Friday, March 22, 2019

பொள்ளாச்சி சம்பவத்தை இவர் விசாரித்து இருந்தால் இந்நேரம் தீர்பே வந்து இருக்கும்

செளபாக்கியவதி மோடியின் அரசின் கீழ் நியமிக்கப்பட்டவர்கள் மிகவும் ஞாயமானவர்கள் என்றும். அவர்களால் மட்டும் தான் நீதியையும் ஞாயத்தையும் கட்டிக்காக்க முடியும் என்றும் பரவலாக எப்போதும் பேசப்படுவது உண்டு.

அப்படி செளபாக்கியவதி மோடியின் தலைமையில் இயங்கும் இயக்கமாக இருந்தாலும் சரி இல்லை ஒரு சாதாரண தொண்டனாக இருந்தாலும் சரி, நாட்டின் நலனையும் நாட்டின் எதிர்காலத்தையும் மட்டுமே மனதில் கொண்டு எந்த வித விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்காமல் மக்களை காக்கும் பணியாக மட்டும் கொண்டு கடமையாற்றும் யாரானாலும் சரியானதொரு விசாரணையை நடத்த கூடியவர்கள் என்றும் நம்பப்படுகின்றது.

வடக்கே நடந்த சொராபுதின் வழக்கு முதல் கடைசியாக தூத்துகுடி ஆலையை திறக்கலாம் என்ற தீர்ப்பு வரை மிகவும் ஞாயமாக அழகாகவும் ஆழமாகவும் விசாரித்து வழங்கப்பட்டவைகளாகும்.

அப்படி பட்ட ஒரு அமைப்பையோ அல்லது விசாரணை குழுவிடனோ விசாரிக்க கொடுத்து இருக்கலாம். அதை விடுத்து தமிழகத்தின் சிபிசிஐடி கையில் இந்த பொள்ளாச்சி வழக்கு ஏன் கொடுப்பான் ஏன்.

இதற்கு முன்னால் செளபாக்கியவதி மோடி அவர்களின் நேரடி பார்வையில் பணியாற்றும் பன்வாரிலால் வெறும் 6 மணி நேரத்தில் குற்றவாளி யார் என்று கண்டு பிடித்து நீதி வழங்கியது அனைவருக்கும் நினைவில் இருக்கும் என்று நம்புகின்றேன்.

அந்த மாமனிதன் பன்வாரிலால்லிடம் இந்த பொள்ளாச்சி வழக்கை விசாரிக்கும் பொருப்பை கொடுத்து இருந்தால் இன்னேரம் அந்த குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்திருப்பார்கள். 21 மாதமாக பிணையில் கூட வெளி வர முடியாத அளவிற்கு கவணிப்பு அற்புதமாக இருந்து இருக்கும். தமிழகம் தவறு செய்துவிட்டதே என் செய்ய.......

0 comments: