Saturday, January 6, 2018

எங்களை ஆளுகின்ற மோடி தமிழர் இல்லையே சீமான் என்ன செய்ய

சுதந்திர இந்தியாவில் இது வரையில் நம்மை ஆண்டது தமிழர் இல்லையே சீமான். என்ன தான் தமிழகம் தமிழர்கள் ஆண்டாலும் அண்டை நாட்டில் உள்ள தமிழர்களை காப்பாற்ற தமிழர் அல்லாத பிரதமர்களை அல்லவா கேட்டு வேண்டி நிற்க வேண்டி இருக்கிறது.

நாடளவில் தமிழர்களின் மேல் என்ன என்ன சுமைகளை எல்லாம் ஏற்றி வட நாட்டிற்கு கழிப்பிடங்களை கட்டுவதாக சொல்லி பாசக அரசியல் கும்பல் கொள்ளை அடிக்கின்றது.

அதுவே தமிழகத்தின் அடிப்படை தேவையாக இருந்தால் கூட செய்ய நிதியை ஒதுக்க மாட்டோம் என்று வெளிப்படையாகவே செய்கின்றது பாசக அரசு.

வழக்கம் போல தமிழகத்தில் இருக்கும் சோ வைகையராக்கள் தமிழகத்தில் மதவாதம் தலை தூக்கும் வரை எதுவும் செய்துவிடாதீர்கள் அந்த பணத்தை எல்லாம் குசராத்து கழிப்பிடம் கட்ட கொண்டு போங்கள் என்று சிரித்துக்கொண்டே சொல்லுகின்றது, தொகாவில் தைரியமாக அப்படி தான் செய்வோம் உங்களால் என்ன செய்யமுடியும் என்று கேட்கின்றது.

இதை எல்லாம் எப்படி அடக்க போகிறீர்கள் சீமான் என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள். தமிழனை எதற்கு குசராத்துகாரரோ அல்லது அடுத்த மாநிலத்தவர் ஆளனும், தமிழன் இல்ல ஆளனும் என்ன செய்ய பதில் சொல்லுங்க.......

0 comments: