Friday, January 15, 2016

அப்போ தமிழர்கள் இந்துக்களும் இல்லை இந்தியர்களும் இல்லை - இராதா இராசன் சொல்வது போல்

சமீபத்திய சல்லிக்கட்டு தடை கலந்துரையாடலில் பங்கு பெற்ற இராதா இராசன் தடைக்கு கொடுத்த தீர்ப்பு எவ்வளவு அழகானது ஆழமானது அர்த்தமானது என்று சொல்லி சிலாக்கித்தார். அது மட்டும் இல்லாது 22 ஆண்டுகளாக விலங்குகளுக்கா இரவவும் பகலும் பாடுபட்டதாகவும் சொன்னார். அவர் சொன்ன தகவல்களை பார்க்கும் போது. விலங்குகள் மீது இவ்வளவு பாசம் கொண்டு இருக்கிறாரே என்று மதிப்பு வரும் அளவிற்கு இருந்தது அவரது பேச்சு.

விலங்குகளுக்கு அதை வதைப்பதை தடுக்கும் வலிமை கிடையாது. அப்படி பிழைப்புகாக வதைபடுத்த சம்மதம் கொடுக்காத விலங்குகளை எதன் அடிப்படையில் மனிதர்கள் இப்படி விளையாட்டு வீரம் என்று வதைபடுத்துகிறார்கள் என்றும் கேட்டு வியப்பில் ஆழ்தினார்.

அவரின் பேச்சில் ஒரு வழக்கை எப்படி எல்லாம் திரட்டி நீதிமன்றத்தில் கொடுத்தால் நாம் எதிர்ப்பார்க்கும் தீர்ப்பை பெறமுடியும் என்ற அறிவு பெற்று இருக்கிறார் என்று உணர்த்தினார்.

காளைகளை போட்டிக்கு தயார்படுத்தலில் எப்படி எல்லாம் அந்த மாட்டை மிரட்ட காளையின் உடல் உறுப்புகளை காயப்படுத்தலும், ஊக்க மருந்தை உட்கொள்ள கொடுப்பதும் போட்டி பாதையை அடையும் முன் அந்த காளைகள் பெரும் பதற்றதிற்கு உட்படுத்தப்படுகிறது என்று ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் கொடுத்ததின் அடிப்படையில் தான் இந்த தீர்ப்பு எழுதப்பட்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

இந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு இட்சம் வாங்கும் வழக்கறிஞர்களை கொண்டு வழக்கு நடத்திய பின் நன்கு ஆராய்ந்து நீதியரசர் இந்த காட்டுமிரான்டி தனத்திற்கு தடைவித்தார் என்றும் அழகாக சொன்னார்கள்.

அத்தோடு நிற்காமல் எனக்கு விலங்கு உணர்வுகள் தான் முக்கியம் மற்றவர்களை பற்றி எதுவும் எனக்கு புரியாது எனவும் சொன்னார்கள்.

இப்படி இவர் சொன்ன தகவல்கள் தரவுகளை எல்லாம் பார்க்கும் போது அவர் வாதத்தில் ஞாயம் இருப்பதாகவே படும். இரக்கம் அதும் ஒரு பெண் இப்படி இரக்க சுபாவத்தோடு போசுவதை பார்க்கும் போது சண்டைக்கு நிற்பவர்கள் கூட போகட்டும் விடுங்கள் என்று சொல்லும் அளவிற்கு  இருக்கும்.

இப்படி காளைக்கு துடிக்கும் இவரே தான் சொல்கிறார், பிற்போக்கான கருத்துகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய எழுத்தாளர்களை கொன்றது குற்றம் ஆகாது என்று. ஏன் என்றால் இது இந்து பூமியாம் இதிலே இந்துத்துவத்திற்கும் இந்து மத காரியங்களுக்கும் எதிராக நடப்பவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று.

ஓ இராத இராசனுக்குத் தான் மனித உணர்வுகளை பற்றி எல்லாம் தெரியாதே. இவர்கள் கூற்று பிரகாரம் பார்த்தால் தமிழர்கள் இந்து இல்லை, பொங்கள் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகை இல்லை. அதன் பொருட்டு வரும் சல்லிக்கட்டு இந்துகளின் கலாச்சாரம் இல்லை.

புரிந்துகொள்ளுங்கள் தமிழர்களே நம்மை பற்றி என்ன கண்ணோட்டத்தில் நம்மிடனே இருக்கும் பாசக சார்பு மக்கள் நினைகிறார்கள் என்று.

இதை விளக்கி எழுதிய நந்தினிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இந்துத்துவா’ என்பதே ராதா ராஜனின் ஜல்லிக்கட்டு தடைகோரும் பின்னணி


3 comments:

')) said...

பனிமலர் அவர்களுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் மற்றும் பனிமலரின் அன்பு நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

')) said...

மிக்க நன்றி நண்பரே உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எங்களின் உள்ளம் கனிந்த தைதிருநாளாம் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

')) said...

correct