Thursday, January 21, 2016

ஆக குடியரசு தின விழா 2016 ஒரு பதட்டமான நிலையில் தான் கொண்டாடுவோமா...

இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பாக்கிட்தானம் 130 அணு ஆயித ஏவுகணகளை இந்தியாவுக்கு எதிராக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க எச்சரித்து இருப்பதாக தமிழ் இந்துவும், இராணுவ நடவடிக்கை என்றால் மீளமுடியா நிலைக்கு இந்தியாவை தள்ளும் நிலையில் 130 அணு ஆயுத ஏவுகணைகளை பாக்கிட்தான் நிறுத்தியுள்ளதாக விகடனும் தெரிவிக்கிறது.

இது வரை சப்பான் மேல் விழுந்த ஒரு குண்டே அடுத்த நாட்டின் மீது வீசப்பட்டு இருக்கும் ஒரே அணுகுண்டு. 130 குண்டுகளை இந்தியாவின் வீசினால் என்ன ஆகும் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை.

ஆனால் இது எப்படி இந்தியாவின் சர்ச்சை மட்டும் ஆகும், அருகில் இருக்கும் சீனா, இலங்கை, வங்கம், மற்ற சிறு நாடுகளும் தான் பாதிப்புக்கு உள்ளாகும். ஆகையால் போரை தவிர்ப்பது இந்தியாவிற்கு மட்டும் அல்ல இந்தியாவின் அருகில் இருக்கும் நாடுகளுக்கும் அவசியமான ஒன்று தான். இந்தியாவுடன் சேர்ந்தோ அல்லது தானாகவோ இப்படி இரு போர் மூளாமல் இருக்க என்ன என்ன செய்ய வேண்டுமோ அவைகளை செய்து தான் ஆகவேண்டிய கட்டாயமும் கடமையும் உண்டு.

அது சரி இந்தியாவை பற்றி இவ்வளவு கவலை கொள்ளும் அமெரிக்கா, அந்த ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு போகாது என்று எதன் அடிப்படையில் நம்புகிறது. அப்படி கிடைக்கும் கால் அமெரிக்கா வந்து தான் வெடிக்க வேண்டும் என்று இல்லை அமெரிக்காவின் நேச நாடுகளோ அல்லது அமெரிக்க சுற்றுலா மக்கள் அதிகம் இருக்கும் நாட்டில் வீசினால் அமெரிக்கா எப்படி சமாளிக்க போகிறது என்றும் தான் கவலை பட வெண்டும்.

என்னவோ இது இந்தியாவின் கவலை என்று ஒருவரும் இந்தியாவை தனித்து விடுவது ஆகாத காரியம் தான்.

ஆனால் இந்தியா என்ன செய்ய போகிறது, அது தான் மோடி இருக்கிறாரே அவரை மட்டும் அனுப்பினால் போது அவ்வளவு தானே. தான் ஒருவனாக சென்று வெள்ளத்தில் தவித்த 10000 குசராத்திகளை காப்பாற்றியது போல் 130 குண்டுகளையும் கையிலே பிடித்து பாக்கிட்தானத்திலே திருப்பி விட்டெறிவார் என்று நம்புவோமாக..........

இந்தியாவுக்கு எதிராக மட்டும் என்று இல்லாமல் என்ன என்ன போக்கிறி தனத்தை மேற்கொள்கிறது என்று வெளிப்படையாக உலகுக்கு பகிரும் வரையில் சிக்கல் தான். என்ன என்ன போதை பொருட்களில் இருந்து ஆயுதங்கள் வரை உலக கள்ள சந்தையில் பாக்கிட்தானம் உலவ விடுகிறது என்ற தகவல்களே அமெரிக்காவிற்கு போதுமானது தான். அது சரி அமெரிக்காவால் மிகவும் தேடப்பட்ட நபரான ஒசாமா பின்லேடன் புகலிடம் கொடுத்ததற்கு என்ன பாக்கிட்தானத்தின் தலையா போய்விட்டது........ அடப்போங்கப்பா உங்க அணு ஆயுத அறிக்கை போர்கள்........

0 comments: