The Revenant this year’s biggest Oscar special movie event. That may have irked the inner cynics within fans of Inarritu, who is somewhat an iconoclast. But these scenes really are groundbreaking, each beat and nuance executed with supreme cinematic control – the scene where Glass escapes from the French and falls off a cliff with his horse is a heart-stopper.

அப்படியே இந்த ஆங்கிலப்படத்தை பற்றி என்ன அருமை ஆகா ஓகோ அப்படி இருக்கிறது இப்படி இருக்கிறது என்று எழுதி இருக்கிறது இந்து. முழுவதையும் படிக்க அந்த தளத்தில் சென்று வாசித்துக்கொள்ளுங்கள்.

இதே இந்து தமிழில் என்ன எழுதி இருக்கிறது பாருங்கள்....

பாலா 
 
'சேது' படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தவர். ஆனால், 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் விரும்பிப் பார்த்தவர்களைக் கூட திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு செய்துவிட்டார். ரத்தம் தெறித்தல், குரல்வளை நெறித்தல், வினோதமான பழிவாங்கும் படலம்தான் பாலாவின் படம் என்று காலப்போக்கில் மாறிப்போனது. தாரை தப்பட்டை, கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையை உண்மையும் உருக்கமுமாக சொல்வார் என நம்பி தியேட்டருக்குள் போனால் இந்த முறையும் ரசிகர்களின் குரல்வளையைக் கடித்து துப்பிதான் பாலா அனுப்பினார். 

கதைக்கோ திரைக்கதைக்கோ தேவை இருக்கிறதோ இல்லையோ அதைக் காட்டிலும் அதிகமான குரூரம், வன்முறை, குரோதம் போன்றவற்றை வெளிப்படுத்தித்தான் மனித நேயத்தை உணரவைக்க வேண்டும் என்பதில் பாலா உறுதியாக இருப்பது எதனால் என்பதை இன்னமும் ரசிகர்களால் புரிந்துகொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை.

'தாரை தப்பட்டை' பாலாவுக்கு ஏழாவது படம். ஆனால், எண்ணிக்கையை மனதில் கொள்ளாமல் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆளுமையாக பாலாவை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அனுராக் காஷ்யப், ராஜ்குமார் ஹிரானி முதலான இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் கண்டு வியக்கிறார்கள். அப்படிப்பட்ட முக்கிய சினிமா படைப்பாளி காட்சிப்படுத்துதலில் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு.

ரிவரண்ட் படம் ஆசுகர் படம் என்றதால் அனேக மக்கள் பார்த்திருக்க வாய்பு இருக்கிறது.

அந்த படம் துவங்வது துப்பாக்கி சூடில் தான், அந்த முதல் தோட்டாவில் இருந்து கடைசியில் கத்தியில் குத்தி குதறி ஆற்றில் வீசி பிறது அவனை இன்னும் ஒருவன் பிடித்து அவனது பாணியில் கழுத்தை அறுத்து நீரில் முக்கி இறக்க வைக்கும் காட்சியில் முடிகின்றது.

வெள்ளை பனி தரையில் தாரை தாரையாக சிவப்பு இரத்தம் அந்த கடைசி காட்சியில். கொட்டவனின் விரலை வெட்டிவதில் ஊற்ற தொடங்கும் இரத்தம் கடைசியில் ஓடும் குளிர் நீரில் முழுவதுமாக கழுவி முடிவதில் முடிகின்றது அந்த இரத்த கறைகள்.

ஓடும் குதிரையோடு ஒரு 100 அடியில் விழுவான் நாயகன் இருவரும் விழுந்து நிலைகுலைவதை மலையின் மேல் காற்றில் பறந்து காட்டுவார்கள் அதை தான் இந்து ஆங்கிலத்தில் இப்படி குறிப்பிடுகிறது.

"The Revenant is a very visual film, a technical marvel and a feast to the senses. Inarritu’s long-time collaborator, Lubezki has always brought out the holistic, spiritual soul of his films. Here he meditates on the wilderness, filming in natural light in magic hours and giving us some of the most stunning images we have seen in the movies in the recent past."

அப்படி மலையில் இருந்து விழுந்த குதிரையை கிழித்து உடலில் இருக்கும் பகுதிகளை நீக்கி விட்டு அதில் பதுங்கி உறங்கி உயிர் தப்பிப்பது என்று எக்கச்சக்க இரத்த சமாச்சாரங்கள் நிறைந்த படம் தான் இந்த ரிவரண்ட்.

அப்போ ஆங்கிலத்தில் Blood வந்தால்  very visual film, and giving us some of the most stunning images we have seen in the movies in the recent past.

தமிழில் இரத்தம் வந்தால்  "கதைக்கோ திரைக்கதைக்கோ தேவை இருக்கிறதோ இல்லையோ அதைக் காட்டிலும் அதிகமான குரூரம், வன்முறை, குரோதம் போன்றவற்றை வெளிப்படுத்தித்தான் மனித நேயத்தை உணரவைக்க வேண்டும்"

என்னையா நீங்களும் உங்கள் ஞாயமும்.

தற்பொழுது உலகத்தில் நல்லவர்களுக்கு ஒரு விளக்கம் சொல்கிறார்கள் இப்படி

ஏங்க அவன் தான் அப்படின்னு உங்களுக்கு தெரியும், ஆனால் நீங்க நல்லவங்களாச்சே இப்படி எல்லாம் பேசவோ செய்யவோ மாட்டீங்களே. போனா போகுது விட்டு கொடுத்துடுங்க......

தனக்கு ஞாயமாக கிடைக்க வேண்டிய எல்லாத்தையும் கெட்டவர்கள் தன்னிடம் இருத்து பிடுங்கும் போது உங்களுக்கு உலகம் சொல்லும் நீதி இது.

அதை தான் இந்துவும் கடைபிடிக்கிறது போலும்.

ரிவரண்டைவிட தாரை தப்பட்டையில் வன்முறை மிகக்கம்மி. ஒரு மூலையில் கோழியை முடக்குங்கள் அதுவரை ஓடிய கோழி நம்மீது பாயும், கோழிக்கே அப்படி என்றால் மனிதனுக்கு எப்படி இருக்கும்.

அதுவும் தான் காதலித்த பெண் நல்லா இருக்கட்டும் என்று விட்டுக்கொடுக்க வைக்கப்பட்ட பெண், அவளாது நல்லா இருக்கட்டுமே என்று அனுபியவளை இப்படி காசுக்காக கசாப்பு செஞ்சதை பார்த்துக்கொண்டு எந்த ஆண் சும்மா இருப்பான் என்று இந்து இதழ் தான் விளக்க வேண்டும்.

அது மட்டும் இல்லை ஏன் இந்த இரத்த வாடையை பற்றி ரிவரண்ட் பட விமர்சனத்தில் ஒரு வரிக்கூட எழுதவில்லை என்றதையும் விளக்கினால் நாம் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

0 comments: