Thursday, January 25, 2018

பாசகவின் ஆட்சி வந்தால் இனி தமிழும் தமிழர்களும் என்ன ஆவார்கள் என்று காட்டியுள்ளார்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து நீக்கப்பட வேண்டும், அதற்கு பதிலாக கடவுள் வாழ்த்து தான் இனி பாடவேண்டுமாம்.

சல்லிக்கட்டுக்கோ வேறு எதுவுக்குமோ போராட்டம் நடத்தினால் குண்டர் சட்டம் பாயும் அதுவே இந்துகள் போராட்டம் என்றால் அதே கடற்கரையாக இருந்தாலும் சாலைக்கு இந்தப்பக்கம் என்று சட்டமும் நீதிமன்றமும் ஒன்றும் சொல்லக்கூட சொல்லாது.

தமிழகத்தில் எல்லா இடங்களிலும் மக்கள் இந்தியில் தான் பேசவும் எழுதவும் செய்யனும்.

யாராவது எதிர் கருத்து பேசினாலோ இல்லை எழுதினாலோ கை கால் தலை நாக்கு என்று துண்டித்து துடி துடிக்க கொல்வார்கள்.

இந்துகள் தவிர அனைவரும் பாக்கிட்தானதிற்கு போகனும்.

வீட்டு வாசலை விட்டு வெளியே வந்தால் கையில் அடையாள அட்டையுடன் தான் வரனும் இல்லை என்றால் குண்டர் சட்டம் பாயும்.

எல்லோரும் சிப்பாவும் அதன் மேல் முண்டா சட்டையும் அணிந்துக்கொண்டு தான் எல்லா இடங்களுக்கு போகனும்.

எல்லோரும் வட நாட்டு உணவான சப்பாதியும் காய்கறியும் தான் உணவாக உட்கொள்ள வேண்டும்.

விவசாயம், பெட்டிக்கடை, கீரை, தயிர் என்று எந்த வித வியாபாரமும் செய்யக்கூடாது, தேவைப்படும் பொருட்களை எல்லாம் அம்பாணியும் அதாணியும் விரிக்க போகும் கடையில் தான் ஒன்றுக்கு பத்தாக விலை கொடுத்து வாங்கனும். வேறு கடைகள் இருக்கப்போவது இல்லை.

வீட்டிலோ தனது சொந்த நிலத்திலோ ஏதாவது விளைய வைத்து சாப்பிட்டால் குண்டர் சட்டம் பாயும்.

பெருமுதலாளிகளின் தொழிற்சாலைகளில் கூலி வேலைக்கு செல்வது, தனக்கு பிறக்கும் குழந்தைகளை அந்த முதலாளிகளின் எதிர்கால உழைப்பாளிகளாக ஆக்குவது தவிர வேறு எதாவது படிக்க வைக்கவோ அல்லது வீட்டிலே சொல்லிக்கொடுக்கவோ செய்தால் குண்டர் சட்டம் பாயும்.

பின்னர் மெதுவாக யார் யார் எல்லாம் சட்டை அணியலாம் மேல் துண்டு போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வரும். அப்படியே யார் யார் எல்லாம் காலில் செருப்பு அணியலாம் என்ற பட்டியலும் வரும்.

அந்த கால கருப்பு வெள்ளை படங்களில் வருவது போல் சோற்றுக்கே தவிக்கும் கூட்டமாகத்தான் தமிழர்கள் வாழவேண்டும்.

ஊருக்குள் இருக்கும் இடங்கள் வீடுகளை வடக்கத்தியர்களை கொண்டு வந்து கொத்து கொத்தாக குடியமர்த்துவார்கள். தமிழர்களின் உடமைகள் எல்லாம் பிடுங்கி வடக்கதியர்களுக்கு கொடுத்துவிட்டு அவர்களிடம் கூலி வேலை செய்ய சொல்வார்கள். முடியாது என்று மறுத்தாலோ எதிர்த்தாலோ இலங்கையில் தமிழர்களுக்கு என்ன நடந்ததோ அதே தான் தமிழக தமிழர்களுக்கும் நடக்கும்........

தமிழகத்தில் பாசகவின் இந்த பொன்னான ஆட்சி அமைய பாடுபடுங்கள் தமிழர்களே.........

0 comments: