Monday, November 5, 2012

3 ஆண்டுகள் கடந்து இன்னமும் மூக்கு சிந்தும் சிங்களம் - அசிங்க அரசியல்

ஐ நா மனித உரிமை குழு சிங்களத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றியதா அல்லது கள்ள வாக்குறுதிகளாவே இன்னமும் இருக்கிறதா என்று அதிகார பூர்வமாக விசாரிக்க வருகிறது என்று வந்த செய்திகளில் இருந்து இன்று வரை இப்படி செய்திகள் கசிந்த வண்ணம் இருக்கிறது.

புயலுக்கு பிறகு மிக கொடிய ஆயுதங்களை கண்டுபிடித்தோம், அது சீனாவில் இருந்து கொண்டுவர பட்டுள்ளது. அது எந்த நாடு புலிகளுக்கு வழங்கி இருக்கும் என்ற ஆருடம்.......

இதிலே இன்னனும் ஒரு தளம் புலிகள் கையாண்ட தந்திரம் என்ற தலைபில் ஒரு தொடர்.....

இந்தியாவில் இருக்கும் சிங்கள கைகூலிகள் முக்கியமான படக்காட்சிகளை மறைத்தார் ஏன் எப்படி என்று தினசரிகளில் செய்திகள் வரும்படி செய்கிறார்கள்.....

ஆக மொத்தத்தில் புலிகளின் பெயரை சொல்லி பிச்சை எடுப்பதை சிங்களம் இன்னமும் நிறுத்தவில்லை. அதிலே சல்லடையாக தேடிய போது கிடைக்காத ஆயுதங்கள் புயலில் தானாக வெளியில் வந்து உட்கார்ந்துகொண்டதாம். அப்போ சிங்களம் என்ன மாவுசலிக்கும் சல்லடையை கொண்டு தேடினார்களா இல்லை வீடு சலிக்கும் சல்லடையை கொண்டு தேடினார்களா.....

மீதம் இருக்கும் மக்களை எப்படி எல்லாம் சித்திரவதை செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்து இந்த நூற்றாண்டின் இணையில்லா கொடுமைகளுக்கான புத்தகங்களை எழுதிக்கொண்டு இருக்கும் சிங்கள வெறியின் ஈன செயல் அல்லவா இந்த செய்திகள்.

இதோடு நிறுத்தினார்கள், நல்லவேளையாக புலிகளை இங்கே பார்த்தோம் அங்கே பார்த்தோம் என்று சொல்லிக்கொண்டு ஆப்ரிகா அண்டார்டிக்க என்று காவடி தூக்கிக்கொண்டு போகாமல் இருக்கிறார்களே..............

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தான் நீதி கேட்டு மக்கள் நிற்கும் போது, உலகில் இருக்கும் விதவிதமான காரணங்களை எல்லாம் சொல்லி உயிர் போகும் நேரத்தில் காப்பாற்றுகிறேன் என்று வந்து தலையில் இருக்கும் தொப்பியை கழட்டிவிட்டு மௌனமான ஒரு அஞ்சலியுடன் செல்வார்கள் ஆட்சியர்கள், காவல் துறையினர் எல்லோரும்.

ஆனால் ஐ நாவோ உலகில் மிகவும் முன்னேறிய நாடுகளின் வழிக்காட்டுதலில் நடக்கும் அமைப்பு எப்படி இப்படி செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு கொடுத்ததை போல் சிங்களம் சம்பந்தபட்ட காரியாங்களில் செயலாற்றுகிறது என்று புரிய இல்லை.

இவ்வளவு நடந்த பிறகும் சிங்களத்தின் கைகளிலே மக்களின் விதியை கொடுத்துவிட்டு ஒன்றும் செய்யக்கூடாது என்ன என்று செல்லமாக் சொல்லி 3 ஆண்டுகள் கழித்து வந்து தான் பார்பேன், அது வரைக்கு யார் வந்து சொன்னாலும் அவைகள் எங்களின் காதுகளில் கூட விழாது என்று எப்படி இந்த அமைப்பால் இருக்க முடிகின்றது................

கொடுமை நடக்கிறது என்ற வதந்தி வந்தாலே ஓடிச்சென்று ஐ நாவின் படைகளை நிறுத்தி, நீங்கள் இங்கே வரக்கூடாது, அவர்களும் இங்கே வர மாட்டார்கள் எல்லாம் பேசி முடித்துக்கொள்வோம் என்று சொல்வார்களா இல்லை 3 ஆண்டுகள் கழித்து வந்து பார்ப்போம் என்று சொல்லி செல்வார்களா.......

ஒரு வேளை சிங்களத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் நிறைய பணமும் வெளி நாடுகளில் முதலீடு செய்ய நிறைய முதலீடும், அவர்கள் வாழும் நிலத்தில் பெற்றோலியமும் இருந்து இருந்தால் அமெரிக்கா முதல் ஆப்ரிக்கா வரை முக நூலில் மூச்சுக்கு 300 பதில்கள் பெறுவதை போல் முற்றுகை இட்டு இருப்பார்கள் போலும்.

மனிதனுக்கு இரக்கம் கூட இனத்தையும், நிறத்தையும், பணத்தையும் பார்த்துதான் வரும் போலும். ஆலோசனைகளும் அறிவுரைகளும் அடுத்தவர்களுக்கு தான் போலும், எந்த நாடும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது உலகம்.

0 comments: