Saturday, January 23, 2016

பாக்கியராசுடன் மெக்லீன் மாகான தமிழ்ச்சங்கம்

சிக்காகோ வரை வந்த பாக்கியராசை மெக்லீன் தமிழ்ச்சங்கத்திற்கு அழைத்து ஒரு கூட்டம் நடத்தினார்கள் அப்துல் கலாம் தமிழ் பள்ளியும், மெக்லீன் தமிழ்ச்சங்கமும் இணைந்து.

வரவேற்பில் ஐ பேடும் (IPAD) கையுமாக வரவேற்றார்கள். இணையத்தில் சீட்டு வாங்கியவர்கள் போக மற்றவர்கள் இங்கே சீட்டுகளை பணம் கொடுத்து வாங்கினார்கள்.

மாலை 5:45க்கு அரவமே இல்லாமல் இருந்த இடம் 6:30க்கு எல்லாம் கலைகட்டியது. புளுமிங்டன் விமான தளத்திற்கு பின்னால் உள்ள அந்த பார்க்கி ரெசிடென்சியில் தான் கூட்டம். ஊரை விட்டு வெளியே என்று இருந்தாலும் கூட்டம் குறையாமல் வந்து இருந்தது.

நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் குழந்தைகளுக்கு பக்கத்து அறைகளில் ஒப்பனைகள் நடந்து கொண்டு இருந்தது.

கூட்டத்திற்கு கொண்டு வரவேண்டிய மலர்கள், செண்டுகள், மற்றும் நிர்வாக பொருட்களை சரி பார்த்து வினியோகம் செய்த்து கொண்டு இருந்தார்கள் ஏற்பாட்டாளர்களும் நிர்வாகிகளும்.

வரும் நபர்களை அன்போடு வாருங்கள் என்று அழைத்து உபசரித்தார்கள் விழா குழுவினர்கள்.

விழா குலுக்கலின் முதல் பரிசான தொகாவை பார்வைக்கு வைத்து இருந்தார்கள், அதனுடன் சென்னை வெள்ள நிவாரன பணிக்கு பணம் சேர்க்கும் விதமாக பனியனை விற்பனையையும் விளம்பரபடுத்தி இருந்தார்கள். மக்கள் ஆர்வமாக வாங்கியதையும் பார்க்க முடிந்தது.

சற்று நேரத்திற்கு எல்லாம் பாக்கியராசு தம்பதியினர் வந்துவிட்டதாக செய்த்தி அறிவிப்போடு விழா துவங்கியது.

அனைவரையும் வரவேற்று பேசிய விழா நாயகன் பேச்சின் நடுவில் அவரது மனைவியை வம்புக்கு இழுத்து பேசினார் (அனேகமாக இன்னேரம் பூசை விழுந்து இருக்கும்).

வரவேற்பை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. தமிழ் பள்ளி மாணவ மாணவியர்கள் பாடலை பாடினார்கள்.

அதை தொடர்ந்து தமிழ் பள்ளி மாணவர்களின் மாறுவேட நிகழ்ச்சி நடந்தது, இந்தியாவின் பிரபல மக்களை போல் வேடம் இட்டு அந்த சின்ன நட்ச்சத்திரங்கள் மேடையில் மின்னின.

பின்னர் சௌமியாவும் நந்தினியும் ஆடிய பரதம், இருவரும் சிறுமிகள் தான். ஆனால் என்ன ஒரு முக பாவனையும் நடனமும். இவ்வளவு அருமையாக முக பாவனைகளை பெரியவர்களே புரிந்து செய்யாத இந்த காலத்தில் அழகாகவும் அருமையாகவும் அந்த சின்ன நட்ச்சதிரங்கள் ஆடியது ஆச்சர்யமாக இருந்தது. அருமை வாழ்த்துகள்.

அதை தொடர்ந்து சிறுவர்களின் ஓரங்க நாடகம், தமிழ் மொழியை கற்க வேண்டியதின் அவசியத்தை விளக்கும் படியாக 1983ல் ஆரம்பித்து இராமாயண கலம் வரை சென்று அதற்கும் மேல் என்று சிறுவர்கள் கேட்க, இல்லை தமிழின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஆராய்த்துக்கொண்டே போனால் கால மாற்றியே திணரி போகும் என்று கவிதையாய் முடித்தார்கள் நாடகத்தை.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அமைந்தது சென்னை வெள்ள நிவாரண பணியும் அதன் பொருட்டு மெக்லீன் மாகான தமிழ்ச்சங்கத்தின் வசுல் மற்றும் சேவைகளை தொகுத்து ஒரு காணொலியாக வழங்கினார்கள். அதில் தங்களுக்கு ஆதரவு வழங்கிய நபர்களையும் குழுவினர்களையும் கௌரவபடுத்தினார்கள் நிர்வாகிகள்.

பின்னர் மேடைக்கு வந்த பாக்கியராசு குழந்தைகளையும் அவர்களை தயார்படுத்திய பெற்றோர்களையும் புகழ்த்து தள்ளினார். மேலும் தனது திரை அனுபவத்தில் குழந்தைகளுடன் நடந்த நிகழ்வுகளை நகைசுவையாக பகிர்ந்தார்.

சென்னையின் வெள்ள நிகழ்சியையும் அதில் தொண்டாற்றிய தண்ணார்வலர்களையும் அதில் மொலீன் மாகான தமிழ்ச்சங்கத்தின் பங்கையும் வெகுவாவும் பாசத்துடனும் நன்றி தெரிவித்தார்கள் பாக்கியராசு தம்பதியினர்.

அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி பாக்கியராசுடன், அதில் பெண்களிடம் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்ன என்ற கேள்விக்கு பொருமையிம் தாய்மையும் என்று சொல்லி பெருமை சேர்த்தார். மேலும் கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு பொருமையாகவும் வெளிப்படையாகவும் நகச்சுவையுடனும் அழகாக பதில் அளித்தார்.

பின்னர் அதை தொடர்ந்து இரவு விருந்து, உணவுகள் யாவும் இல்லத்தரசிகளின் வீட்டு தயாரிப்புகள் தண்ணீரும் ஊருகாயும் தவிர. மற்றபடி ரொட்டி, மிளகாய் கோழி, பக்கோடா, புலவு, பச்சை காய்கறிகள் சேலட், தயிர் சாதம் மற்றும் இரசமலாய் என்று அசத்தி இருந்தார்கள் மெக்லீன் மாகான தமிழ்ச்சங்க மகளீர்கள், அருமை வாழ்த்துகள்.

நன்றி நவில்தலுடன் விழா இனிதே முடிந்தது.

விழா முடிந்ததும் எப்படா பாக்கியராசு சாப்பிட்டு முடிப்பார் என்று காத்து இருந்த மக்கள் அவருடன் நின்று குடும்பம் குடும்பமாக படம் எடுத்துக்கொண்டார்கள்.

பாக்கியராசு தம்பதியினரோ சலிக்காமல் அனைவருடனும் பொருமையாக நின்று படமெடுக்க செய்தார்கள்.

சுமார் ஒரு வாரகாலத்தில் அரங்கு பிடிப்பது முதல் விழா விளம்பரம் மற்றும் வசூல் என்று அசத்திய மெக்லீன் மாகான தமிழ்ச்சங்கத்திற்கு நமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் சொல்லிக்கொள்வோம். மென்மேலும் இது போல் ஒற்றுமையாக சிறக்கவும் வாழ்த்துவோம்.

0 comments: