Wednesday, February 13, 2019

10% ஏழைகளுக்கு இந்த 16 ரூபாய் கொடுத்து இருக்கலாமே

ஒரு 16 ரூபாயை கொடுப்பேன் என்று சொல்லி வருன்கின்ற 2019ஆம் தேர்தலில் வாக்குகள் கேட்கிறது பாசக.

மக்களோ அந்த 15 இலட்ச ரூபாயை எங்களுக்கு தந்தது போல் இந்த 16 ரூபாயும் கொடுப்பீங்க போல என்று கேலி பேசும் அளவிற்கு இருக்கும் இந்த நிலையிலும், மோடி, யோகி, அமித்த சா என்று பாசக அவர்களது அணியுனுடன் தமிழகம் வருவது ஏன் என்று தான் புரியவில்லை.

பாமக தமிழகத்தில் ஏற்கனவே சாதி வெறி வெட்டு குத்து என்று பாசக செய்யும் அனைத்தையும் செய்து நாங்கள் தான் அவைகளுக்கு மொத்த குத்துகை என்று இருக்கும் பட்சத்தில் இனக்கலவரம் மதகலவரம் என்றும் கூட முயற்சி கூட எடுக்க திராணி இல்லாத பாசக எதற்கு தமிழகம் வந்து போகிறது.

தேர்தல் கூட்டங்களுக்கு வட நாட்டு மக்களுக்கு காசு கொடுத்து கூப்பிட்டு கொண்டு வந்து காட்டி யாரை ஏமாற்றுவதாக பாசக நினைத்துக்கொண்டு இருக்கிறது.

எப்போ பார்த்தாலும் பசுமாடு, சாணி, மாட்டு மூத்திரம் என்று அலையும் தமிழக பாசக மக்கள் ஏன் இப்போது எல்லாம் மாடு என்று கூட மறந்தும் கூட சொல்ல மறுக்கிறார்கள்.

தமிழகத்தில் பாமகவில் இருந்து சீமான் வரை இலவசங்களை எல்லாம் வெறுக்கும் ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது. இருந்தும் இந்த பெரிய கூட்டம் இது வரையில் இந்த 16 ரூபாய் இலவசத்தை இது வரை எதுவுமே சொல்லாதது மட்டும் இல்லை. 2014ல் கொடுப்பதாக சொன்ன 15 இலட்சம் எங்கே என்று தான் கேட்கிறார்களே தவிர ஏன்டா இலவசமா 15 இலட்சம் தரீங்க என்று இது வரையில் ஒரு வார்த்தை கூட கேட்க்காமல் இருப்பது ஏனோ அவர்களுக்கே வெளிச்சம்.

இப்படி 16 ரூபாயும் கொடுத்து வாங்கி கட்டி கொள்வதற்கு பதில் அந்த 16 ரூபாயையும் பேசாம அந்த 10% ஏழைகளுக்கே கொடுத்து மோடி அரசு புண்ணியம் தேடிக்கொண்டு இருக்கலாம்......

0 comments: