Wednesday, March 13, 2019

பொள்ளாச்சி வழக்கில் என்ன நடக்கும்

தமிழகம் முழுதும் இப்போது பேசப்பட்டு வரும் பொள்ளாச்சி வழக்கிற்கு முன் வந்த நிர்மலா தேவி வழக்கு தான் ஞாபகத்திற்கு வருகின்றது.

பணம் மற்றும் மற்றவைகளை காட்டி அடுத்த வீட்டு பெண்களை அதுவும் படிக்க அனுப்பிய இடத்தில் ஒரு பேராசிரியை இப்படி கேவலமாக நடந்துகொண்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு மட்டும் இல்லாது வழக்கும் நடந்துக்கொண்டு இருக்கிறது.

நீதி என்றால் அது அனைவருக்கும் ஒன்று தான் என்று அனைத்து நாடுகளிலும், புத்தகங்களிலும் இருந்தாலும் இந்தியாவில் நீதி எப்பவுமே மனு நீதிதான். குற்றம் பார்த்து, குற்றவாளி பார்த்து, பாதிக்கப்பட்டோர் பார்த்து தான் நீதி வழங்கும் முறை காலம் காலமாக இந்தியாவில் புரையோடி போய் கிடக்கிறது.

இந்த அழகில் அந்த 4 பேரையும் உயிருடன் கொளுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வேறு மக்களுக்கு. அந்த முட்டாள் மக்களை நினைத்து சிரிப்பது தவிர வேறு என்ன செய்ய முடியும். ஆனால பட்ட நிர்பயா கொலை வழக்கில் கூட இந்த மனு நீதிதான். இந்த பொள்ளாச்சி வழக்கில் மட்டும் என்ன நடந்துவிட போகிறது. அதுவும் அதிமுகவை பாசக விலைகொடுத்து வாங்கி ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்து இருக்கும் பாசக தனது மனு தர்மத்தை விட்டு கொடுத்துவிடவா போகிறது. நிர்மலா தேவி 200 நாட்களாக நீதிமன்ற படியேறினார் அவரது பற்கள் எல்லாம் உடக்கப்படு இருக்கிறது. பார்ப்போம் இந்த வழக்கில் யார் யார் பற்கள் எல்லாம் உடக்கப்படுகின்றது என்று.....

0 comments: