Monday, September 22, 2008

செயலலிதா போக்கில் மாற்றம்; பொதுகுழு காட்டும் உண்மை; தினமலரின் சிறப்பு நிருபர்.-- தினமலரில் இலைகாரர்

http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=504&cls=

தமிழகத்தின் தலைவிதியை பார்த்தீர்களா மக்களே. இந்த அம்மா போக்கில் மாற்றம் வந்ததாம். அதாவது எப்படி என்று அந்த சிறப்பு நிருபர் குறிப்பிடவில்லை. ஆனால் மாற்றம் வந்துள்ளது என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். எப்படி அதோ போகிறானே அவன் மிகவும் மோசமானவன் எனக்கு நன்றாக தெரிந்த ஒருவர் சொன்னார். அவர் சொன்ன சரியாகத்தான் இருக்கும் என்று தனக்கு பிடிக்காதவர்கள் மீது தூற்றுவார்களே அந்த கையால் ஆகாதவர்கள். அவர்களை போல் இந்த சிறப்பு நிருபரும் சொல்கிறார் மாற்றம் வந்துள்ளது என்று.

சரி அப்படி என்ன தான் மாற்றம் வந்துள்ளது என்று செய்தியை படிப்போம் என்று பார்த்தால். இந்த அம்மா செய்தி இதழ்களை எல்லாம் படிப்பதே இல்லையாம், அதை அவரே பெருமையாக பலமுறை சொல்லி இருக்கிறார்களாம். அப்படி பட்டவரின் அன்றைய பேச்சு அன்றாட கட்சியின் நிகழ்ச்சிகளையும் நாட்டு நடப்பையும் செய்தி இதழ்களை மேற்கோல் காட்டி பேசினார் என்று.

அட மூட சிறப்பு நிருபா, அப்படி அந்த அம்மா இது வரையில் படிப்பதோ தெரிந்துகொள்ள விருப்பம் என்று சொல்கிறாயே, நீர் என்ன புகழ்கிறீரா அல்லது இலைக்காரனை போல் வஞ்ச புகழ்ச்சியில் இகழ்கிறீரா. பார்த்து இருங்கள், பின்னாளில் எழுத முடியாத வண்ணம் ஆகிவிடப்போகிறது.

தனது சொந்த விருப்பம் உள்ள செய்திகளாக மட்டுமே இருந்தால் மட்டுமே பார்த்து வந்துள்ளார் இது வரை. எப்படி 2 முறை முதல்வராக இருந்த ஒருவர், தனது சொந்த ஆதயத்துக்காக மட்டுமே செய்திகளையோ, கோப்புகளையோ, அலுவல்களை பார்த்துவந்துள்ளார் என்று எந்த தைரியத்தில் முதல் பத்தியில் எழுதியுள்ளீர் சிறப்பு நிருபரே. உயிர் மேல் ஆசை சிறிதும் இல்லை போலும்.

அதிமுகவில் இருந்து மூத்த உறுப்பினர்கள் எத்தணை மக்கள் திமுகவுக்கு ஓடினார்கள் என்று இப்படியா பட்டியல் இட்டு காட்டிக்கொடுப்பது சிறப்பு நிருபா (இலைகரன்). அதுவும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு அந்த அம்மாவோ தனது உடற்பயிற்சிகாக கொடா நாட்டை விட்டு சிறிது உடல் பயிற்சி மேற்கொள்ளும் விதமாக சென்னைக்கு வந்தால், இப்படி அந்த அம்மாவை வஞ்சகமாக வஞ்ச புகழ்சி அணியில் திட்டி தீர்ப்பது இலைகாரனே.

இதிலே ஒரு பத்திமுழுவதும் தினமலரை திட்டினார், சாடினார், குறைபட்டு கொண்டார் என்று வரிசையான பட்டியல் வேறு. தினமலரை புகழவேண்டும் என்றால் புகழ்ந்துவிட்டு போகவேண்டியது தானே பாவும் அதுக்கு எதுக்கையா அந்த அம்மாவை இப்படி பொதுமக்களின் முன் மானத்தை வாங்கவேண்டும்.

இலைக்கார நிருபருக்குத்தான் அறிவில்லை ஆசிரியருக்கும் கூடவா இல்லை. ஒரு வேளை ஆசிரியர்கள் எல்லாம் திமுக ஆட்கள் என்று 6 ஆண்டுகளுக்கு முன் அந்த அம்மா சொன்னதுக்கு பழிவாங்னாரோ என்னவோ. உயர் நீதிமன்றத்தில் வழக்கில் சிக்கி இருக்கும் இந்த நேரத்தில் தினமலருக்கு இப்படி ஒரு வஞ்ச புகழ்ச்சி அணியை சோதனை செய்து பார்க்கத்தான் வேண்டுமா.........இலைகாரரே

0 comments: