Saturday, September 13, 2008

உன்னால் முடியுமா இந்தியா உன்னால் முடியுமா



http://www.rediff.com/news/2003/jan/02ashok.htm

" What were the other reasons for India not going to war?

The US figures high on this list. The presence of US soldiers and airmen in Pakistani air bases and its naval armada in the Arabian Sea, fighting the war in Afghanistan. The Indian Navy had to be limited in its deployment up to 72 degrees longitude to ensure separation of forces. It is no secret that Indian diplomacy failed to get the US to make Musharraf act on his pledge and in the words of US Secretary of State Colin Powell to end cross border terrorism permanently, irreversibly, visibly and to the satisfaction of India. In fact, George Bush said that India has the riht to defend itself against terrorism.

But the paramount reason for India's 'restraint' was the knowledge that any military action would not achieve the political objective of stopping cross border terrorism. It would inflict punishment but not extract total compliance within the threshold of limited war, the gains from which were estimated to be of doubtful utility. The cardinal principle of war (which is the failure of diplomacy) is that you don't start it unless you are sure you can end it by being better off. "

எப்பொழுதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் எல்லோரும் பயன்படுத்தும் வார்த்தை வல்லரசு இந்தியா. இந்தியாவை வல்லரசாக கொண்டு வருவதே எங்களின் நோக்கமும் பணியாகவும் இருக்கும் என்று சொல்வதை நம்மால் காணமுடியும்.



வல்லரசு நாடு என்று சொல்லிக்கொள்ள முடியவில்லை என்றாலும், தெற்காசியாவின் துணைகண்டம் என்று நாம் நம்மை சொல்லிக்கொள்வது வழக்கம்.




அருகில் இருக்கும் சிறு சிறு நாடுகளுக்கு மனிதாப உதவிகள் உட்பட அனைத்து உதவிகளையும் வழங்கும் நாடாகவும் இந்தியா திகழ்வதால் துணைக்கண்டம், பிராந்திய வல்லரசு என்று எல்லாம் சொல்லிகொள்வதில் பொருள் இல்லாமல் இல்லை.




முசாரபை பேச்சு வார்த்தைக்கு ஆக்ராவுக்கு இந்தியா அழைத்து இருந்தது. அந்த கூட்டத்தின் அரசாங்க செய்தி தொடர்பாளரான பெண்மணி அவ்வப்போது பேச்சுவார்த்தையின் முன்னேற்றங்களை பகிர்ந்துகொண்டு வந்தார்.

மூன்று மணி நேரமாக பெரிதாக எந்த ஒரு முன்னேறமும் இல்லாத போது, அப்போது எட்டிய நிலையை விளக்கிவிட்டு எழுந்து செல்ல முற்பட்ட அந்த பெண்மணியை அவரது ஆடைகளை பிடித்து இழுத்து வைத்துக்கொண்டு இப்படி எதுவும் சொல்லாமல் சென்றால் என்ன பொருள் என்று கேட்டார்கள் பாருங்கள் அந்த கூட்டத்திற்கு வந்திருந்த பாக்கிட்த்தனிய நிருபர்கள் சிலர்......




அங்கேயே அந்த பொறுக்கி நிருபர்களை நமது சக நிருபர்கள் அடித்து துவைத்து எடுத்திருக்க வேண்டாம். அட அவர்கள் தான் பயந்தார்கள். அங்கே இருந்த காவல் பணியில் இருந்த காவலர்களாவது செய்தார்களா என்றாலும் இல்லை. இராணுவமோ அணிவகுப்பு கொடுப்பதிலும், உயரமான படையாளை கொண்டு முசாரப்புக்கு கைகுலக்க ஏற்பாடுகளைத்தான் பார்த்தார்களே தவிர இந்த செயலை கண்டிகவும் நினைக்கவில்லை தண்டிக்கவும் நினைக்கவில்லை.




http://www.rediff.com/news/2001/jul/18inpak5.htm




அந்த பெண்மணி பின்னாளில் ஊடங்களுக்கு அளித்த பேட்டியில் சொன்னார், ஆக்ராவில் இருகிறோமா அல்லது பாக்கிட்தானால் கைப்பற்றபட்ட இடத்தில் இருக்கிறோமா என்று தெரியாத வண்ணமாக அவர்களது செயல் இருந்தது. அவர்களது செயலைவிட, நம்மவர்களின் செயல் தான் இனன்மும் கேவலமாக இருந்தது என்று சொன்னார் அவர்.





http://www.thinnai.com/?module=displaystory&story_id=20107223&edition_id=20010722&format=html







" அடுத்தது, பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர்கள், இந்திய அதிகாரி நிருபமா ராவ் அவர்களின் மீது கையை வைத்து இழுத்து, அவரை ஓட ஓட துரத்தி இருக்கிறார்கள், போலீஸ் வந்து அவரைக் காப்பாற்றி இருக்கிறது. பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள் ஒரு இந்திய அதிகாரியை துரத்துகிறார்கள். இந்தியப் பத்திரிக்கையாளர்கள் ஒரு மனிதாபிமானத்துக்காகவாவது அவரைக் காப்பாற்ற வேண்டாமா ? சூராதி சூரர்களான இந்தியப் பத்திரிக்கையாளர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். தனியாக ஈஸிச்சேரில் உட்கார்ந்து வாஜ்பாயியையும் அத்வானியையும் லாரல் ஹார்டி என்று கேலி செய்து எழுத நேரம் வேண்டாமா ? வெட்கம்."





தெரு சண்டையாவோ அல்லது பள்ளி மாணவர்களுக்குள் சண்டை என்றாலோ கூட, மேலே கையை வைக்கும் வரைதான் வாய் பேச்சாக இருக்கும். ஒரு முறை கையை வைத்துவிட்டால் போதும், அதற்கு பிறகு அங்கு நடக்கும் பாருங்கள் ஒரு பிரளயம். அவ்வளவு எளிதில் அதை கட்டுபடுத்த முடியாத அடிதடியாக இருக்கும்.





http://www.dnaindia.com/report.asp?NewsID=1039595




“During my post-Kargil misadventure meeting with American President Clinton, I was told by the American leader that nuclear warheads had been shifted from one station to another during the Kargil war. I was taken aback by this revelation because I knew nothing about it. The American president further told me that the nuclear war heads have been moved so that these could be used against India. I was asked by Clinton why I was unaware of these developments, despite being the elected Chief Executive and the Prime Minister of the country. It was a very irresponsible thing to do on General Musharraf’s part.”





கார்கில் பிரதேசத்தில் கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் தனது துருப்புகளை வைத்துக்கொண்டிருந்தது மட்டும் இல்லாமல். தனது இராணுவத்தின் கட்டுப்பாடில் அண்டை நாட்டு மனித வெடிகுண்டுகளை அமைத்துக்கொண்டு இந்தியாவின் எல்லைகளுக்குள் ஊடுருவி சரியாக ஒரு இராணுவ தாக்குதை நடத்திக்கொண்டு இருந்தது.





அந்த போக்கிரி செயலுக்கு ஒரு சரியான பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றால், அவர்களது எல்லையின்னுள் உள்ள அனைத்து முன்னனி நிலைகளின் மீதும் ஒரு அடையாளம் தெரியாத கப்பலை கொண்டோ, அல்லது அடையாளம் தெரியாத ஒரு விமானத்தை கொண்டோ, அல்லது வேண்டாம் ஒரு அடையாளம் தெரியாத ஒரு படையணியை கொண்டோ ஒரு எதிர் தாக்குதை அவர்களு முக்கியமான ஒரு முன்னனியில் தொடுத்திருக்க வேண்டாமா.





இந்த கபட நாடகம் நடந்து கொண்டு இருக்கையில் நமது முன்னனி படையணி ஒன்று முன்னனி தக்குதலில் மிகவும் சிறந்த அணி அது. பதில் தாக்குதல் ஒன்றை துவக்கினார்கள். அந்த தாக்குதல் இந்த போக்கிரிகளுக்கு பின்னில் இருந்து ஒரு சுட்டாதரவை வழங்கியதற்கு துவங்கிய எதிர் தாக்குதல்.





உடனே அமெரிகாவுக்கு செய்தி பறக்கிறது. உடனே கிளின்டன் ஒரு செய்தியை இந்திய அரசுக்கு தெரிவிக்கிறார். அந்த துள்ளியமான பதில் தாக்குதல் நடத்திய படையணியின் தலைவனை கட்டாய விடுப்பில் இந்த சண்டைகள் முடியும் வரை அனுப்பவேண்டும். அப்படி அனுப்பினால் தான் இந்த சண்டையில் தலையிட்டு உதவுதாக தெரிவிக்கிறார்.





பின்னாளில் அவர் கட்டாய விடுப்பில் அனுப்பட்ட பின்னும் இரண்டு ஆண்டுகள் இந்த தலைவலி நீடித்தது எதை காட்டுகிறது. நமது மண்னில் வந்த நமது எதிரியை தாக்கும் வல்லமையும் நமக்கு இல்லை, உரிமையும் நமக்கு இல்லை என்று.





அப்படி என்ன அவர்களால் நம்மை என்ன செய்துவிடமுடியும். என்ன கண்ட இடங்களில் அணுகுண்டுகளை வீசி இருப்பார்கள். இரசியாவுடன் ஏற்பாடுகளை கவனித்துவிட்டு ஒரு அடி அடித்து இருக்கலாம். அப்படி அடித்து இருந்தால், ஒரு வேளை சீனாவின் தலையீடு வரும் பட்சத்தில் அமெரிக்க உதவ வந்திருக்கும். சீனாவின் மற்றும் பாக்கிட்தானின் கொட்டங்களை ஒருங்கே நசுக்கி இருக்கலாம்.





ஆனால் நாம் என்ன செய்தோம் அந்த அண்டை நாட்டோடு கெஞ்சிக்கொண்டு இருந்தோம். இதிலே அணு வல்லரசு, பிராந்திய வல்லரசு என்றெல்லாம் பெயர் வேறு நமக்கு.





வல்லரசு என்றால் எப்படி நாம் நடந்துகொள்ள வேண்டும் தெரியுமா "பாக் அனுமதியின்றி அவர்களது மண்னில் அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடந்தது: புசு" என்று இன்றைய தலைப்பு செய்தியாக வந்திருக்கிறதோ அதைபோல அல்லவா அவர்களோடு நடந்திருக்க வேண்டும்.





பாக்கிட்த்தான் தான் அணுகுண்டு வீசுவான், நமக்கு பயம். இலங்கை என்ன செய்துவிட முடியும் நம்மை. தமிழர்களை அழிப்பதற்கு அவன் பாக்கிட்த்தானை கூப்பிடுவானாம், சீனாவை கூப்பிடுவனாம். அன்று பாக்கிட்த்தான் ஆடிய அதே கபட நாடகத்தை இன்றைக்கு இவன் நடத்தி காட்டுகிறான்.



என்ன செய்திருக்க வேண்டும் இந்தியா, இன படுகொலையை நிறுத்து. இல்லை எங்களது இராணுவம் வரும் அவர்களை பாதுகாக்க என்று சொல்லி இருக்க வேண்டாமா.





கொரியா, தைவான், ஆங்காங்கு, திபெத்து என்று சீனா தனது அதிகாரங்களுக்குள் அந்த நாடுகளை இந்த நாட்களில் கூட கையக படுத்திக்கொண்டு தான் வருகிறது.




இலங்கையை இந்தியா அடித்து பிடித்தால் எந்த நாடு வர போகிறது. அப்படி அங்கு வந்து நிற்க எந்த நாட்டிற்கும் அங்கு ஒரு அவசியம் இல்லை. அப்படி ஒரு அவசியம் இருந்திருந்தால் எப்பவோ அமெரிக்கா அதை செய்திருக்கும்.



நாளைக்கு இதை எல்லாம் கணக்கில் கொண்டு நாளைய அமையும் பாக்கிட்த்தான் அரசு நாளை இந்தியாவை அடிக்கவும் தயங்காது. நாம் தான் எல்லாவற்றிக்கும் அமெரிக்காவையும்(ஐ நா) இரசியாவையும் கேட்டு கேட்டு முடிவெடுப்போமே.





சொந்த மண்ணையும் காக்க முடியவில்லை, அண்டை நாட்டின் மேல் ஆளுமையை செலுத்த முடியவில்லை. இதில் என்ன வல்லரசு பட்டம் அதும் அணு வல்லரசு.




தேசமே என்றைக்கு உன்னை வல்லமை பொருந்திய நாடாக பார்ப்போமோ.......................சுப்பிரமணி சாமியை கேட்டால் சரியாக சொல்வாரோ......

3 comments:

')) said...

உலக்கைக்கும் உறைக்கின்றமாதிரி உங்கள் பதிவுகள் ஆதாரங்களோடு கோபிக்கின்றது.
நன்றி நண்பரே தேள்தரும் உங்கள் பணிகளுக்கு.

')) said...

நன்றி எல்லாம் பெரிய வார்த்தை நண்பரே, எங்களுக்கும் தான் விளங்க இல்லை இவர்கள் ஏன் இப்படி அடிமை பட்டு கிடக்கிறார்கள் என்று. தேவன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

இந்திய தமிழ் மக்களே, இனியாவது உப்பும்,மிளகாயும் கொஞ்சம் அதிகமாக சேர்க்கவும். (அப்போவாவது சொரணை வருமான்னு பார்க்கலாம்).
1.இந்தியன் foreign policy" ஏன் எப்பவும் கேவலமாக உள்ளது?
2.வல்லரசு என்பது பிற நாட்டை சார்ந்திராமல் தன்னிறைவோடு இருப்பது.
அமெரிக்காவின் அல்லது மற்ற நாடுகளின் தலையீடு இந்தியாவின் தன்னிறைவுக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது.
பல வருடங்களாக ஏன் நம் நிலை இப்படியே உள்ளது?
3.மக்களுக்கு ஏன் மறதி அதிகம்?
(எதனை குண்டு வெடித்தாலும் மறந்து போயிடறாங்களே ஏன்?
4. ராணுவத்தில் அரசியல் மயிரான்களின் தலையீடு எப்போது நிற்கும்?
5.தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் உண்மையிலேயே லங்கன் தமிழ் மக்களுக்காக எதாவது உதவி செய்கிறார்களா?
6. பாகிஸ்தான் காரனும் சீனா காரனும் எப்ப அடங்குவானுங்க?
7.first line ஐ படிக்கவும்.

-ஜுர்கேன் க்ருகேர்
maharastra