Friday, March 8, 2019

மோடி தமிழக தேர்தலில் இப்படி தான் இனி பேசுவார் கர்னாடகாவில் பேசியது போல்

தமிழகத்தின் அப்துல் கலாம் திராவிட கட்சிகளால் அவமானப்படுத்தப்பட்டார். அவரின் நினைவிடத்தை கூட அமைக்கவிடாமல் திராவிட கட்சிகள் சதி செய்தன. ஆகையால் பாசகவிற்கு வாக்களிக்க வேண்டும்.

பெருந்தலைவர் காமராசை அவர் சாகும் வரை அவமான படுத்தியது அன்றைய காங்கிரசும் திராவிட கட்சிகளும். ஆகையால் பாசகவிற்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் படித்த போது சர் சிவி இராமனை அன்றைய ஆங்கில அரசும் அதன் பிறகு வந்த காங்கிரசு அரசும் அவமான படுத்தியது, ஆகையால் பாசகவிற்கு வாக்களிக்க வேண்டும்.

கூடங்குளம், நெடுவாசல், கதிராமங்களம், தேனியின் மலைகள், காவிரி டெல்டா என்று வளமிக்க இடங்களில் நெய்வேலியில் தோண்டியது போல் ஒரு பெரிய அதளபாதாள சுரங்கங்களை அமைத்து 200 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த நினைத்தது பாசக அரசு. ஆனால் அதை திராவிட கட்சிகளும் பொதுவுடமை கட்சிகளும் சேர்ந்து கெடுத்து அந்த 200 பேருக்கு கிடைக்க வேண்டிய வேலையை கிடைக்க விடாமல் செய்துவிட்டார்கள்,  ஆகையால் பாசகவிற்கு வாக்களிக்க வேண்டும்.

பாசக ஆட்சியில் தான் தமிழகத்தின் ஏழை விவசாயிகளும், விவசாய கூலிகளும் அவர்களின் பிள்ளைகளும் நீட்டு பரீட்சை எழுத இராசத்தான் கேரளா ஆந்திரா கர்னாடகா என்று சென்று உல்லாச உலாவும் மேற்கொண்டார்க்ள். இன்னும் அது போல ஏழைகள் தங்களின் அன்றாட தேவைகளுக்கும் இன்ன பிறவைகளுக்கும் நாள் தோறும் மற்ற மாநிலங்களில் சென்று தங்கள் தேவைகளை பூர்த்தி செய்த்துகொள்ள பாசகவிற்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக மலைகளும் நல்ல பாறைகளுடன் குன்றுகளும் இருப்பதனால் வருடா வருடம் நாட்டில் மழை வந்து கிரிகெட்டு போட்டி பாதியில் நிற்க காரணமாக அமைந்து விடுகின்றது. ஆகவே கிரிகெட்டு போட்டிகளை தடையின்றி நடத்த வெண்டும் என்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக மலைகளை எல்லாம் அதாணி அம்பாணியிடம் சொல்லி  ஒரே வருடத்தில் தரைமட்டமாக ஆக்கிவிட்டால் இனி தமிழகத்தில் தான் எல்லா கிரிகெட்டு போட்டிகளும் நடக்கும், ஆகையால் பாசகவிற்கு வாக்களியுங்கள்.

தமிழ் ஒரு சிறந்த பழமையான மொழி ஆகையால் பாசகவிற்கு வாக்களியுங்கள்.

தமிழகத்தில் பெரியார் ஆற்றிய தொண்டு மகத்தானது ஆகையால் பாசகவிற்கு வாக்களியுங்கள்.

தமிழகத்தை காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அநீதி வழங்கிவிட்டது அதற்காக பாசகவிற்கு வாக்களியுங்கள்.

தமிழகத்தை 1947க்கு முன்னர் வெள்ளைகாரர்கள் ஆட்சி செய்த்தார்கள் அதனால் பாசகவிற்கு வாக்களியுங்கள்.

இப்படி பசு மாட்டு கட்டுரையை மனப்பாடம் செய்து வந்து பரீட்சையில் தெண்ணைமர கட்டுரைக்கு அதை மாற்றி எழுதியவன் கணக்காக பேசப்போகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை..........கண்டு இரசிப்போம்

1 comments:

Anonymous said...

Sema boss, super, definety he will speak like this only.

Br
Christo