Saturday, April 11, 2015

சந்தனமர சாவும் செம்மர சாவும்

வீரப்பனை கொன்று அசுரன் அழிந்தான் என்றார்கள், இப்போது செம்மர சாவில் திருடர்கள் அழிந்தார்கள் என்கிறார்கள்.

என்னமோ வீரப்பன் வீட்டுக்கு விறகு கட்டாக வெட்டியதாக தான் எல்லோரும் எடுத்துக்கொண்டார்கள் போலும்.

அதே போல தான் இந்த செம்மரமும் ஏதோ இந்த கூட்டம் வீடுக்கு கடைகால் போட காட்டில் மரம் வெட்டினார்கள் என்றும் நினைத்து பேசுகிறார்கள் போலும்.

வீரப்பன் வெட்டிய டன் கணக்கான மரங்கள் எங்கே சென்றது, யார் வாங்கினார்கள், என்ன செய்தார்கள் என்று யாருக்காவது தெரியுமா.

வீரப்பனை சுட்டுக்கொல்ல இவ்வளது பணம் செலவழித்த தமிழகம் ஏன் அந்த மரத்தை அவனிடம் இருந்து வாங்கியவரின் பெயரையோ அல்லது மரங்கள் என்ன ஆனது என்று கூட சொல்லாமல் விட்டு விட்டது.......

சட்டதின் பார்வையில் கொலை செய்தவனுக்கு தூக்கு கொலைக்கு தூண்டியவனுக்கு என்றும் தண்டனை உண்டு.

அப்படி இருக்க மரத்தை வெட்டியவனுக்கு தண்டனை கொடுத்தாச்சு, வெட்ட சொன்னவனுக்கு. கிட்டதட்ட 20 ஆண்டு காலம் மரங்கள் எல்லாம் என்ன ஆச்சு, உங்களுகாவாது தெரிந்தால் தெரிவியுங்கள்.

சந்தனத்தில் கோட்டை விட்டதை இப்போது செம்மரத்தில் பிடிக்க பார்கிறார்கள். ஐதிராபாத்து நீதிமன்றம், இந்த துப்பாக்கி சுடு சமாச்சாரமாக சீபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பார்க்கலாம் யார் யார் தலை எல்லாம் உருளுது என்று.......

0 comments: