Monday, February 18, 2019

அமெரிக்காவுக்கு தெரிந்த 350கி வெடிகுண்டு இந்தியாவுக்கு தெரியாமல் போனது எப்படி

காசுமீரத்தில் வெடிக்க உள்ள 350கிலோ வெடிகுண்டு பற்றி துல்லியமா ஒரு வாராத்திற்கு முன்னே அமெரிக்காவும் இசுரேலும் செய்திகளை வெளியிட்டு பொது மக்களுக்கு தெரியும் படியே எச்சரிக்குது. ஆனால் அணுகுண்டை அமெரிக்க செயற்கை கோளுக்கு தெரியாமல் அதிபுத்திசாலி தனமாக கண்ணில் மண்ணை தூவி வெடித்தாக புனைந்து புனைந்து படம எடுத்துவிட்ட இந்தியாவுக்கோ, இந்தியாவின் எல்லைக்குள் அதுவும் அதி தீவிர கண்காணிப்பில் உள்ள ஒரு இராணுவ முக்கியம் வாய்ந்த இடத்தில் 350கிலோ வெடிகுண்டு வருவதை பற்றியோ அல்லது இராணுவ அணிவகுப்பில் தாக்குதல் நடக்கும் என்றோ தெரியவில்லையாம்.

சரி தெரியாமலே போச்சுன்னுனே வச்சிக்கிட்டா கூட, அமெரிக்காவும் இசுரேலும் எச்சரித்த பின்னர் என்ன என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்றாவது இது வரை சொன்னார்களா. இல்லை மாறாக அண்டை நாட்டின் மீது பழியை போட்டு அவசர அவசரமாக போருக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறது மோடி அரசு.

350கிலோ வெடிகுண்டை பெட்டிக்கடையில் அந்த தீவிரவாதி ஆதார் அட்டையை கான்பித்து வாங்கி வந்தது மட்டும் தெரியாதாம் ஆனால் அது அண்டை நாட்டின் தீவிரவாதிகள் தான் கொண்டு வந்ததும் வெடித்ததும் என்று மட்டும் உறுதியாக தெரியுமாம். ஏன் என்றால் அந்த தீவிரவாதி அந்த அண்டை நாட்டின் ஒப்பந்த படிவத்தை கையில் வைத்து இருந்ததை ஆதாரமாக மோடி அரசு கைப்பற்றி நிரூபித்து தான் இந்த போர் நடவடிக்கைக்கு போகின்றது என்று நம்புங்கள் மக்கா நம்புங்கோ.....

0 comments: