Monday, December 15, 2008

பாக்கிட்தானில் 65 தீவிரவாத இயக்க அலுவலகங்கள் முடக்கம்- குமுதம் இணையதளம்


இப்படி ஒரு செய்தியை குமுதம் இணையத்தில் 14/12/2008ன் தலைப்பு செய்திகளில் ஒன்றாக வந்துள்ளது. இதே சேதியை தினமணி, தினமலர் மற்றும் இந்திய இதழ்களும் மட்டும் இல்லாது. அமெரிக்க ஊடகங்களின் முக்கிய பங்கு வகிக்கும் சி என் என் நிறுவனமும் இந்த செய்தியையும், இது தொடர்பாக பாக்கிட்த்தானின் அறிவுகெட்ட நேர்காணலையும் உளரல்களையும் வெளியிட்டுள்ளது.

http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/12/14/india.mumbai.suspect/index.html
http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/12/11/pakistan.mumbai.attacks/index.html
http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/12/09/pakistan.mumbai.raids/index.html

இந்த தலைப்பை பார்க்கும் இந்தியாவின் சாதாரண குடிமகனின் மனதில் என்ன தோன்றும். நடந்துவரும் உலக பொருளாதார மந்த நிலைகாரணமாக ஆங்காங்கே அமெரிக்க நிறுவனங்களின் இந்திய கிளைகளை மூடுவதை போல் வந்த ஒரு அறிவிப்பு என்று தான் நினைக்ககூடும்.

இந்தியாவின் சாதாரண குடிமகன் என்ன ஐ நா வின் தலைவர்களும், அதன் உளவு நிறுவனமும் கூட இதையேத்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறது போலும்.

இந்த 65 மனித பிணம்தின்னி நிறுவனங்களிலே ஒரு பிணம்தின்னி நிறுவனத்தின் பெயரை சொல்லி அதைமட்டும் பாக்கிட்த்தானும் மற்ற நாடுகளும் தடை செய்யவேண்டும் என்ற ஒரு வெறும் அறிக்கையை மட்டுமே வெளியிட்டது.

அந்த தடை செய்தி வெளியில் வந்த உடனுக்குடன் அந்த மனித பிணம்தின்னி குழுவின் தலைவன் பாக்கிட்தானின் தொலைக்காட்சிகளுக்கும் இதழ்களுக்கும் நேர்காணலை வழங்குகிறான். எப்படி தெரியுமா, இவர்களது தடையை பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. இந்த ஐ நா மன்றம் தடைவிதிப்பதால் நாங்கள் கொன்று குவிக்கும் செயலுக்கு என்ன தடை வந்துவிடப்போகிறது.

அமெரிக்காவிற்கே சென்று கொள்ளையாக மக்களை கொன்று குவித்து, அவர்களிடமே எங்களின் ஏக போக அதிபதியை அனுப்பி இன்னமும் நவீனமான விமானமும் ஆயுதங்களையும் வாங்கிவர வைத்தோம். இந்த துக்கட்டா நாடு என்ன இந்தியா சொல்லுமாம் அதை ஐ ஆ மன்றம் கேட்டு தடைவிதிக்குமா. அந்த தடையுத்தரவை நாங்கள் வேறு காரியத்திற்கு வேண்டுமானால் பயன் படுத்தலாமே தவிற வேறு எதற்கும் அது ஆகாது என்ற ஒரு இறுமாப்பான பதில்.

65 மனித பிணம்தின்னி நிறுவனங்கள் என்று சொல்லும் போது அனைத்து நாடுகளின் மனதிலும் வரும் கேள்வி இதுவாகத்தான் இருக்கமுடியும்.

பாக்கிட்த்தானில் இப்போது எந்த ஒரு சுதந்திர போரோ அல்லது போராட்டமோ இல்லை. அது ஒரு சுதந்திர நாடு, மக்களால் மக்களுக்காக மக்களே ஆளப்படும் ஒரு நாடு.

நிலைமை அப்படி இருக்க இது என்னவோ ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனம் போல் பல குழுக்களாக இவர்கள் மனித வேட்டையாட பயிற்சி கொள்வதும். பல நாடுகளுக்கு சென்று அப்பாவி மக்களை மட்டுமே கொன்று குவித்து இன்பம் காணும் இந்த குழுக்களின் நோக்கம் என்ன.

எங்கேயோ கொலை நடந்த இடத்தில் கிடந்த தலைமுடியின் பாகத்தையும், அவனது கைரேகையையும் மட்டுமே வைத்து கொலைகாரர்களை கண்டு பிடித்து தூக்கிலிட்டு தண்டிப்பது இந்த மனித சமுதாயம். அந்த மனித சமுதாயத்தில். அடுத்த நாட்டு விவகாரங்களில் தலையிடுவது, முடிதால் பயங்கர சாவுகளை நிகழ்த்தி அந்த நாட்டு மக்களை பாதுகாப்பு இல்லாதது போல் ஒரு தோற்றம் கொண்டு வருவது. அதற்காக எண்ணற்ற நிறுவனங்களை அமைத்து கொழுப்பெடுத்த மனிதர்களின் திமிர்பிடித்த பணத்தை பிச்சையாக வாங்கி இப்படி ஒரு பிழைப்பை அந்த நாடே நடத்துகிறது என்றால் அந்த நாட்டை என்ன என்று சொல்வது.

உலக நாடுகள் இந்த மனித சமுதாய சீரழிவு தொழிற்சாலையாக விளங்கும் பாக்கிட்த்தானை இன்னமும் ஒதுக்கி வைக்காமல் இருப்பது ஏன். என்னை கேட்டால் ஒதுக்கி வைப்பது என்று நின்று விடுவதைவிட. இனிமேல் எந்த ஒரு நாடும் இப்படி ஒரு மனித சமுதாய சீர்ரழிவை கனவில் கூட நினைத்து பார்க்க கூட்டத வகையில் பாக்கிட்த்தானுக்கு ஒரு பாடம் கற்பித்து இருக்க வேண்டாமா..........

அதை விடுத்து ஒரு மனித பிணம்தின்னும் குழுவைமட்டும் ஐ நா மன்றம் தடைவிதிப்பதும் அதை அவர்கள் கேளி போசுவது என்ன வகையான செயல் என்றே புரியவில்லை. இப்படியே போனால், இன்றைக்கு அமெரிக்க அதிபரை செறுப்பால் அடித்ததை போல் அனைத்து உலக தலைவர்களையும் இவர்கள் உலக நாடுகளின் முன் செறுப்பால் அடித்து காட்ட தயங்க மாட்டார்கள்.

இதிலே செறுப்பால் அடிப்பது ஒரு அவமான படுத்தும் செயல் என்று இந்த சி என் என் நிறுவனம் ஆராய்ச்சு நடத்தி இதழ்களில் செய்தி வெளியிடுகிறது.

பாக்கிட்த்தானை உலக அளவில் தடை செய்யவேண்டும். அந்த நாட்டோடு உறவோ தொடர்போ கொள்ளக்கூடாது என்று ஒதுக்கிவைக்க வேண்டும். அந்த நாட்டு மக்களில் ஒருவரை கூட தங்களது தேசத்துக்குள் அனுமதிக்க கூடாது. அப்படி செய்தால் தான் இந்த அறிவு கொட்டமக்கள் அந்த மனித பிணம் தின்னும் மக்களை கொழுப்பெடுத்த மனிதர்களின் திமிர்பிடித்த பணத்தில் வளர்த்து உலகை கொல்ல மாட்டார்கள்.

இந்த செயலுக்கு இந்தியா முன்னோடியாக திகழவேண்டும். பாக்கிட்தான் இனிமேல் சீனாவுடனும் கொரியாவிடமே துடுப்பாடம் ஆடிக்கொள்ளட்டும். இந்திய எல்லைகோடுகளையும் நமது எண்ண கோடுகளையும் மூடி உலகை எச்சரிக்கை செய்வோம்.

1 comments:

')) said...

மற்றும் ஒரு படம் இணைக்கப்பட்டுள்ளது, நன்றி தினமலர்.