Wednesday, January 27, 2016

இஞ்சி இடுப்பழகி - பாவம் அனுசுக்கா இப்படியா செய்வீங்க - All About Steve

முதல் பார்வையில் இஞ்சி இடுப்பழகியை பார்க்கும் போது அடடே ஒரு வெகுளி பெண்ணின் மெல்லிய உணர்வுகளை எப்படி அருமையாக காட்டி இருக்கிறார்கள் என்று தான் தோன்றும்.

ஆங்கிலத்தில் 2009ல் All About Steveன்னு ஒரு படம் வந்தது. அந்த படமும் இந்த படமும் ஒன்று. அந்த படத்தை இந்திய மொழியில் எடுக்கிறேன் என்று இந்த கோணங்கி தனம் செய்து இருக்கிறார்கள் இஞ்சி இடுப்பழகியாக.

ஒரு பெண் பாத்திரத்தை எப்படி அப்பாவியாகவும் வெகுளியாகவும் காட்டமுடியும், இந்த கதையாசிரியருக்கு தெரிந்த ஒரே வழி குண்டான பெண்ணாக காட்டினால் வஞ்சனையில்லாமல் வளர்ந்து இருக்கிறார் என்று காட்டிவிட்டால் போச்சு என்று நினைத்தார் போலும்.

உடலில் வந்த நோயின் பால் இயல்பான வாழ்க்கையில் இருந்து தனிமைபட்டு வாழும் ஒரு பெண்பாத்திரம் ஆங்கிலத்தில்.

இயல்பான வாழ்க்கையை அந்த பெண் நாடவேண்டும் என்று அவளது பெற்றோர்களே அவளுக்கு ஆண் துணையை பெற்று கொடுக்கும் பொருட்டு ஒரு ஆணை வீட்டிற்கு வரவழைக்கிறார்கள். அவனை பார்க்கும் வரையில் இது வரை வந்து சென்ற நோஞ்சான்களை பார்த்தவள் ஒரு இளம் அழகனை பார்த்ததும் அவன் பால் ஈர்ப்பு கொள்கிறாள். ஆர்யாவை பார்த்ததும் அனுசுக்கா நெளிவதை போல்.

அன்றைய தினத்தில் இருந்து அவனது நினைப்பாகவே இருக்கிறாள் தான் எழுதும் குறுக்கெழுத்து போட்டிகளில் கூட அவனை பற்றியவைகளாகவே எழுதவே ஒப்புக்கு சப்பாக இருந்த வேலையும் போகிறது.

இருப்பினும் தொலைக்காட்சியில் படம்பிடிக்கும் ஆளான நாயகன் அப்போது எங்கே இருக்கிறான் என்று தேடி செல்லும் இடத்தில் ஒரு விபத்தில் மாட்டிக்கொள்கிறாள். பிறகு அந்த இடத்தில் இருந்து அவளை மீட்கும் போராட்டத்தில் அவளுக்கு கிடைக்கும் விளம்பரமும் அவளது பொருப்புணர்களையும் பார்க்கும் மக்கள் நெகிழ்கிறார்கள். நாயகனுக்கு  இவளையா உதாசினப்படுத்தினோம் என்று வருந்தும் அளவிற்கு செல்கிறது. கடைசியில் அவளையே காதலிப்பதாக சொல்வது போல் முடியும் அந்த ஆங்கிலப்படம்.

ஆனால் அவளோ இப்போது செய்தி துறை கொடுத்த விளம்பரத்தின் அடிப்படையில் உன்னிடம் கிடைக்கும் அனுதாபத்தை விட ஒன்றும் இல்லாத போதும் என்னோடு இருந்த அந்த வெகுளிக்கூட்டம் போதும் என்றும் கம்பீரமாக செல்வாள்.

இதை இந்திய மயம் ஆக்குகிறேன் என்று ஒரு வில்லான், பெண் பார்க்கும் படலம் இன்னும் ஒரு பெண், அம்மாவுடன் சண்டை என்று குழப்பு குழப்பு என்று குழப்பி இருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் காட்டியது போல் அந்த குழந்தையை வெளியே கொண்டு வரும் வரை தானும்  வெளியே வரப்போவது இல்லை என்று சொல்லும் அந்த அழுத்தமான சம்பவங்கள் தமிழில் இல்லை. காப்பாற்றுகிறேன் என்று அந்த நிருபரும் உள்ளே விழுந்ததும் அவனுடைய எடை எவ்வளவு இருக்கும் என்று கணக்கிட்டு அவனையும் சேர்த்து மேலே இழுத்து வர போராடும் போராட்டம் தமிழில் இயல்பாக அமையாமல் போனது கற்பனை பஞ்சமே.

அது எல்லாவற்றையும் கூட மன்னித்துவிடலாம், இந்த இலக்கிய படைப்புக்காக உடலை பருக்க சொல்லி அனுசுக்காவை மேலும் எடை கூட்ட சொன்ன செயலை மட்டும் மன்னிக்கவே முடியாது.

ஆங்கில கதையில் வரும் நாயகியின் பாத்திரம் போல் இவரும் வெகுளியாக சொன்னது போல் இந்த எடை கூட்டலுக்கு ஆட்பட்டது கொடுமையே.

பாவம் அப்படி இப்படி என்று கடைசியில் அனுசுக்காவின் இரண்டு காதிலும் காலிப்பூவை சொருகிவிட்டார்கள் நமக்கும் தான்.......

0 comments: