Wednesday, December 21, 2016

இந்திய மக்களே இனி அமெரிக்க டாலருக்கு மாறுங்கள் இந்திய பணத்தில் பரிவர்த்தனைகள் வேண்டாம்

இந்திய மக்களே இனி அமெரிக்க டாலருக்கு மாறுங்கள் இந்திய பணத்தில் பரிவர்த்தனைகள் வேண்டாம்.

உலகில் பொருட்செல்வத்தில் மிகவும் பலவீனமாக உள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள் பொதுவாக தெருக்களில் விற்கும் பொருட்களை கூட அமெரிக்க டாலருக்கு தான் விற்பார்கள்.

அது மட்டும் இல்லாது இன்றைக்கு இரவு 9:00க்கு மேல் இந்த நோட்டுகள் எல்லாம் செல்லாது என்று அமெரிக்க அறிவித்ததும் இல்லை அறிவிக்க போவதும் இல்லை.

ஆக இந்திய மக்கள் அனைவரும் இனி வங்கிகளில் அமெரிக்க டாலரில் சேமிக்கவும், கையில் செலவுக்கு அமெரிக்க டாலரையே எடுத்து செல்வதும் தான் பாதுகாப்பு.

இப்படி அமெரிக்க டாலரில் வியாபாரம் செய்வது சாத்தியமா என்று நீங்கள் கேட்கலாம்.

இன்று இந்தியாவில் விற்கும் பொருட்கள் அனைத்துமே அமெரிக்க டாலரின் விலையில் எவ்வளவு விற்கிறார்களோ அதே விலைக்கு தான் விற்கிறார்கள் இந்தியாவிலும். ஆக விலையில் ஒன்று கூட குறைய கொடுக்க போவது இல்லை.

என்ன ஒவ்வொரு முறையும் ரூபாயில் இருந்து அமெரிக்க டாலருக்கு மாற்றும் போதும் மாற்ற கட்டணம் வசூலிப்பார்கள்.

ஒரு கட்டத்தில் அனைத்து மக்களும் அமெரிக்க டாலரே கொடுத்து அமெரிக்க டாலரை வாங்கும் நிலை வந்ததும் அதற்கு அப்பால் மாற்று கட்டணம் கட்ட தேவை இருக்காது (கையில் இருக்கும் உங்கள் பணத்தை இப்போது எடுக்க முடியாது என்று இந்த அரசு சொல்லாம் ஆனால் பிறகு நாளைக்கு எடுக்கவே முடியாது என்று கூட வந்து தண்ணிச்சையாக சொல்லாம்).

காவிகளின் கோமாளி தனத்தால் நாம் ஏன் பலியாக வேண்டும், ஆகவே நம்பிக்கையான வங்கிகளில் எங்களுக்கு அமெரிக்க டாலர் வேண்டும் என்று சொல்லுங்கள். 1,5,10,20 அமெரிக்க டாலர்களாக மாற்றிக்கொள்ளுங்கள்.

பிறகு அனேக இடங்களில் 1 அமெரிக்க டாலர் தாள்களே போதுமானதாக இருக்கும். மற்ற இடங்களில் தேவைக்கு ஏற்ப 5 அல்லது 10 முதல் 20 அமெரிக்க டாலர்களை பயன் படுத்தலாம்.

அமெரிக்க டாலர்களில் இந்திய பணத்தை மாற்றி கொடுக்க கட்டுப்பாடு உள்ளது. இருந்தாலும் இப்போது இருக்கும் நிலையில் இந்திய பணம் பெறுவதை விட எளிதாக அமெரிக்க டாலரை பெறமுடியும். ஆகவே உங்களுக்கு தெரிந்த நன்கு அறிந்த மக்களை கொண்டு இந்த மாற்றங்களை செய்யுங்கள்.

இனி மிச்சம் இருக்கும் பாசக அரசு காலம் வரை அமெரிக்க டாலரிலே பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள்.

இந்த பதிவை பார்த்ததும் காவிக்கூட்டம் நாட்டு துரோகம் என்று ஆரம்பிப்பார்கள், அவர்களுக்கும் உங்களுக்கும் ஒன்று சொல்லிக்கொள்கின்றேன். இன்றைக்கு அமெரிக்காவுடன் மென் பொருளிலும் மற்ற வர்த்தகத்திலும் ஈடுபடும் அனைத்து பெரு நிறுவனங்களும் அமெரிக்க டாலரில் தான் பரிவர்த்தனைகள் செய்கின்றது. ஆக நீங்களும் இனி பெரு நிறுவனங்களை போல் அமெரிக்க டாலரில் பரிவர்த்தனை செய்யுங்கள்.

அமெரிக்க டாலரை ஈட்டி தருவதனால் அந்த பெரு நிறுவனங்களுக்கு நிறைய சலுகைகள் உண்டு. வருமான வரியிலும் அப்படி தான், நீங்களும் அமெரிக்க டாலரில் பர்வர்த்தனைகள் செய்வதால் நாளை மோடி அரசு உங்களுக்கு வருமான வரி சலுகைகள்  கூட அளிக்கலாம். இல்லை எப்போதும் போல் இளிச்சவாயன் நடுத்தரவர்க்கம் ஆனதால் ஏதோ ஒரு காரணத்தால் உங்களது அமெரிக்க டாலரும் கூட எதற்கும் தகுதி இல்லாத பணமாக கூட அவர் அறிவிக்கலாம்.

எது எப்படி போனாலும் உங்களிடம் இருக்க போகும் அமெரிக்க டாலர் செல்லாது என்று சொல்லவோ அவைகளை மாற்றமுடியாமல் புது நோட்டு இல்லை பழைய நோட்டு என்று சொல்லவோ மோடி அரசால் முடியாது. ஆக அமெரிக்க டாலராக உங்க இந்திய பணத்தை மாற்றுங்கள். இனி அமெரிக்க டாலரிலேயே பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள்.

சிறு பிள்ளை தனமாக மோடி தரமாட்டேன் போ என்று சொல்வதற்கு பெரிய மனித தனமாக வேண்டாம் நீயே வச்சுகோ என்று திருப்பி சொல்லுங்கள்.......

அரசு உங்கள் மேல் திணித்து இருக்கும் அரசபயங்கரவாதத்தை அவர்களுக்கே திருப்பி கொடுங்கள்.

ஏடியமிலும் இந்திய வங்கிகளின் வாசலிலும் நிற்பதை நிறுத்துவிட்டு அமெரிக்க டாலர் கிடைக்கு இடங்களுக்கு சென்று கேளுங்கள், இன்றைக்கு நோட்டு இல்லை என்றால் நாளையே கிடைக்க மின்னல் வேகத்தில் அமெரிக்க டாலரை கொண்டு வந்து இறக்கும் அமெரிக்க அரசு. அமெரிக்க அரசு டாலரை இந்தியாவில் இறக்க கூடாது என்று சொல்ல மோடிக்கு திராணி இல்லை என்றது வெளிப்படை.

0 comments: