Tuesday, January 2, 2018

தமிழக மாடல் குசராத்து மாடல் எல்லாம் இனி இல்லை - பாசகவின் 2019 தேர்தல் வியூகம்

தலைவரின் ஒவ்வொரு அறிக்கையும் தமிழகத்தை உயர்த்திக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறது. இன்றைக்கு தலைவர் அறிவித்த ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்ற அறிவிப்பு இது வரையில் பாசக செய்துக்கொண்டு வந்த குசராத்து மாடலை குப்பைக்கு அனுப்பி இருக்கின்றது.

"ஆன்மீக அரசியல் என்பது உண்மையான, நேர்மையான, நாணயமான அரசியல். இது எந்த விதமான சாதி மத சார்பும் இல்லாத, அறம் சார்ந்த அரசியலாகும். ஆன்மீக அரசியல் என்பது ஆத்மாவுடன் தொடர்புடைய ஒன்றாகும்."

தலைவரின் அரசியலில் அறிவிப்பிலேயே பாசகவின் அரசியல் சித்தாந்தங்கள் நொறுக்கப்பட்டுவிட்டது.

உணமை நேர்மை நாணயம் இவைகளுக்கு எல்லாம் பொருள் என்ன என்றாவது பாசகவிற்கு தெரியுமா. அவர்கள் கண்டது எல்லாம் நயவஞ்சகம் பொறாமை படுகொலைகள் தான். இந்த அழகில் உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது என்று அளப்பார்கள் எதற்கு எடுத்தாலும்.

ஆன்மீகத்திற்கும் சாதி மதத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிவித்து இருக்கிறார் தலைவர். இனி எச்ச சர்மா முகத்தை எங்கே கொண்டு வைத்துக்கொள்ள போகிறார்.

சாதி மதத்தின் பெயரால் முண்டா சட்டையை அணிந்துக்கொண்டு நாட்டில் இருக்கும் நலிந்த மக்கள் பைகளில் என்ன வாங்கிக்கொண்டு போகிறார்கள் என்று ஆராய்ந்து கதை தெருவிலேயே அடித்து கொல்லப்பட்ட செய்கைகளை எல்லாம் இனி எச்ச சர்மா  எப்படி நடத்த போகிறார். அப்படி செய்தால் அது ஆன்மீக அரசியலாக ஆகாது என்று தலைவர் சொன்னவைகளுக்கு எதிராக போய் முடியாதா.

ஆக கூடி பாசக தனது ஆன்மீக அரசியல் சித்தாந்தத்தை மாற்றிக்கொண்டு அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

ஒரு வேளை அப்படி தான் செய்வேன் என்று பாசக அடம் பிடிக்குமானால் தலைவரின் அரசியல் உங்களையும் அழிக்கும் மொத்த இந்தியாவில் இருந்து.

படிப்படியாக பாசகவை திருத்தி நல்வழிப்படுத்த அவர்களின் கொட்டங்களை ஒழிக்க தலைவர் கிளம்பியுள்ளார்.

போகின்ற போக்கை பார்த்தால் இனி 2019 நாடாளுமன்ற தேர்தலில் குசராத்து மாடல் என்று பரப்புரையாற்றிய பாசக இனி தமிழக மாடல் அல்லது தமிழ் மாடல் என்று சொல்லி தான் நாடாளுமன்ற தேர்த்தலை சந்திக்கும் போல.

தலைவருக்கு அந்த முண்ட சட்டையையும் நோயாளி சால்வையையும் கொடுத்து கோமாளியாக்கலாம் என்று நினைத்த பாசகவின் கனவில் மண்ணையள்ளி நிறப்பி இருக்கிறார் தலைவர்.

0 comments: