Saturday, March 23, 2019

தமிழகமே ஒரே ஒரு பாமக போதும் - சீமான்

தேர்தல் பரப்புரைகளில் தற்பொழுது அசத்துவது சீமானின் அரசியல் பேச்சுகள் தான்.

சீமானின் பேச்சும் சரி சமீபமகாக அவரது கட்சி சார்பாக வரும் அரசியல் விளம்பரங்களும் சரி அசத்தல் என்றால் அப்படி ஒரு அசத்தல்.

தான் ஆட்சி பொருப்புக்கு வந்தால் என்ன என்ன எல்லாம் செய்வோம் என்று மிகவும் அழகாகவும் வரிசையாகவும் விவரிப்பதில் அவருக்கு நிகர் அவரே.

இப்படி தான் பாட்டாளி மக்களுக்காக உழைக்க என்னக்கு ஒரு வாய்ப்பை கொடுங்கள் என்று கேட்டும் அதை வைத்துக்கொண்டு நீதி கேட்பேன் என்றும். உழைக்கும் மக்களை யாரும் கண்டுக்கொள்ளவே இல்லை தான் தான் உழைக்கும் மக்களின் ஏக போக பிரதிநிதி போல அல்லவா பேசினார்கள். மக்களும் பாமகவை நம்பி வாக்கும் அளித்தது. ஆனால பாமகவோ அந்த வாக்குகளை வைத்து நல்லா கல்லா கட்டியது தான் மிச்சம்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு பக்கம் செல்வதும் கடைசியில் தான் செல்லும் பக்கம் தான் வெற்றி என்றும் சொல்லும் அளவுக்கு சென்னது பாமக.

இந்த நிலையில் கைவிடப்பட்டு அரசியல் அனாதையாக ஆக்கப்பட்ட பாமக மாற்றம் முன்னேற்றம் மாங்கா மணி என்று இப்பொழுது பல் இளித்துக்கொண்டு ஏன் இப்படி தரைகுறைவான வேலை என்று கேட்டால் 8 வருடம் நேர்மையாக இருந்தோம் ஆனால் யாரும் கண்டுக்கவில்லை அதனால் தான் இப்போது திருட ஆரம்பித்தோம் என்று இப்போது மேடைக்கு மேடை முழங்குகிறார்கள்.

இதே பாதையில் இப்போது சீமான், மறைமுகமாக பாசகை ஆதரிப்பதும் மேடைக்காக கொள்கை பேசுவதும் சீமானுக்கு கைவந்த கலை.

இதே சீமான் முன்பு இலங்கை பிரச்சனை என்று அதிமுகவையும் பாசகவையும் ஆதரித்தவர். ஒரு காலத்தில் தன்னை பகுத்தறிவாளி என்று சொல்லிக்கொண்டவர் பிற்காலத்தில் மோடி சொன்ன அதே வாசகம், 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழகம் கண்டது என்ன என்று அருமையாக கேட்டார், பிறகு அதே தேர்தலில் கடலூரில் அரசியல் அனாதையாக்கப்பட்டார்.

இன்று மறுபடியும் மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் குட்டையை குழப்பும் வேலையில் இறங்கி இருக்கிறார். அழகாக பேசுவார் மேடையில் தொடர் வசனம் பேசுவார் நல்ல கொள்கைகளை வைத்து இருப்பதாக சொல்வார். ஆனால அவரது வரலாறு எங்கே வாய்பு வருகிறதோ அங்கே தாவுவது தான் அவரது இயல்பு. இப்படி தனக்கும் சரி இயகத்துக்கும் சரி எந்த கொள்கையும் இல்லாத கட்சியும் தலைவர்களும் மற்றும் ஒரு பாமகவிற்கு சமம். ஆகவே இன்னும் ஒரு பாமகவை உருவாக உதவாதீர்கள் வாக்காள மக்களே..........

இப்படி சீமான் சொல்வது போல் 2014ல் மோடி மேடைக்கு மேடை முழங்கினார், மக்களும் நம்பி அவரிடம் ஆட்சியை கொடுத்தார்கள். பிறகு தான் தெரிகின்றது மோடி வெரும் வசனம் மட்டுமே பேசும் நடிகர் மட்டும் தான் மற்றபடி தலைவர் எல்லாம் ஒன்றும் இல்லை என்று. சீமானை நம்பி தமிழகத்தை நாசம் செய்துவிடாதீர்கள் மக்களே எச்சரிக்கை......

0 comments: