Wednesday, December 24, 2008

ஐநா மன்ற அதிகாரிகள் பாக்கிட்தானின் ஒத்துழைப்பை பாராட்டுகிறார்கள் (UN official praises Pakistan’s cooperation)

"WASHINGTON, Dec 23: A senior UN official has said that Pakistan has extended full cooperation in implementing UN sanctions against Jamaatud Dawa and Lashkar-e-Taiba.

Richard Barrett, the Coordinator of Security Council’s Al Qaeda and Taliban Sanctions Monitoring Committee, told CNN-IBN in New York that the United Nations had received “across-the-board” cooperation from all Pakistani civil and military agencies.

The committee is responsible for monitoring sanctions imposed by the Security Council on individuals and organisations declared terrorist.

Mr Barrett said he found “very good atmosphere of cooperation” in all his dealings with officials in Pakistan, “whether it’s the government, elected officials, ministries, the intelligence services or the army”.

He also acknowledged that it’s “very difficult to implement the sanctions completely but the Pakistani government is working to ensure fruitful compliance”.

Mr Barrett is expected to visit Islamabad soon to make an assessment of Pakistan’s actions so far and what more needed to be done.

Mr Barrett had earlier said the Security Council had the power to take action against nations if they were found to be not taking action against individuals and organisations branded as terrorists.

Acting after the United Nations declared the Jamaatud Dawa a terrorist group and a front for Lashkar-e-Taiba Pakistan has sealed all of its offices, arrested scores of activists and put its entire leadership under house arrest."

இப்படி ஒரு பரப்புரையை பாக்கிட்தானின் முன்னனி நாள்ழிதல் வெளியிட்டு இருக்கிறது. இந்த செய்தியில் வரிக்கு வரி ஐ நா பாதுகாப்பு சபை ஒருங்கினைப்பாளர் ரிச்சர்டு பாரட்டு இப்படி சொன்னார் அப்படி சொன்னார் என்று எழுதி இருக்கிறது அந்த இதழ்.

இந்த செய்தியின் நோக்கம் பாக்கிட்த்தானின் சாதாரண மனிதனும், அதாவது அரசியல் அறிவும் உலகறிவும் வேண்டாம் ஆனால் மத அறிவு மட்டும் போதும் என்று நினைக்கும் சாதாரண குடியானவனின் குற்ற உணர்ச்சிகளை உள் நாட்டிலும், மற்றும் பாக்கிட்த்தானின் மேல் மத கருணையோடு பார்க்கும் நடு நிலை நாடுகளுக்கு மறைமுகமாக பாக்கிட்த்தான் சொல்லும் செய்தி இது.

இந்தியாவில் நடந்த தீவிரவாத பயங்கரவாத செயலுக்கு துணை போனோரை கண்டு பிடிக்க நாங்கள் உதவிக்கொண்டு தான் இருக்கிறோம். இருந்தாலும் இந்தியா எந்த வித ஒத்துழைப்பும் இல்லை என்று எங்களை அடிப்பேன் என்று மிரட்டுகிறது என்ற செய்திதான் அது.

இவ்வளவு மிரண்டு போய் இருக்கும் இந்த நாட்டின் பேச்சு என்னவோ "வந்து பார் என்று தொனிக்கிறதே ஏன்". ஆப்பசைத்த குரங்காக இன்னமும் இந்த நாடு படப்போகும் வேதணைகளை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது.

ஆமாம் ரிச்சர்டு பாரட்டு "பாக்கிட்த்தானில் 65 தீவிரவாத இயக்கங்கள் இருக்கிறதே அவைகள் எல்லாம் எதற்கு என்று கேட்க்க தோன்றவில்லையா உங்களுக்கு". அத்தணை இயக்கங்களுக்கு என்ன தேவை என்று பாக்கிட்த்தானியரை கேளுங்கள் அதற்கு என்ன சொல்கிறார்கள் என்று உலக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்................

ஓநாய் என்ற ஒரு விலங்கு இருக்கிறது, அது இரத்த வாடையை கண்டு விட்டால் அது தனது பிள்ளை என்றும் கூட பார்க்காது கடித்து குதறி தின்று தீர்த்துவிடும். அந்த ஓநாயின் குணத்தில் மனித குலத்தையே அழிக்கும் நோக்கில் கையில் அணுகுண்டுடன் திரியும் இந்த ஓ நாய்க்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் உங்களது நாட்டில் இப்படி சாவுகளை சந்தியுங்கள். பிறகு இந்த மாதிரியான அறிக்கைகளை வெளியிடுங்கள் பார்ப்போம்.

பட்டே அறியும் முட்டாட்கள் என்று எங்களது ஔவை உங்களை போன்றோரை பார்த்துதான் சொன்னார்களோ மூடர்களே. எவ்வளவு பெரிய பதவியில் இருந்துக்கொண்டு என்ன ஒரு பொருப்பில்லா அறிக்கை. உங்களை எல்லாம் அந்த பதவியில் வைத்து இருக்கிறார்களே அந்த ஐநா மன்றத்தை சொல்லனும்.

இப்படி தான் வரிக்கு வரி இந்த ஓநாய் கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கியது அமெரிக்கா, இன்றைக்கு ஒவ்வொரு நாடாக சென்று வேட்டையை நடத்திக்கொண்டு இருக்கிறது. அந்த நாடுகளிடம் எல்லாம் அணுகுண்டுகள் இல்லை. இந்த ஓநாய்யிடம் அது 10,000 கணக்கில் இருக்கிறது. இந்த ஓநாயை ஒன்றும் அறியா அகிம்சாவாதி என்று சொல்லும் உங்களது அறிவை என்ன என்று சொல்வது.

பார்த்தீர்களா, உங்களது சில வரி அறிக்கையை எப்படி பயன்படுத்தி பரப்புரைகளை நிகழ்த்துகிறது என்று.......விழித்துக்கொள்ளும். இன்றைக்கு எங்களு நடப்பது தான் உங்களுக்கு நளைக்கு, இந்த புற்று நோயை இப்போதே கிள்ளி எறிந்து காப்பாற்றவேண்டும் என்றதே இந்தியாவின் நோக்கம். புரிந்தால் சரி............

0 comments: