Saturday, December 10, 2016

நல்ல வேளை மோடிக்கு கல்யாணம் குடும்பம்னு ஆகுல

பொதுவா குடிகார தந்தையையும் ஊதாரி கவணனை குடும்பத்தில் ஒருவனுக்கும் பிடிக்காது. காரணம் அவன் குடிக்கிறான் என்றோ அல்லது ஊதாரியாக திரிகின்றானோ என்றோ அல்ல.

பிறகு ஏன் இவ்வளவு கெட்ட பெயர் அவனுக்கு

வீட்டுக்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போடாத அந்த மனிதன் போதையில் ஆட வீட்டில் இருக்கும் நண்டு சுண்டு வரை களை வெட்டி காசு கொண்டு வந்து கொடுத்தால் அந்த காசிலே குடித்துவிட்டு திங்க அத கொண்டு வா இந்த கொண்டு வான்னு ஆடுவானுக. அதனால் தான் யாருக்கும் பிடிக்காது.

சுருங்க சொன்னா கணவன் என்ற ஒரே காரணத்திற்காக அவனது உல்லாச வாழ்வுக்கு குடும்பத்தையே பலி கொடுக்கும் இயல்பை கொண்டவர்கள் அவர்கள்

இவனுக்கு வாக்க பட்ட பெண்களிடம் கேளுங்கள் எல்லாம் விதி, பெத்தவங்க இந்த சனியனை என் தலையில கட்டிட்டுடாங்க என்ன செய்யுரது விதியேன்னு வாழறேன் சொல்லுவாங்க

ஒரு வேளை மோடிக்கு குடும்பம் குழந்தைகள் என்று இருந்து இருந்தா இப்படி தான் இரவும் பகலும் நாட்டுகாக என்று சொல்லி வெய்யிலிலும் மழையிலும் சோறு தண்ணியில்லாம் சாகடித்து இருப்பார் நம்மை எல்லாம் சாகடிப்பது போல்.

தப்பிச்சுது ஒரு குடும்பம் ஆனா நாம் தான் நல்லா மாட்டிகிட்டோம்......

15 இலட்ச ரூபாய் கிடைக்கும் என்று சொன்னதும் ஆப்பசைத்த குரங்கின் கதையா இல்ல ஆகிப்போச்சு நம்ம நிலைமை


1 comments:

')) said...

குடிகார கணவர்கள் தான் பெசப்டுகிரர்கள்