Tuesday, July 14, 2015

பாமகவில் குடும்ப அரசியலுக்கு இப்போது வாய்ப்பு இல்லை ஏன்

பாமகவிடம் இது சம்பந்தமாக எப்போது கேள்வி கேட்டாலும் நேரடியான பதிலை பெறவே  முடியாது அப்படியே ஏதும் சொன்னாலும் மழுப்புவார்களே அன்றி காரணமோ பதிலோ சொல்ல மாட்டார்கள்.

இவைகள் எல்லாம் ஒரே செயலில் அடக்கும் விதமாக அன்புமணி தான் முதல்வர் என்ற தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பாமக.

ஏன் இந்த நிலை பாமகவிற்கு.......

மக்களின் மறதியை அரசியல் கட்சிகள் எப்படி எல்லாம் பயன்படுத்திக்கொள்கிறார்கள் பாருங்கள்.

அன்புமணியைவிடவும் வயதிலும் அனுபவத்திலும் முதியவரான மருத்துவர் ஐயா ஏன் அந்த பதவிக்கு வரவில்லை ஏன் என்றால் நாங்கள் குடும்ப அரசியலை வெறுப்பவர்கள் என்று சொல்வார்கள்.

ஒரு வேளை வெற்றி பெற்ற பிறகு மாற்றிகொள்வார்களோ என்ற பயம் எல்லாம் நமக்கு வேண்டாம்.

மருத்துவர் ஐயாவால் அந்த பதவி எல்லாம் வகிக்க முடியாது என்றதே உண்மை.....

நிலைமை அப்படி இருக்க என்னவோ தியாகம் செய்துவிட்டது போல் வார்த்தை அள்ளிவிட்டு மோடிவித்தை காட்டுகிறார்கள் பாமகவில்.

மருத்துவர் ஐயாவால் இப்போது மருத்துவராக செயலாற்றமுடியாத நிலை பாவம் அவருக்கு. காரணம் அவர் மருத்துவ படிப்புக்கு சேரும் போது பொய் சாதி சான்றிதழை கொடுத்து அல்லவா பட்டம் படித்தார்.

பொய் சான்றிதழ் என்று சட்டப்படி நிரூபித்து சான்றிதழையும் பிடுங்கியாச்சு. தேர்தலில் நிற்கும் போது தன்மேல் எந்த வித கிரிமிலன் குற்றமும் நிறுபித்தது இல்லை என்று சான்று கொடுக்க வேண்டும்........ இன்ன இன்ன இத்தியாதிகள் உண்டு. அந்த வைகயராகளில் எதுவும் இவருக்கு பொருந்தாது.

இந்த நிலையில் தான் தனது கட்டுப்பாட்டில் இருந்து கட்சி சென்றுவிடக்கூடாது என்று தனது மகனை முன் நிறுத்துகிறார் இந்த தியாகி.

சொந்த வாழ்கையிலே இவ்வளவு குத்த குறை இவர்கள் அளிக்கப்போகும் ஆட்சி அடே அப்பா இவரை போல் மிகவும் தூய்மையாகவும் நேர்மையாகவும் தான் இருக்கும் நம்புங்கள் மக்காள் நம்புங்க.......

தூய்மை இந்தியா என்று சொல்லிக்கொண்டு நடுவணில் ஒரு கூட்டம் நடுவணில் துடைத்து எடுத்துக்கொண்டு தூய்மை செய்கிறது அதே போல் தமிழகத்தையும் துடைத்து எடுத்துக்கொண்டு தூய்மை செய்ய இவர்களை தான் நாம் தேர்ந்து எடுக்க வேண்டும். ஓட்டு போடுங்கள் மருத்துவர் ஐயா குடும்பத்துக்கு..........

அன்புமணி என்ன என்றால் அமெரிக்காவுல ஒபாமா கூப்பிடாங்க, சப்பான்ல சாக்கி சான் கூப்பிட்டாங்ன்னு சொல்லிக்கொள்கிறார். அவரிடம் கேட்ப்போம், மக்களின் அத்தியா அவசிய மருந்துகளை தையாரித்து அரசு மருத்துவமகைகளுக்கு வழங்கி வந்த 4 நிறுவனங்களையும் எதற்கு இழுத்து மூடினீர்கள் என்று விளக்குங்கள் மற்றவைகளை பிறகு விசாரிப்போம்.......

பதில் சொல்வார்களா பார்ப்போம்........

1 comments:

Anonymous said...

Ithu kelvi......super.........ramada mateer is real.....or reel so for no media told.....



Seshadri