Tuesday, April 21, 2015

மோடியும் - செயலலிதாவும் - முதல் ஆட்சி ஒரு ஒப்பீடு

மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்த அடுத்த ஒருவரை ஆட்சியில் இது நடந்ததுக்கு காரணம் என்று அமைச்சர் முதல் அடி மட்ட தொண்டன் வரை காட்டியது இல்லை. அம்மையார் ஆட்சியில் இல்லை என்றாலும் உத்தரவுகள் எல்லாம் இவர் தான் கொடுப்பார்.

மோடி செல்லும் விழா மற்றும் அரசு சார்ந்த சந்திப்புகள் ஆகட்டும் எல்லாம் வளர்ப்பு மகன் திருமண தடபுடல் அளவும் அதையும் விஞ்யும் தான் இருக்கிறது.

வெறும் அறிக்கைகளும், அடுத்த நாட்டவரையும் எதிர் கட்சியினரையும் ஒருமையில் விளித்தலும். செர்மேன் நாட்டில் எதிர்கட்சி பற்றி புகார் ஏன். டீச்சர் இவன் என்னை கிள்ளிட்டான் பாணியில், வளருங்கள் மோடி. அம்மையார் அன்டை மாநில முதல்வர்களை எல்லாம் தகாத வார்த்தைகள் கொண்டு சாடியது அனைவரும் நினைவில் வரலாம் இவைகளை பார்க்கும் போது.

பகட்டான உடையில் இருந்து எங்கே சென்றாலும் ஏராளமான கெடுபிடிகளும் எடுபிடிகளும். அப்படியே சென்னையில் 1000 வண்டி ஊர்வலம் வந்து போவது நினைவில் வருவதை தவிர்கமுடியவில்லை.

முந்தைய ஆட்சி விட்டு சென்ற திட்டங்களுக்கு வெறும் பெயர் சூட்டும் விழாக்கள் மட்டும். புதிய வீரானம் ஏரி திட்டம் போல்.

பெரும் பணக்காரர்களுக்கு சாதகமானவைகள் மட்டும் நிறைவேற்றப்படுதல் மற்றவர்களுக்கு எல்லாம் கட்சி சின்னமும் பிரியாணி பொட்டலங்கள் மட்டுமே.....

சசிகலா நடராசன் மட்டும் இல்லை, திரைமறைவில் அழகாக மறைக்கப்படு இருக்கிறதோ என்னவோ.......

ஆனால நடராசன் மாதிரி அதானி அரசின் அத்தனை பேச்சுகளும், திட்டங்களுக்கும் சொந்தகாரராக இருத்தல்.

அரசின் பெயரால் தனியார்கள் கொள்ளை அடித்தல் எல்லா மட்டங்களிலும். தற்பொழுது பி எசு என் எல் சென்னை நிறுவனத்தின் மோடம் விணியோகம் தனியாருக்கு கொடுக்கப்பட்டு, அவர் அவர் வீட்டில் இருக்கும் மோடம் சகட்டு மேனிக்கு வேலை செய்யாமல் செய்து 2000 கொடுத்தால் மற்று ஒன்று கொடுக்கிறேன் என்றும். அப்படி கொடுக்க முடியாது என்றால் தனியாருக்கு மாறிக்கோ என்று அடாவடி செய்தல். சுமங்கலி கேபிளை போல்.

மோடியை தவிர ஒருவருக்கும் ஒன்றுமே தெரியாதது போல் மக்களுக்கு காட்டுதல். பீடா கடை திறப்பு என்றால் கூட அது மோடி தான் திறக்கனும் இல்லை என்றால் தலை எடுக்கப்படும் கணக்காக பயமூட்டுதல்.

எதிர்கட்சினர்களை சபையில் பேசவே விடாமல் செய்தல். அப்படியே பேசினாலும் அரகர சங்கர சிவ சிவ சங்கரா என்று மோடி அர்சரனை தவிர எதுவும் பேசக்கூடாது என்று அவசர சட்டம் கொண்டு அடக்குதல்.

அடிப்படை தேவைகளை கிடைக்கவிடாமல் செய்வது. மக்களுக்கு நேரடியாக பலன் கிடைக்கும் திட்டங்களை எல்லாம் முடக்கி தண்டல்காரர்களுக்கு தாரைவார்ப்பது. மோடமை போல், உழவர் சந்தையை ஒழித்து கட்டுவதை போல்.

மாட்டுக்கறி என்று ஏளனமாக பேசிவிட்டு, கையில் பிச்சை பாத்திரத்தை எடுத்துக்கொண்டு ஆதானிகளையும் கூட அழைத்து சென்று மாட்டுகறி சாப்பிடும் மக்களிடம் மடி பிச்சை கேட்டல். தன் மேல் உள்ள வழக்குக்காக காங்கிரசுடன் இரகசியமாக  கெஞ்சியதும் முடியாது என்று தெரிந்ததும் அண்டானியோ மொயோ என்று அளந்துவிடுவதும் போல.....

தன்னை தானே புகழ்ந்துகொள்ளுதலும், உலகமக இரட்சகர் இவரே என்று பின்னால் ஒரு குழு நின்றுக்கொண்டு அர அர சங்கர சிவ சிவ சங்கர என்று அதையே திரும்ப திரும்ப சொல்வதும். இதுக்கு அம்மையாருக்கு உதாரணமே தேவை இல்லை.......

வாய்திறந்தால் இந்து இந்து என்று போசுவதும், தேர்தலுக்கு முன் என்னமோ ஆட்சிக்கு வந்தால் உடனே பாக்கிட்தானத்தை அடித்து உதைத்து காய வைப்பவர் போல் படம் காட்டியது என்ன. வந்த பிறகு ஒரு ஆண்டு முடிவடையும் போது காசுமீரத்து அரசியலில் பாக்கிட்தானம் அழகாக ஒரு பொம்மை அரசை கொண்டுவர அதை மண்டியிட்டு வரவேற்பது என்ன அடடா என்ன அழகு.

இப்படி நிறைய எழுதிக்கொண்டே போகலாம், அப்போ சுருக்கமா சொன்ன தேர்தலுக்கு முன்னால் வந்த வதந்திகளின் படி செயலலிதா பிரதமர் ஆகி இருந்தால் என்ன என்ன எல்லாம் செய்வாரோ அவைகளை மட்டுமே மோடி செய்கிறார் என்று சொல்லலாமா.

இல்லை இதுக்கு எதுக்கு மோடி என்று வேறு ஒருவர் அது தான் செயலலிதாவே இருக்கிறார் பேசாமல் செயலலிதாவையும் அவரசு அடிபொடிகளையும் தெல்லிக்கு அனுப்புங்கள் இதைவிட சிறப்பான ஆட்சியை மக்களுக்கு காட்டுவார்கள் என்று சொல்லலாமா.........

முடிவு உங்களிடமே.... இதன் முன்னோடமாக தான் தமிழிசை 2016 பசக ஆட்சிதான் என்று மறைமுகமாக சொல்லி இருக்கிறார் போலும்........

3 comments:

')) said...

I could only laugh at your comparison.

J is a convicted politician.
She is not recognized outside tamilnadu.
She never won continuous elections.
She doesn't have oratory skills. She simply reads written notes.
She never encourages and grooms good bureaucrat officers. She is weak in identifying talent.

Modi hundred fold superior than madam.

Taru

')) said...

சொல்லிக்கொள்ளலாம், அம்மையாரின் ஆட்சியின் போது 3 பெண்கள் மட்டும் கொளுத்தி எரிக்கப்பட்டார்கள். மோடியின் ஆட்சியிலோ பல ஆயிர கணக்கான மக்கள் இல்ல கொளுத்தியும் வெட்டியும் சாய்க்கப்பட்டார்கள் 3 நாளில், அம்மையாரை விட 100 மடங்கு பெரியவர் தான்......

')) said...

இன்னும் என்னென்ன தாரை வார்க்கப் போகிறார்களோ...? ம்...