Saturday, March 9, 2019

2019ல் பாசக ஆட்சிக்கு வந்தால் இனி ரூ50,000 கூட வங்கியில் இருந்து எடுக்கமுடியாது

 நமது வங்கி கணக்கில் இருக்கும் நமது பணத்தை எவ்வளவு எடுக்கலாம் என்று இந்தியாவில் ஒரு சட்டம் பாசகவால் கொண்டு வரப்பட்டு மிகவும் அவதிக்குள்ளாக்கப்பட்டார்கள். கிட்ட தட்ட 2016ல் துவங்கிய இந்த துன்பம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் பழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டு, இவ்வளவு தான் கொடுக்குறானுக என்று புலம்பிவிட்டு போகும் சாமாணியர்கள் தான் அதிகம்.

இதுவே 30,000 கோடி, 5,000,00 கோடி என்று நாட்டை கொள்ளை அடித்துக்கொண்டு போகும் குசராத்து பணக்காரர்களுக்கு இந்த விதிகள் எதுவும் பொருந்தாது என்று ஒருவர் இல்லை பல முறை நிரூபித்துள்ளார்கள். அது மட்டும் இல்லாது பணக்காரர்கள் வங்கிகளில் வாங்கிய கோடிக்கணக்கான பணத்தை அவர்கள் கட்டவேண்டாம். அப்படியே கட்டிதான் ஆகவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டால் வாங்கிய 50,000 கோடி ரூபாய்க்கு வெறும் 500 கோடி மட்டுமே கட்டிணால் போதும் என்று இது வரை பல வழக்குகளில் நிரூபித்துள்ளார்கள். அந்த வெறும் 500 கோடியாவது கட்டினார்களா அல்லது அந்த கணக்கை எழுதும் கணக்காளரிடம் வெறு, 5 கோடி மட்டுமே கொடுத்துவிட்டு நீதிமன்றதில் கட்டியாச்சு என்று சான்றிதழ் வாங்கினார்களா என்றும் தெரியாது.

ஆக மொத்தம் இந்த பண கணக்குகள் மற்றும் கண்டிப்புகள் எல்லாம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு மட்டுமே ஏன்று பாசக வெளிப்படையாகவே சொல்லி கொண்டு வரும் இந்த வேளையில். காசுமீரத்தில் சமீபத்திய கையெறிகுண்டுகளை வீசியவனுக்கு கொடுக்கப்பட்டதாக வரும் செய்திகள் வெறும் 50,000 ரூபாய்க்கள் மட்டும்.

இந்த செய்தி முதலில் தேசபக்தி சம்மந்தப்பட்டதாக பரப்பபட்டு வருகிறது. 2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ஆதார் அட்டை, பாண் அட்டை, ஓட்டுனர் உரிமம் என்று எல்லாவித அடையாளங்களையும் காட்டாமல் யாரும் கையில் ஒரு 100 ரூபாயை கூட வங்கியில் இருந்து எடுக்கவோ போடவோ முடியாது. அப்படி இருக்க இந்த 50,000 பணம் எங்கு இருந்து எடுக்கப்பட்டதாக பாசக வெளியிட்டு இருக்க வேண்டும்.

ஆனால் பதிலாக ரூ50,000 பணம் தீவிரவாதத்திற்கு பயன்படுத்தப்பட்டது என்று மட்டும் செய்திவெளியிடுகின்றது. இந்த அழகில் புதிதாக வெளிவந்த ரூபாய் நோட்டுகளில் எலக்ராணிக் சிப்புகள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், எந்த எண்ணுடைய நோட்டு இப்போது எங்க இருக்கிறது என்றும் பூமிக்குள் புதைத்து வைத்தாளும் செயற்கைகோள் காண்பித்துவிடும் என்றும் விளம்பரபடுத்தப்பட்டதை நினைவில் இருந்து மறையாத இந்த சின்ன இடைவெளியில் இப்படி ஒரு பகீர் புகாரை வெளியிட்டு இருக்கிறது பாசக அரசு.

ஆகவே அடுத்த முறை பாசக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் வெறும் 50ரூபாயை கூட நமது வங்கி கணக்கில் இருந்து நாம் எடுக்க முடியாது. அதற்கு பதிலாக அந்த நமது பணம் நேராக நிரவ்மோடிகளுக்கும் மல்லையாகளுக்கும் அதாணிக்களுக்கும் அம்பாணிகளுக்கும் கொண்டு சென்று கொடுத்துவிட்டு, உங்கள் கணக்கில் 50 ரூபாய் பணம் கூட எடுக்காமல் இருந்ததுக்கு தண்ட தொகை என்று எடுத்துகொண்டு விடுவார்கள் இந்த பாசக........

0 comments: