Saturday, July 11, 2015

பிரேமம் - மளையாளபடம்

கிட்டதட்ட அட்டகத்தி போல் ஒரு படம், ஆனால் கதை பயணிக்கும் விதம் தான் வேறு.

விடலை காதலில் ஆரம்பித்து கடைசியில் திருமணம் வரை சென்று முடியும் ஒரு படம்....

என்ன அட்டகத்தியில் வரும் காதல் சாகசங்களை மிதிவணியில் சென்று செய்வதுபோல் அமைத்து இருந்தாலும், கல்லூரியில் காட்டும் காட்சிகள் அருமை.

மலர் வந்து செல்லும் வரை படம் விருவிருப்பாக செல்கிறது......

வகுப்பறையில் வரும் தாளத்தை இரசித்தபடி இருக்கும் மலர் வகுப்பு சென்றதும் மாணவர்களை அவர்கள் போக்கிற்கு விட்டுவிடுவார் என்று தான் ஒரு எதிர்பார்ப்பு. ஆனால் வெளியே போ என்று சொல்லும் காட்சிகள் அழகு.

உடன் வேலை செய்யும் அந்த விரிவுரையாளர் செய்யும் செயல்கள் தாங்க முடியாத சிரிப்பு.......

 நட்ட நடுக்காட்டில் இருப்பது போல் ஒரு கல்லூரி என்ன இயற்கையான சூழல் கேரளத்தில், எங்கள் கல்லூரி இருந்த பொட்டல் காடு நினைவுக்கு வந்து போவது தவிர்க முடியவில்லை.

கிட்டதட்ட ஒரு தலை இராகத்தில் வரும் கல்லூரி போல் ஒரு கல்லூரி காட்சி அமைப்புகள்......

என்ன ஒரு தலை இராகத்தில் குடித்துவிட்டு வகுப்பிற்கு வருவதாக காட்சி இருக்கும், இங்கே வகுப்பில் வந்து உட்கார்ந்ததும் குடிக்க துவங்குவதாக காட்டுவதும். அந்த செய்தியை அவனின் அப்பாவிடம் சொல்ல இந்த மாதிரி சின்ன செயலுக்கு எல்லாம் இனிமேல் என்னை கூப்பிடாதீர்கள் என்று கூச்சலும் அதட்டலும் செய்துவிட்டு செல்வது தான் இத்தனை ஆண்டு முன்னேற்றங்கள் போலும்.......

பாடல்கள் அருமை அதுவும் துவக்கத்தில் வரும் அந்த ஆறோடு பாட்டு அருமை.......

வகுப்பில் காட்டும் JAVA பாடம் அருமையான காட்சி...... இப்படி தான் இப்போது எல்ல கல்லூரிகளிலும் பாடம் எடுக்கிறார்கள் போலும்.....

சிலருக்கு என்ன தான் முயற்சித்தாலும் காதல் கைகூடுவது இல்லை..... இவனுக்கும் அப்படி தான் போலும்.......

 நல்லபடம், உங்களுக்கு பாக்கியதேவதா பிடித்து இருந்தால் இந்த படமும் பிடிக்கும்..........கொஞ்ச நாளில் தமிழில் மீண்டும் வந்தாலும் வரலாம்........

0 comments: