Saturday, September 13, 2008

அம்முவாகிய நான் -- தனம் -- திரைவிமர்சனம்.

தனம் இப்போது வந்த படம், அம்முவாகிய நான் கொஞ்ச நாளைக்கு முன்னால் வந்த படம். இரண்டுமே ஒரே கதைதான். கதையை விற்றவர் அங்கே இங்கே மாறுதல்கள் செய்து விற்றாரா அல்லது இவர்களே இப்படி மாற்றி கொண்டார்களா தெரியவில்லை.

இரண்டு கதையிலும் கதையின் நாயகனைவிட நாயக்கிக்கு தான் அதிக பகுதிகள். படமே அவளை சுற்றி தான் வரும். இரண்டு கதையிலும் நாயகி ஒரு விபச்சாரியாக வருவர்.

அங்கே கணவனது கனவு நிறைவே வில்லன் இவளுக்கு காம வலை வீசுவான், இங்கே காம வலை வீச வசதியாக இருக்கவே ஊருக்கு கொண்டு வருவான்.

அந்த படத்தில் முன்னாள் வாடிக்கையாளன் கணவனிடமே அவளை இப்போது வருவாயா என்று கேட்டு விட்டு பிறகு மணமானது தெரிந்ததும் மண்ணிப்பு கேட்ப்பார். இங்கே ஒரு காவலரை வைத்து அதே காட்சி.
அன்கேயும் எதிகாலத்தை அழித்தவன் கொலை, இங்கேயும் குடும்பத்துடன் கொலை.

அங்கே எழுத்தாளன் கொண்ட புரட்சிகளை எல்லாம் இங்கே மூடப்பழக்கங்களாக மாற்றி மாற்றம் மட்டுமே செய்துவிட்டு பாவம் சங்கீதாவை இப்படி பாழாக்கி இருக்கிறார்கள். அவரும் ஏதோ விருதுகள் கிடைக்கும் என்று ஒத்துக்கொண்டு நடித்தார் போலும்.

உங்க அட்டகாசத்திற்கு அளவே இல்லையா மக்களே...... உங்களுகே வெளிச்சம்.......

4 comments:

')) said...

அதென்னவோ எனக்கு "இந்த" டாபிக் கொண்டு எடுக்கப்படும் படங்களில் மிகையும் பாசாங்கும் தான் தெரிகின்றன.

')) said...

வாங்க இரத்தனேசு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உண்மை தான் நீங்கள் சொல்வது. ஆங்கிலத்தில் Leaving Las Vehas என்று ஒரு படம் பாருங்கள் எவ்வளவு இயல்பாக இருக்கும் என்று. R.K.நாராயண் அவர்களின் கதை ஒன்று ஞாபகத்திற்கு வரும் இந்த கதையை பார்க்கும் போது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

')) said...

i noticed now a days why most of the women oriented films are revolving in the prostitution topic.....

Vera urupadiya kathai onnum kodambakkathuku kedaikalleya..

')) said...

செயம் கொண்டான் பாருங்கள், நீங்கள் எதிர்பார்ப்பது எல்லாம் இருக்கும். வருகைக்கும் கருத்துகும் நன்றி இராசேசு