Thursday, July 16, 2015

திமுகவால் முடிந்தது காங்கிரசால் முடியாமல் போவது ஏனோ இல்லை நடிக்கிறார்களா.....

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த உடன் என்ன என்ன இடம் கிடைக்கும் என்று இருந்த செயலலிதாவும் அவரது தோழியும் சேர்ந்துக்கொண்டு எவ்வளவு இடங்களை அள்ள முடியுமே அவ்வளைவும் அள்ளினார்கள்.

பிறகு நன்றாக நடக்கின்ற தொழில் நிறுவணங்களை வாங்கி குவித்தார்கள். அப்படி வாங்கும் போது அடிமாட்டு விலைக்கு கொடுக்க மறுத்தவர்களுக்கு என்ன ஆனது என்று சரவணபவன் இராசகோபாலனுக்கு என்ன நடந்தது என்று அனைவரும் அறிவர்.

ஒரு முதல்வர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது தோழிக்கு வணிபங்களை வாங்கியதும் மிரட்டி பிடிங்கியதும் தவறு என்று திமுக வழக்கு தொடுத்தது. தொடுத்த வழக்கு கொமாரசாமி உடைத்து எரியும் வரை சென்றதையும் அனைவரும் அறிவர்.

அந்நாளில் செயலலிதா செய்ததற்கும் இன்று மோடி தனது தேழர்களை எல்லா இடத்திலும் அழைத்துக்கொண்டு சென்று நாட்டுக்காக எவ்வளவு திட்டங்கள் இருக்கிறதோ அவைகளை அந்த திட்டங்களின் பெயரில் கொடுக்கிறேன் என்று கொடுக்கிறார்.

என்ன செயலலிதா செய்தது அந்த வணிப நிறுவணங்களுக்கு அவரும் ஒரு பங்குதாரர். ஆனால் மோடியோ மறைமுக பங்குதாரர். அது ஒன்று தான் வித்தியாசமே அன்றி வேறு எந்த வித்தியாசமும் இல்லை.

அன்று திமுகவிற்கு இருந்த துணிவு காங்கிரசிடம் இல்லையே ஏன், பிரதமர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்று இதுவரை நீதிமன்றம் செல்லாதது மட்டும் இல்லை அறிக்கை கூட விட தயங்குவது ஏனோ அவர்களுக்கே வெளிச்சம்.

இந்தியாவில் இருக்கும் திட்ட பணிகளின் பணம் மட்டும் மோடியின் தேழர்களுக்கு செல்லவில்லை இந்தியாவின் பெயரை சொல்லி அனைத்து நட்பு நாடுகளுக்கும் சென்று சுரண்டல்கள் துவங்கியாச்சு.

அப்படி வெளி நாடுகள் கொடுக்கும் திட்டபணிகள் இந்தியாவிற்கு உதவுவதற்கும் இந்தியாவின் உதவிய நாடி நிற்கும் நாட்டு பணிகள் அவைகள். தெளிவாக சொல்வது என்றால் இந்திய அரசு பணம் மட்டும் அல்லாது வெளி நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கிடைக்கும் அத்தனை பணத்தையும் மோடி நேரடியாத தனது இணைபிரியா தோழர்களுக்கு கொடுக்கிறார்.

இவைகளை எல்லாம் தட்டி கேட்க வேண்டிய எதிர்கட்சி காங்கிரசு பேசாமல் மௌனிப்பது அவர்களுக்கும் இதில் கூட்டு இருக்குமோ என்று சந்தேகிக்க வைக்கின்றது.

காங்கிரசின் நடவடிக்கைகளை கவணிப்போம் கையில் எடுத்து போராடுகிறார்களா அல்லது எங்களுக்கு இவ்வளவு கொடுத்தால் தொடரலாம் என்று விட்டு விடுகிறார்களா என்று பார்போம்.

0 comments: