Tuesday, March 19, 2019

என்னுடைய ஓட்டு மோடிக்கு தான் - ஏன் - 2

1994ல் இருந்து பொறியியல் எந்த படிப்பு படித்தாலும் வேலை கிடைத்துக்கொண்டு இருந்தது 2015 வரை. 2015க்கு பிறகு மெல்ல மெல்ல உலக அளவில் வேலை கிடைக்காமல் போக இந்தியாவிலும் யாருக்கும் வேலை கிடைக்காமல் போக துவங்கியது. 2014ல் மோடி தேர்ந்து எடுத்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு புதிய வேலை வாய்புகளை உருவாக்கி தருவேன் என் என்று உறுதி அளித்தார் மோடி. ஆனால் 2014 முதல் 2019 மார்ச்சு மாதம் வரை அவரால் அந்த ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்புகளை உருவாக்கவே முடியவில்லை. -- அந்த ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலைவாய்புகளை உருவாக்க மோட்டிக்கு இன்னும் ஒரு வாய்ப்பை கொடுக்க எனது ஓட்டு மோடிக்கு தான்.

2014ல் மோடி பிரதமரானால் வெளி நாட்டில் இருக்கும் கருப்பு பணம் எல்லாம் கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் 15 இலட்சம் ரூபாய் கொடுப்பேன் என்று உறுதி மொழி கொடுத்தார். ஆனால் 2019ல் காபந்து அரசாக மாறும் வரை மோடிக்கு அந்த 15 இலட்சம் ரூபாய் கொடுக்கும் வாய்ப்பை நிதி அமைச்சகமும் முந்தைய காங்கிரசு அரசும் சேர்ந்து கிடைக்கவிடாமல் சதி செய்ததுனால். -- மோடிக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் தான் அவர் சொன்னது போல் வீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பணம் மோடியால் மட்டுமே கொடுக்க முடியும் ஆகையால் என்னுடைய ஓட்டு மோடிக்கு தான்.

2016 நவம்பர் 8ம் தேதி முதல் 2019 இது வரை எனது பணி இடங்களில் ஐயா நான் வங்கியில் பணம் எடுக்க போகவேண்டும் நீண்ட வரிசையில் நிற்கவேண்டும் ஆகையால் என்னால் இன்று வேலைக்கு வர முடியாது என்று சொன்னால், எங்களது வேலை அலுவலகளில் விடுப்பு கடிதம் வாங்காமலும், விடுப்பை எனது கணக்கில் இருந்து கழிக்காமலும் இலவசமாக விடுப்பு கொடுப்பதனால் மோடிக்கு தான் எனது ஓட்டு.

காந்தி ஒரு கொடூரமான மனிதன் அந்த கொடூர மனிதனை கொன்ற கோட்சே எவ்வளவு நல்லவர் என்றது எனக்கு இது வரை தவறாக சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது சிறு வயதில் இருந்து. அந்த தவறை சரி செய்தது மோடி. அந்த மா மனிதன் கோட்சேவுக்கு பட்டேல் சிலையை விட அதிக செலவில் சிலையை செய்து இந்த உண்மையை உலக்கு அறிவிக்க மோடிக்கு மறுபடியும் ஒரு வாய்பை வழங்க வேண்டும் அதனால் என்னுடைய ஓட்டு மோடிக்கு தான்.

2019ல் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்திய ரூபாய் நோட்டுகளில் உத்தமராம் உலகை காக்க பிறந்து கொடூரன் காந்தியை கடைமையாக கருதி கொலை செய்த கோமனாம் கோட்சேவின் படம் பதிக்க மோடி தான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் ஆகையால் எனது ஓட்டு மோடிக்கு தான்.

4 எழுத்துகளை படித்துவிட்டோம் என்ற திமிரில் கௌரி லங்கேசு போன்றோர்கள் இந்தியாவின் இந்து ஆட்சி அமைவதை எதிர்த்து குரல்கொடுத்து வந்தார்கள். இந்தியாவில் இந்து ஆட்சியை கொண்டு வந்து இந்துகள் தவர மற்றை அனைவரையும் கூண்டோடு பரலோகம் அனுப்ப மோடியின் ஆட்சி வந்தால் தான் அது நடக்கும். ஆகவே என்னுடைய ஓட்டு மோடிக்கு தான்.

0 comments: