Friday, April 17, 2015

பெரியார் சொன்ன பொய்யுரைகள் - எப்படி மக்களை ஏமாற்றி இருக்கிறார் பாருங்கள்

இது தினமணியில் வந்திருக்கும் மோடியின் உரை சுருக்கம்

"மனிதநேயம் வளர்வதற்கு ஹிந்துத்துவம் மூலமாக பாடுபட வேண்டியது அவசியம்.
ஹிந்துத்துவம், என்பது மதம் அல்ல; அது வாழ்க்கை முறை என்ற அருமையான விளக்கத்தை, தில்லி உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிறது. அந்த விளக்கத்தை நான் நம்புகிறேன்.
ஹிந்து மதம், அறிவியல்பூர்வமான வழியில் வன உயிரினங்கள் உள்பட இயற்கையின் நன்மைக்காக செயலாற்றி வருகிறது என்றார் மோடி."

ஆனால் பெரியாரோ மதங்களும் மத சடங்குகளும் தான் மனிதனை பிரித்து தாழ்த்தி அவமானபடுத்தி வெறுப்புகளின் ஊற்றுக்கண் என்றும். இதன் மூலம் கடவுள் என்ற நம்பிக்கையே என்று பொய் சொல்லிவிட்டு போனார் போலும்.

உச்ச நீதிமன்றமே சொல்லி விட்டதாகத்தான் மோடியும் சொல்லி இருக்கிறார். உண்மையில் நீதிமன்றம் அப்படி சொன்னதா?..... தெரியாது. அப்படி சொன்னால் பிறகு இந்து மத்தை பரப்ப நினைக்கும் மக்களின் மனதில் அடுத்த மதத்தினர் மீது இவ்வளவு காழ்புக்களை அவைகள் ஏன் விதைக்க வேண்டும். 

அடுத்தவர் என்ன சாப்பிடவேண்டும் என்று துவங்கி எங்கே வைத்து எரியூட்டபடவேண்டும் என்று நிர்மானிக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது. 

இந்து மதம் ஒரு வாழ்வியல் என்றால், இதே போல் வாழ்வியலை தான் தாலிபானும் கொண்டுள்ளார்கள். அவர்களை மட்டும் ஏன் மக்கள் காட்டுமிராண்டி என்கிறார்கள். 

பொய் யார் சொல்கிறார்கள், உச்ச நீதிமன்றமா, அல்லது நீதிமன்றத்தின் பெயரில் மோடியா அல்லது பெரியாரா தெரிந்தவர்கள் சொல்லவும்...........

5 comments:

')) said...

நம் தலையெழுத்து ...!

')) said...

பொய்யை யார் சொன்னால் என்ன, நம்புகிறவர்களைத் தான் இடிக்க வேண்டும்.

')) said...

Mr. Panneer,

If you font know please check before you write anything.
Indian court on two occassions one in1998 and another in 2005 case by communist parties have clearly ruled that Hinduism is way of life of true Indians.

So, blindly don't spread hatred.
Also, change your title. Don't follow the cheap tactics of attracting people using important subjects. Title is one thing, and you have written exactly opposite.
Don't you have honesty?

Taru

')) said...

வாங்க தனபாலன் அண்ணா, என்ன செய்ய, போற போக்க பாத்தா தலைப்பு உண்மைன்னு ஆகிவிடும் போல தருவின் பதிலை பாருங்கள்.......

')) said...

தப்பு யார் செய்தாலும் தப்புதாங்க, தெரியாதவர்களை நம்பும்படி பொய் சொல்லி ஏமாற்றுவது மோசடி. இவர்கள் இவைகளை தான் அருமையாக படிப்படியாக செய்துக்கொண்டு வருக்கிறார்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி