Thursday, January 21, 2016

சல்லிகட்டு அரசியலின் பின்னணி என்ன - விழித்துக்கொள்வார்களா தமிழர்கள்

இதை விளக்கும் முன்பு இந்த சல்லிக்கட்டில் தேசிய கட்சிகள் பாராபட்சம் இல்லாமல் தடைவிதிப்பதின் மர்மத்தின் முன் மாதிரியை பார்த்துவிட்டு வந்தால் தெளிவாக புரியும்.

இந்தியாவை ஒளிர வைக்க உலகமயமாக்கலின் முக்கியத்துவத்தை மக்களுக்கு புரிய வைக்க படித்தவர்கள் மத்தியில் பாடம் எடுத்தார்கள் அரசியல் வாதிகள். பொதுவுடமை கட்சிகள் தவிர மற்றவர்கள் அனைவரும் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பதாக தங்களையும் மக்களையும் சமாதனப்படுத்தியது.

பொதுவுடமை கட்சியினரோ அமெரிக்கா வரும் என்று தான் எதிர்த்தார்களே அன்றி அதனால் பின்னாளில் பறிபோக போகும் பொதுமக்களின் வாழ்க்கைக்கா அல்ல என்றது சோகமே.

உலகமயமாக்களில் இந்தியா இழந்தவைகளும் இழந்துக்கொண்டு இருப்பவைகளும் எவைகள்.

இது வரையில் இராக்கட் தொழில் நுட்பம், அணு உலை/ஆய்வுகள் நுட்பம் என்று தான் இந்தியா இறக்குமதி செய்து வந்தது. சுருங்க சொன்னால் இந்தியாவில் இல்லாவைகளையும் மற்றும் பாதுக்காப்பு ஆயுதங்களையும் தான் இறக்குமதி செய்து வந்தது.

உலக மயமாக்கலுக்கு பிறகு இந்தியா அதிகமாக இறக்குமதி செய்வதுகளில் கவனிக்க தக்கவைகள் வெங்காயம், துவரை, சர்க்கரை, மற்றும் அமெரிக்க இறக்குமதியான பழ வகைகள். ஒரு காலத்தில் அரிசியை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று துவங்கி இன்று ஒவ்வொரு உணவு பொருட்களாக இறக்குமதி பட்டியலில் இடம் பிடிக்கிறது.

30 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் தொகை இந்த 30 ஆண்டுகளில் என்ன 30 மடங்கா உயர்ந்தது என்று பார்த்தால் இல்லை. ஆனால் எப்படி இந்த பற்றகுறை வந்தது.

உலகமயமாக்களின் முக்கிய அம்சமாக இந்தியாவில் தொழில்/அரசு நடத்த உலக வங்கி கொடுக்கும் கடனுக்கு அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டால் மட்டுமே பணம் இல்லை என்றால் இல்லை என்று கைவிரிக்க. நான் நீ என்று கட்சி பாகுபாடு இல்லாமல் தலைமேல் தாங்கி எல்லா கட்டுப்பாடுகளையும் நடைமுறை படுத்தினார்கள்.

இதிலே அவர்கள் கைவைத்தது எல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ உழவை அழிக்கும் செயலாகவே அமைந்தன. வங்கி கடனில் இருந்து, விற்கும் விலை வரையில் இந்த மங்காத்தா தொடர்ந்தது.

பொக்ரான் குண்டு வெடிப்புக்கு பிறகு தாக்கு பிடிக்க முடிந்த இந்தியாவால் அடுத்த 6 ஆண்டுகளில் உணவுக்கு அமெரிக்க டாலரில் அடுத்த நாட்டை நாடி நிற்கின்ற அவலம் இன்று வரை தொடர்கிறது.

உணவு பற்றாகுறையின் பட்டியல் இன்னமும் நீண்டுக்கொண்டே தான் போகும் தடுக்கவிட்டால். பிறகு நாம் அன்றாடம் சாப்பிடும் இட்லியும் தோசையும் ஒரு அமெரிக்க கம்பெனியின் பெயரில் நம் ஊரிலே வைத்து நமக்கு குளிர்பாணம் உருளைகிழங்கு வறுவலுடன் விற்பார்கள். இப்போது 1000 2000 என்று கொடுத்து சாப்பிட்டுவிட்டு அந்த கடையில் அது நன்றாக இருக்கிறது இது நன்றாக இருக்கிறது என்று படத்துடன் எழுதுவது போல் பூரிப்போடு நடுத்தர வர்கமும் செய்தியாளர்களும் எழுதுவார்கள்.

உலகமயமாக்கல் என்ற பெயரி நடக்கும் நவீன சுரண்டல் இல்லை என்று வேறு என்ன சொல்வது இதை, இந்த ஏகாதிபத்தியம் நுழைந்தவிதமும் ஒரு பொது நீதியின் பெயரால் எதிர்ப்புகளை அடக்கியவிதாமும் தேசிய கட்சிகளின் அறிஞர்களை சிந்திக்க வைத்து இருக்கிறது அதன் விளைவே தமிழகத்தை தாக்கும் முடிவுகளை மெல்ல மெல்ல அரங்கேற்றி வருகிறார்கள்.

உலகமயமாக்கலில் தேசிய நலம் இங்கே மக்கள் மற்றும் விலங்கின் நலம் என்று சொல்கிறார்கள்.

இந்த தடைகள்/சட்டத்தின் மூலம் தேசிய கட்சிகள் சாதிக்க நினைப்பது என்ன, 60 ஆண்டுகள் ஆகியும் இந்தியையும் தேசிய கட்சிகளையும் தமிழகம் புறக்கணித்தே வந்துள்ளது. இந்த நிலையை உடைக்க வேண்டும் என்றால் தமிழகம் என்ன எல்லாம் தனது அடையாளம் என்று கொண்டு இருக்கிறதோ அவைகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக மக்கள் நலம் ஞாயம் தர்மம் என்ற பெயரால் அழிப்பது.

பிறகு வெளி நாடுகளில் உணவுக்கு கையேந்துவதை போல் தமிழகத்தின் அடையாளம் தொலைந்த பிறகு மொழி முதல் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பழக்கவழக்கம் எல்லாம் தேசியத்தில் கரைந்து தமிழன் என்றோ தமிழ் என்றோ இல்லாமல் இந்தியன் என்று போகும்.

தமிழர்களாக இருந்தாலும் நாம் இந்தியர்கள் தானே என்று உங்களுக்கு தோன்றலாம், நாம் எல்லோரும் முதலில் தமிழர்கள் பிறகு தான் இந்தியர்கள், வரப்பு உயர முதளாலி உயர்வது போல்.

மாறுப்பட்ட கூறுகளின் வளர்ச்சி சேர்ந்து தான் உடலின் வளர்ச்சியாகும், வெறும் தலை மட்டும் வளர்ந்து மற்ற பாகங்கள் வளராமல் போனால் அது ஊனமாகும்.

தேசிய கட்சிகள் தமிழகத்தை தேசத்தின் ஊனமாக ஆக்க எண்ணி செய்யும் செயலே அன்றி வேறு ஒன்றும் இல்லை.

இந்த அரசியலில் இந்த கூறுகளை சுப்பிரமணி சாமியும் மற்ற பாசக மக்களும் பூடகமாக எடுத்தற்கு எல்லாம் தேசியம் என்று சொல்வதை நம்மால் இப்போது எல்லாம் பரவலாக பார்க்க முடியும் கவனித்து பாருங்கள்.

இந்த போக்கை மக்கள் கையில் எடுத்து சட்ட பூர்வமாக சந்தித்து உடைக்க வேண்டும், இல்லை என்றால் இன்னும் ஒரு 10 ஆண்டுகளில் தமிழகம் செயற்கை பஞ்சதில் வாடி வெளி மாநில முதளாலிகளுக்கு அடிமை பட்டு கிடக்கவேண்டி வரும்.

வடக்கிலும் உலகெங்கிலும் தமிழர்கள் என்றால் கூலிகள் என்று இருந்த பெயரை மறுபடியும் நிறுவி, நாங்கள் ஆளப்பிறந்தவர்கள் நீங்கள் எல்லாம் அடிமையாக பிறந்தவர்கள் என்று வட அரசியல்வாதிகள் மார்த்தட்டுவார்கள். கவனம், விழித்துக்கொள்வார்களா தமிழர்கள்.

0 comments: