Wednesday, December 7, 2016

அதிமுக மொத்தமாக பாசகவிற்கு விற்கப்படுவிட்டது

தமிழகத்தில் அதிமுக தோற்றமும் அவசியமும் இன்றைக்கு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில். அடுத்த தலைவர் யார் என்ற விவாதம் கூட எழாத நேரத்தில் பன்னீர் அடுத்த முதல்வராக பதவி ஏற்பதும் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்று அழக்காக காட்டுகின்றது.

 நாங்கள் நினைப்பது தான் நடக்க வேண்டும் என்று அதிமுகவை மறைமுகமாக இயக்கிய கூட்டத்திற்கு இனி எந்த முகமுடியும் தேவை இருக்காது. மாறாக பாசகவாகவே இனி வலம் வருவார்கள்.

அது மட்டும் இல்லை அதிமுகவை மெல்ல பாசகவில் கரைத்து பாசகவும் அதிமுகவும் இரட்டை இலையும் ஒன்று தான் என்று நிறுவார்கள்.

சரி அதிமுகவை எப்படி முழுவதுமாக விலை பேசி விற்கமுடியும். யார் விற்று இருப்பார்கள் எவ்வளவிற்கு விற்று இருப்பார்கள்.

இனி அதிமுகன்னோ அல்லது செயலலிதா அப்படி இப்படி சொல்லிக்கொண்டு கட்சி இனி எந்த செயலையும் செய்யக்கூடாது.

உடல் நிலையை காரணம் காட்டி முதல் கட்ட தலைவர்கள் எல்லாம் ஒதுங்குவார்கள் இல்லை பாசகவில் இணைவார்கள்

பிறகு ஒரு 3 முதல் 6 மாத காலத்தில் ஒத்துவராதவர்கள் எல்லாம் ஊழல் அடிப்படையில் சிறையில் அடைத்த பிறகு இன்று இரவு முதல் தமிழக அரசு செல்லாது என்ற அறிவிப்பு வரும். காரணம் கேட்டல் சட்டம் ஒழுங்கு சரி இல்லை, ஏழைகளால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்று சொல்வார்கள்

பிறகு அதே MGR பெயரிலும் செயலலிதா பெயரிலும் பாசக ஓட்டு கேட்கும் ஆட்சியை பிடிக்கும்

ஒத்து வருபவர்களின் கருப்பு பணம் வெள்ளையாக மாற்றிக்கொடுக்கப்படும், மாட்டேன் என்கிறவர்கள் கருப்பாடுகளாக கருப்பு பண முதலைகளாகவும் திகாரில் அடைக்கப்படுவோர்.

சில ஆயிரம் வைத்து இருக்கும் தொடண்டன் முதல் பல கோடி வைத்து இருக்கும் அமைச்சர்கள் வரை இந்த பேரத்திற்கு படியாத ஆளே இல்லை

அம்மையாரின் மறைவு தமிழகத்தை அழிவு பாதையை நோக்கி திருப்பி விட்டதே ஐயோ பாவம் தமிழகம்.

இனி நாள்தோரும் தாத்ரி பாணியில் மக்கள் தெருக்களில் அடித்து கொல்லப்படுவார்களே கடவுளே யார் காப்பாற்றுவார்கள் இனி தமிழகத்தை

0 comments: