Tuesday, February 19, 2019

போர் வந்தால் இந்தியா தோற்று போவது உறுதி - பாசக

இபோது இருக்கின்ற நிலையில் எல்லையில் பொக்ரானில் பாசக அரசு எவ்வளவு தான் படம் காட்டினாலும் நாளை போர் என்று வந்தால் தோற்கபோவது உறுதி.

இதை பாசகவே பலமுறை தெரிவித்து இருக்கிறது, இந்தியாவின் விமானப்படை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் அதை பலப்படுத்த காங்கிரசு வெறும் 126 போர் விமானங்களை மட்டுமே வாங்கி மேலும் பலவீனப்பட வைக்க இருந்த நிலையில், நல்ல வேளையாக மோடியின் அரசு பதவிக்கு வந்ததால் 36 விமானங்களை வாங்கி விமானப்படையை உலகிலேயே மிகவும் பலம் வாய்த விமானபடையாக மாற்றிவிட்டோம் என்று இலங்கை சிங்கப்பூர் மலேசியா அசாம் என்று மோடி மேடை தோறும் முழங்கி வந்துள்ளார்.

இந்த 36 இரபேல் விமானங்கள் இல்லை என்றால் நாட்டின் பாதுகாப்பு பலவீனப்பட்டுவிடும் அதனால் வாங்கியே ஆகவேண்டும் என்றும். அப்படி வாங்கவிடாமல் காங்கிரசு தொல்லை கொடுப்பதால் காங்கிரசு ஒரு தேசதுரோக கட்சி என்றும் அதில் இருப்பவர்கள் அனைவரையும் நாட்டைவிட்டு அண்டை நாட்டுக்கே அனுப்பிவிட்டவேண்டும் என்று இது வரை முழங்குகிறார் மோடி.

இப்படி அப்படி என்று எல்லாம் மோடியாலும் இன்னும் பெரிய பெரிய பாசக பிரமுகர்கள் எல்லாம் புகழ்ந்தும் வேண்டியும் விரும்பியும் அம்பானிக்காக தெரு தெருவாக ஆடியும் பாடியும் கதாகாலச்சேபம் செஞ்ச அந்த 36 இரபேல் விமானத்தில் இன்னும் ஒன்று கூட இந்தியாவிற்கு இது வரை வரவில்லை. அப்படியே நாளைக்கு கொண்டு வந்து நிறுத்தினாலும், அம்பானியிடம் அதன் உதிரிபாகங்கள் கட்டும் தொழிற்சாலை உருவாக்கப்படவில்லை. அம்பானி ஆலையை கட்டி, அதற்கு ஆட்களை பிடித்து இன்ன பிர எல்லாம் செய்து உதிரி பாகங்களை தயாரித்து வழங்கிய பிறகு தான் அந்த 36 இரபேல் விமானமும் பறக்க தயாராகும்.

அதற்கு பிறகு தான் அந்த விமானத்தில் போதிய பயிற்சி எல்லாம் எடுத்துக்கொண்டு இந்தியா அந்த 36 இரபேல் விமானத்தின் உதவியுடன் சீனாவையும் பாக்கிட்தானத்தையும் மோடி காலில் உதை பந்து உதைப்பது போல் உதைத்து உதைத்து விரட்டுவார் என்று சொல்லி வரவிருக்கும் 2019 பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு இப்பவே வாக்களியுங்கள் என்று தமிழிசையும் எச்ச சர்மாவும் விழுந்து விழுந்து பிரச்சாரம் செய்கிறார்கள்.

உண்மை நிலமை இப்படி இருக்க எவ்வளவு தான் பொக்ரானில் துல்லியமாக சுட்டு சுட்டு படம காண்பித்தாலும் இலங்கையுடன் போர் வந்தாலும் மோடி தோற்றக்கப்போவது உறுதி. மக்களே சிந்தித்து வாக்களியுங்கள், சீனாவையும் பாக்கிட்தானத்தையும் மோடி காலால் உதைப்பதை பார்கவும், இந்த 2019ல் நடக்க இருக்கும் கிரிக்கட்டு போட்டியில் இந்த அணி பாக்கிட்தானத்தை வெல்லவும் மோடிக்கு வாக்களிக்கவும். இல்லை என்றால் உலகப்போட்டியும் அம்பேல்லாகிவிடும் சொல்லிபுட்டேன்.......

0 comments: