Tuesday, December 30, 2008

அதிமுக வேட்பாளருக்கு முழுப்பாதுகாப்பு அளிக்கவேண்டும்: செயலலிதா ( ஏன்னா நீங்கள் எல்லாம் நல்லவர்கள்)

இப்படி ஒரு தலைப்பு இட்டு ஒரு அறிக்கையை செயலலிதா வெளியிட்டு இருக்குகிறார் இன்று. அந்த அறிக்கையிலே அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள், இதை பொறுத்துகொள்ள முடியாத திமுக தேர்தல் பணியில் ஈடு பட்டிருக்கும் அதிமுக மற்றும் தோழமை கட்சிகளின் முன்னணித் தலைவர்களையும் தொண்டர்கள் மீதும் பொய் வழக்கு தடியடி, பணம் கொடுப்பது போன்ற தில்லுமுல்லுகளில் இறங்கியுள்ளார்கள் என்று தெரிவித்து உள்ளார்.

அய்யோ பாவம் ஒன்றுமே தெரியாதவர்கள் இந்த அதிமுக தலைவர்களும் தொண்டர்களும். எல்லோரும் காந்தியின் வீட்டிற்கு பக்கத்து வீட்டுகாரர்கள். அதிர்ந்து கூட பேச தெரியாதவர்கள் இவர்கள். தவறியும் அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்ககூட தெரியாதவர்கள். அவர்களது ஆட்சியின் போது நடந்த சென்னை மேயர் தேர்தலில் அதிமுக கையை இறுக்கமாக கட்டிக்கொண்டு மட்டும் தான் இருந்தது.

திமுக தொண்டர்களும் கட்சி தலைவர்களும் தங்களது தலையை தாங்களாகவே சென்று நின்று கொண்டு இருந்த அதிமுக கட்சி குண்டர்களின் மீது, இல்லை இல்லை தொண்டர்களின் மீது மோதி குண்டர்களின் கைகளை உடைத்தது மட்டும் இல்லாது. தனது தலையையும் தாங்களே உடைத்துக்கொண்டு பிறகு கட்டு போட்டுக்கொண்டு அழுது கொண்டு நேர்க்காணல் வழங்கினார்கள்.

அப்படி முடிந்த அந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது இந்த குண்டர்களை கொண்டு திமுகவினர் யாரும் எண்ணிக்கையில் நடக்கும் காந்தி கணக்குகளை பார்க்காத வண்ணமாக பார்த்துகொண்டு மட்டுமே நின்றார்கள். அந்த எண்ணிக்கை எல்லாம் தானாகவே அதிமுகவிற்கு மாறினது போலும்.

நீதி, நேர்மை என்றெல்லாம் யார் எல்லாம் பேசி நாம் கேட்க்க வேண்டி இருக்கிறது பாருங்கள். 10 வருடங்களாக ஆட்சியில் உட்க்கார்ந்து கொண்டு ஒரு கீரையை கூட கிள்ளி போடாத செயலலிதா, எல்லோரையும் கசப்பு மருந்து சப்பிடுங்கள், சப்பிடுங்கள் என்று 10 வருடங்களாக கசப்பு மருந்தாகவே காலம் கழித்து இப்போது திருமங்கலம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு டன் கணக்கில் கசப்பு மருந்துகளை வைத்துகொண்டு எப்படியாவது அந்த மக்களுக்கு கொடுத்து விடவேண்டும் என்று துடிக்கும் இந்த செயலலிதா சொல்கிறார் அறிக்கையில் தில்லுமுல்லுகளை பற்றி.

போங்க போங்க அப்படியே கொண்டு வந்த கசப்பு மருந்தை எல்லாம் வீட்டிற்கு 2 டன் என்று கொடுத்துவிட்டு ஊரை பார்த்து போய் நீங்களும் கொஞ்சம் கசப்பு மருந்து சாப்பிடுங்கள். சாப்பிட்டு விட்டு அப்படியே அன்பு, நீதி, நேர்மை, அப்படி என்றால் என்ன என்று பாடம் நடத்துங்கள் வந்து பார்த்து தெரிந்துகொள்கிறோம்.

0 comments: