Monday, January 22, 2018

பாசக அடையாளம் காட்டியிருக்கும் இந்துக்களும் தமிழர்களும் - மக்களே விழித்துக்கொள்ளுங்கள்

1) சல்லிக்கட்டு போராட்டம்
2) நீட்டு தேர்வு பிரச்சனை
3) பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்
4) விவசாயிகள் போராட்டம்
5) நெடுவாசல் போராட்டம்
6) மீத்தேன் போராட்டம்
7) அணு உலை போராட்டம்
8) பேருந்து ஊழியர் போராட்டம்
9) மதத்தின் பெயரால் மக்களை அடித்து கொல்வது கண்டித்து போராட்டம்
10) கருத்து சுதந்திரத்திற்கு எதிரான ஆணவ போக்கை கண்டித்து போராட்டம்
11) ஆணவ கொலைகளை கண்டித்து போராட்டம்
12) காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சனை போராட்டம்
13) இலங்கை தமிழர்கள் படுகொலைகள் கண்டித்து போராட்டம்
14) சர்வதிகார போக்காக போராட்டகாரர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து கண்டித்து போராட்டம்
15) பேருந்து கட்டண உயர்வு கண்டித்து போராட்டம்
16) ஆட்சிக்கு வந்ததும் தருவாத சொன்ன குடும்பத்தில் தலைக்கு ஒருவருக்கு 15 இலட்ச ரூபாய் எங்கே என்று கேட்கும் போராட்டம்
17) நாடெங்கிலும் மதத்தின் பெயரால் நடந்த கொலைகளை கண்டித்து நடத்திய போராட்டம்

இப்படி பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். இந்த போராட்டங்கள் எதிலாவது இப்போது ஆண்டாளுக்காக போராடும் மக்களை எங்கேனும் பார்த்து இருக்கிறீர்களா மக்களே.

இவர்கள் தான் இந்துக்கள் என்றால், அப்போ மற்ற தமிழர்கள் எல்லாம் இந்துகள் இல்லை என்று பொருளாகுகின்றது.

மற்ற தமிழர்களின் போராட்டங்களுக்கு இந்த இந்துகள் போராடாமல் தவிர்த்து வந்தது ஏன் என்று விளக்கம் சொல்வார்களா.

தமிழகத்து ஏழை எளிய மக்கள் தான் கடினமாக உழைத்து சம்பாதித்த பணம் செல்லாது என்று ஓர் இரவில் மோடி தன்னிச்சையாக அறிவித்ததை அடுத்து பணம் என்ன ஆகுமோ என்று கலக்கத்தில் வரிசையில் நின்ற மக்களுக்கு இனிப்பு வழங்கிய வக்கிரபுத்தி இந்துக்கள் அல்லவா இவர்கள்.

இன்றைக்கு நாக்கை அரு, தலையை வெட்டு என்கிறார்களே அன்றை நீங்கள் எல்லாம் ஏன் இளிச்சவாயர்கள் போல் பேசாமல் அமைதியாக வரிசையில் நின்றீர்கள் தமிழர்களே. இப்படி கேலி போசியும் இனிப்பு வழங்கியும் பரிகாசம் செய்தவர்களை குறைந்த பட்சம் அடிக்க கூட துணியாத தமிழர்களே இந்த இந்துகளின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள்.

மெரினாவில் போராட கூட்டம் கூட்டினால் குண்டர் சட்டத்தில் தண்டனை, அதுவே இந்துக்கள் சேப்பாக்கதில் ஆயிரகணக்கில் கூட்டம் கூட்டினால், தடைவிதித்த நீதிமன்றம் கூட அமையான போராட்டம் என்று சொல்லும். என்னவோ மெரினாவில் மக்கள் எல்லாம் ஆயுதம் ஏந்தி போராடியது போல்.

பாசகவின் தமிழக அடிப்படை வாத கட்சி பாமக மக்களை அடித்தாலோ எரித்தாலோ அது கலவரம் விபத்து. ஆனால் அதுவே தாழ்த்தப்பட்ட மக்கள் அடிப்பவர்களை திருப்பி தாக்கினால் தீவிரவாதம் சாதி மோதல்கள் என்று இதுவரை நோட்டம் பார்த்த பாசக இனி குண்டு வெடிக்க தயாராகிக்கொண்டு இருக்கிறது.

கூடிய விரைவில் இந்த இந்துக்கள் போராட்டங்கள் பார்த்து அப்பாவி மக்களும் அந்த போராட்டத்தில் கலந்துக்கொள்ளும் நாளுக்காக காத்துக்கிடக்கிறார்கள் இந்த இந்துக்கள்.

என்றைக்கு இந்த இந்துக்கள் இல்லாமல் அப்பாவி தமிழர்கள் இந்த போராட்டத்தில் பங்குகொள்கிறார்களோ அன்றைக்கு அவர்கள் இருக்கும் பக்கத்தில் மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடிக்கும் பாசக.

அந்த வெடிகுண்டு இசுலாமிய கிருத்துவ மற்றும் தாழ்த்தப்பட்ட அல்லது நக்சல்பாரிகளின் கைவண்ணம் என்று சொல்லி பொதுமக்களை அடித்து எரித்து பெண்கள் குழந்தைகள் என்று கருவருத்து. பெண்களின் வயிற்றை கிழித்து அதில் இருக்கும் சிசுவரை கருவருக்க இந்த பாசக தயாராகிவருகின்றது.

ஆகவே இந்த மாதிரியான இந்துகள் போராட்டத்தில் பங்குகொள்ளாமல் இருப்பதே தமிழர்களுக்கு நல்லது. வீனே சென்று பலியாகிவிடாதீர்கள் அப்பாவி தமிழர்களே.......

விழித்துகொள்ளுங்கள் பிழைத்து இருப்பீர்கள் இல்லையே உங்களை எல்லாம் கோத்ராவில் தூங்கிக்கொண்டு இருந்த வயதானவர்களை இவர்களே கொளுத்திவிட்டு இசுலாமியர்கள் கொளுத்தினார்கள் என்று மக்களையும் நீதிமன்றத்தையும் நம்பவைத்து போல் உங்களையும் கொன்று அதில் குளிர்காய நினைக்கிறார்கள் இந்த இந்துக்கள்.

மெரினாவிற்கு தடைவிதித்த அதே நிர்வாகம் சேப்பாக்க போராட்டத்திற்கு தடைவிதிக்காமல் மௌனம் காப்பதில் இருந்து தமிழர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும், சிந்திப்பார்களா இல்லை கோத்ராவில் அப்பாவி தனமாக கொத்து கொத்தாக எரிக்கப்பட்டதை போல் தங்களையே பலிகொடுக்க போகிறார்களா இந்த அப்பாவி தமிழர்கள்.

ஆண்டாள் போராட்டம் அந்த இந்துகளின் போராட்டம் அதை அவர்களே போராடிக்கொள்ளட்டும், தமிழகளின் போராட்டங்கள் போது இனிப்பு கொடுத்து கொண்டாடியதை போல் இப்போது நீங்கள் இனிப்பு கொடுங்கள் அது போதும்......

0 comments: