Saturday, February 16, 2019

பாசக காசுமீரில் வெடித்த 360கி வெடிகுண்டு நாடு முழுதும் வெடிக்கிறது

பணமதிபிழப்பு நடவடிக்கையின் மூலம் தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது. டீக்கடையில் டீ வாங்குவதில் இருந்து உரம் வாங்குவது வரை ஆதார் அட்டை இல்லாமல் எதுவும் வாங்க முடியாது விற்கமுடியாது. எந்தெந்த பொருள் விற்றாலும் மறைக்காமல் இருக்க ஜிஎஸ்டி வரிவிதிப்பு கொண்டு வந்து கள்ள சந்தையே இல்லை. துல்லிய தாக்குதல் மூலம் எல்லையில் இருக்கும் தீவிரவாத மூகாம்கள் எல்லாம் அழித்தாகிவிட்டாச்சு. இப்படி நாட்டை தீவிரவாதத்தில் இருந்து காக்கும் பணியை கடந்த 5 ஆண்டுகளாக செய்து கடமையாற்றி அடுத்த தேர்தலில் அந்த ஒரு காரணத்திற்காகவே தேர்ந்து எடுக்கனும் என்று தேர்தல் பிரச்சாரங்களில் நாடு முழுதும் பேசி வருகிறது பாசக.

பாசகவின் பேச்சுகள் எல்லாம் உண்மை என்று எடுத்துக்கொண்டால் இந்த 350கிலோ வெடி பொருள் ஒன்று இராணுவத்திடம் இருக்கும் இல்லை அரசிடம் இருக்கும். 44 படை வீரர்களை இராணுவமே குண்டு வைத்து கொன்று இருக்குமா என்றால் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதை விட அதிக வாய்ப்பு அரசுக்கு தான் இருக்கிறது.

காரணம் மோடி கோத்ராவில் தனது சொந்த மக்களையே இரயிலில் வைத்து கொளுத்திவிட்டு மற்றவர்கள் செய்தார்கள் என்று கதைகட்டி ஒரு இலட்சத்தி 30 ஆயிரம் மக்களை 6 நாட்களில் வேட்டையாடி கொன்றுவிட்டு அதை தேசபற்று மற்றும் நிர்வாக திறமை என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்.

அன்றைய இரும்பு மனிதரும் இன்றைய துருபிடித்த(மோடி இவருக்கு சமீபத்தில் கொடுத்த மரியாதையை வைத்து பார்க்கும் போது) மனிதருமான அத்வானி எப்போது எல்லாம் எங்கே பயணிக்கிறாரோ அப்போதெல்லாம் அங்கே அவர் செல்வதற்கு முன்னோ அல்லது சென்று அங்கே இருந்து கிளம்பி ஒரு பாதுகாப்ப்பான தூரத்திற்கு சென்ற பிறகோ அந்த இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும். ஒரு முறை கூட அவர் இருக்கும் போதோ அல்லது சற்று அருகிலோ வெடித்ததே இல்லை.

இதே இரும்பு மனிதர் இன்றும் தான் பயணிக்கிறார் ஆனால் ஒரு தீபாவளி பட்டாசு கூட வெடிப்பதில்லை. அன்றைக்கு என்ன காரணத்திற்காக வெடி வெடிக்கப்பட்டது என்றும் தெரியவில்லை, இன்றைக்கு என்ன அவரிடம் இல்லாமல் போய்விட்டது பேசாமல் இருந்து விடுகிறார்கள் என்று புரியவில்லை. கூட்டி கழித்து பார்த்தால், அது பாசகவின் உள்ளடி வேளை என்று தெள்ளத்தெளிவாக தெரிகின்றது.

புதன்கிழமை இந்த ஆட்சியின் கடைசி பாராளுமன்ற கூட்டம் முடிந்து அடுத்த தேர்தலுக்கு பிரச்சாரத்திற்கு தயாராகுகிறார்கள் இந்த 350கிலோ வெடிகுண்டை வெடித்து துவங்கி வைத்துள்ளார்கள்.

இன்றைய செய்திகளில் இராணுவம் தனது துப்பாக்கியை எடுத்து திருப்பி சுடலாம் என்று மோடி அனுமதி கொடுத்துள்ளதாக சிறுபிள்ளை தனமான தலைப்புகளை தந்தி செய்திகளில் பார்க்கமுடிகின்றது.

இனி பாசக ஆளாத மாநிலங்களில் தீவிரவாதத்தின் பெயரில் பாசகவின் 350கிலோ குண்டுகள் பரவலாக வெடிக்க துவங்கும். யார் யார் எல்லாம் கொல்லப்படபோகிறார்கள் என்று கவலையாக இருக்கிறது.

2 comments:

')) said...

நீங்கள் சொல்வதை மறுக்க இயலாது. அனைத்து கட்சிகளையும் எதிர்த்து பேச இயலாதவாறு எல்லாவற்றையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார்கள். காங்கிரஸ் வேடிக்கை பார்க்கிறது. இன்னும் பல கொடூரங்கள் நிகழலாம். பாசிஸ்டுகளுக்கு இது கைவந்த கலை.உளவுத்துறை எச்சரிக்கை என்பதே ஒரு சமிக்ஞையாகவும் இருக்கலாம்

Anonymous said...

எப்படி இது போன்ற conspiracy theory எல்லாம் உண்மை போலவே எழுதுகிறீர்கள்? உண்மையாகவே இதையெல்லாம் நம்புகிறீர்கள் என நினைக்கிறேன்!