Friday, January 8, 2016

மாலை நேரத்து மயக்கம் - forgetting sarah marshall - செல்வராகவனும்

செல்வராகவன் இந்த ஆங்கில படத்தை பார்த்து தமிழில் எடுப்பதை எப்போதான் நிறுத்த போராரோ.

இவரை போல உங்களாலும் முடியும் முயன்று பாருங்களேன்.

ஆங்கில படத்தின் முதலில் வரும் காட்சிகளை இடைவேளைக்கு பிறகு என்று மாற்ற வேண்டும். பிறகு அங்க அங்க மானே தோனே பொன் மானே எல்லாம் போட்டு கொள்ளனும்.

பிறகு முதல் பாதி கதைக்கு செல்வராகவன் மாதிரி உள்ள ஒரு ஆளை பிடித்து 12ஆம் படிக்கும் பதின்ம வயது தயக்கம் கூச்சம் அச்சம் எல்லாம் வரும் படி காட்சிக்கள் கொண்டு ஒரு முன் கதை தயாரித்து, பெண்களை மிகவும் வக்கிரம் மிகுந்தவர்களாக வரும்படி வசனங்களுடன் எழுதினால் இன்னும் ஒரு மாலை நேரத்து மயக்கம், ஆயிரத்தில் ஒருவன், இல்லை இப்படி ஏதாவது ஒரு பெயர் வைக்கனும்.

அவ்வளவு தான் நீங்களும் ஒரு நட்சதிர திரைபட எழுத்தாளர் ஆகிவிட்டீர்கள்.

இன்னும் ஒன்று சொல்ல வேண்டும், ஆண் செய்யும் விரச காட்சிகளை எல்லாம் பெண்கள் செய்வது போல் எழுதிவிட்டால் நீங்கள் ஒரு எதார்த்த எழுத்தாளரும் கூட.

என்ன அருமையாக எடுத்த ஒரு ஆங்கிலப்படம் அதை இப்படியா கொத்துயிரும் கொலையுருமா தமிழ்லில் எடுக்கபடுனும்.......

இதுல ஆபச படம்னு சொல்லிபுட்டாங்கன்னு வருத்தம் வேறு, அட ஆண்டவா இந்த செல்வராகவனிடம் இருந்து இந்த தமிழ் பட உலக காப்பாத்தப்பா.....தாங்க முடியல

சோனியாவுடன் ஏற்பட்ட மண முறிவில் இருந்து செல்வா இன்னவும் மீளவில்லை போலும். போதும் விட்டுட்டு வெளியே வாங்க ...................

இந்த படைப்பை கீதாஞ்சலி பெயரில் வெறு வெளியிட்டு இருக்கிறார் மனிதன்...............

இந்த படத்தை கௌதம் மேனன் இல்ல எடுப்பார் என்று நினைத்தால் செல்வராகவன் முந்திக்கொண்டார்.

0 comments: