Wednesday, February 20, 2019

இந்தியாவின் யார் அடுத்த பிரதமராக போவது யார்

வருன்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த பிரதமராக போவது யார் என்ற போட்டி சங்க பரிவாரம் துவங்கி வைத்ததில் இருந்து இன்று வரை மோடியா யோகியா இல்லை நிதின் கட்காரியா என்று எந்த வித பாரபட்சமும் இன்றி செய்திகள் அடிபடுகின்றது. அத்தோடு மட்டும் நில்லாது, பாசகவிற்கு கொடி பிடிக்கும் சிறீ இரவிசங்கர பிரசாத்து, பாபா இராம் தேவ்வு போன்ற கட்சியை தாண்டிய ஆதரவு தரும் மக்கள் எல்லாம் பதுங்கி 3 மாதங்களுக்கு மேல் ஆகுகின்றது.

தெள்ள தெளிவாக மோடிக்கு பாசகவுக்குள்ளேயும் வெளியேவும் ஆதரவு இல்லை, அது மட்டும் இல்லாது மூச்சுக்கு முன் நூறு முறை ஏழை தாயின் டீ வித்த பிள்ளை நான் ஒரு நாள் உணவுக்குக்கே வெறும் ரூபாய் 10,000 மட்டுமே தான் செலவு செய்யும் ஏழை மகன் என்று சொல்வதும். தினமும் வெறும் 35 இலட்சத்தில் உடைகளும் வெறும் ரூபாய் 10,000 க்கு மேக்கப்பும் சிகையலங்காரமும் என்று எளிமையாக வாழும் எழை தவப்புதல்வன் என்று உளரும் உளரல்களை பொறுக்க மாட்டாமல் பாசவின் கட்சிக்குள்ளேயே இப்படி எல்லாம் பேசாதீங்க என்று செல்லமாக கண்டித்தும் மோடி திருந்துவதாக இல்லை.

மோடி எப்போதாவது வாய் தவறி உண்மை பேசுவதும், மற்றி சொல்வதெல்லாம் பொய் பொய்யை தவிர வேறு எதுவும் இல்லை என்று கட்டியம் கட்டும் அளவிற்கு அளந்து விடும் மோடியை இனி தமிழக பாசக கூட மதிக்க தயாராக இல்லாத சூழலில் தான், மோடியை தமிழகத்திற்கு கூட்டி வந்து வச்சு செஞ்சு அனுப்புகிறார்கள். இதிலே நல்லாக மீண்டும் மோடி வேண்டும் மோடி என்று கொஞ்சம் கூட மரியாதையே இல்லாமல் மேடையிலேயே மோடியை வைத்துக்கொண்டு தமிழிசை ஒரு மையில் விளிப்பது குமட்டலாக இருந்தாலும் இன்று வரை தமிழை தொடரும் இந்த பகிடியை கூட புரிந்துகொள்ள முடியா மோடி பரிதாபமாய் மலுங்க மலுங்க விழிதித்து கொண்டு மேடையில் மொழி புரியாமல் அமர்ந்து இருப்பதையும் காண முடிகின்றது.

ஆக பாசகவிற்குள்ளும் சரி வெளியிலும் சரி மோடியை ஆதரிக்க தமிழகம் உட்பட யாரும் இல்லை. அப்படி இருக்கும் நிலையில் அடுத்த பிரதமராக வர யாருக்கு வாய்பு இருக்கிறது என்று பார்த்தால். வடக்கில் நான் நீ என்று மோடியோடு போட்டி போட்டாலும் வாய்ப்பு என்னவோ தமிழகத்தில் உள்ளவருக்கு தான்.

எந்த வித நிலைகள் வந்தாலும் சமாளிக்கும் அறிவாளி செயல் வீரர் மக்களை மட்டுமே மனதில் நினைத்து ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் சமூக போராளி பழனிசாமி தான் அந்த நபர்.

பழனிசாமியுடம் போட்டி போட தகுதியுள்ள ஒரே ஆள் அன்புமணி இராமதாசு மட்டுமே, காரணம் அன்புமணியும் மக்களையும் மக்களின் மாற்றத்தையும் மக்களின் முன்னேற்றமும் மட்டுமே தனது இலட்சியமாக கொண்டவர். எந்த வித சுயனலமோ சுயலாபமோ பார்க்காமல் மக்கள் மக்கள் மக்கள் என்று மட்டும் எப்பவுமோ சிந்திக்கும் மக்கள் நலவாதியான அன்புமணி இராமதாசும் தான் தகுதியானவர்.

ஆகவே தான் இந்த இருவரும் பாசகவுடன் சேர்ந்து பாசக ஆட்சி அமைக்க தேவையான நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இருட்டு பெற்று பிரதமராகவும் துணைபிரதமராகவும் ஆக உள்ளார்கள்.

இந்த கூட்டணி தான் மக்கள் நல கூட்டணி, மற்ற கூட்டணி எல்லாம் ஏழை மக்களுக்கு மருந்து தயாரிக்கும் அரசு மருந்து தொழிற்சாலைகளை மூடியும் செயற்கை மருந்து தட்டுபாடுகளை உருவாக்கி அமெரிக்க மற்றும் ஐரோப்பா மருந்து நிறுவனங்களில் இருந்து 10 ரூபாய்கு வாங்கின அதே பராசிட்டமால் மாத்திரையை 100 வாங்க வைப்பார்கள். சென்ற முறை அன்புமணி இருந்த அரசு மருந்து ஆலைகளை மூடி ஏழைக்களுக்கு உதவி புரிந்தது போல் இந்த முறை மத்திய அமைச்சரானால் இருக்கும் எல்லா அரசு மருத்துவமனைகளை எல்லாம் மூடி தனியார் மருந்துவமனையில் அமெரிக்க ஐரோப்பிய மருத்து காப்பிடில் இராசவைத்தியம் வாங்கி தருவதாகி சொல்லி ஏமாற்றவே மாட்டார் நம்புங்கள் மக்களே. மாற்றம்......முன்னேற்றம்.........

0 comments: