Monday, January 25, 2010

வாழ்த்துக்கள் இளையராசா, இரகுமான் - தாமரையணி விருது 2010


இந்த வருட 2010 தமரையணி விருது பெறுகிறார்கள் இளயராசாவும்,

இரகுமானும். தமிழகத்தில் இருந்து அதுவும் இசைக்காக இருவருக்கும் விருது என்று வரும் போது மகிழ்ச்சியே.




கலைஞர்களுக்கு பாராட்டும் விருத்துகளும் தான் அவர்களை மேலும் உச்சாகபடுத்து இன்னமும் அதிக படைப்புகளை படைக்கத்தூண்டும்.

இரகுமானை பொருத்த அளவில் அவர் உலகின் மிகப்பெரிய விருதான ஆசுகர் எல்லாம் வாங்கியவர், அதுவும் தனது முதல் படத்திலேயே. அவருக்கு இந்த தாமரையணி விருது எல்லாம் ஒன்றும் பெரிது இல்லை என்றாலும், தனது நாட்டில் அவர் எவ்வளவு தூரம் கௌரவிக்கபடுகிறார் என்று உலகுக்கு இந்த விருது காட்டும்.

ஆனால் இராசாவை பொருத்த அளவில், அவர் சாத்தித்து இருக்கும் சாதணைகளுக்கு இந்த விருத்து எல்லாம் மிகவும் காலம் தாழ்த்தி தான் கொடுக்கப்படுகிறது.

இராசாவின் இசையே அவருக்கு உலக அளவில் முகவரி எல்லாம் தேடித்தந்த பிறகும், இத்தனை ஆண்டு காலம் காத்திருக்க தேவை இல்லை தான். ஒவ்வொரு முறை தேசிய விருத்துகள் என்று வரும் பொழுது எல்லாம், இராசாவுடன் பணியாற்றிய மற்ற அனைவருக்கும் விருத்துகள் கிடைக்கும் ஆனால் இவருக்கு கிடைகாமல் போகும்.

அதை அவரும் பெரிதாக எடுத்துக்கொண்டதும் இல்லை. அவருக்கு வேண்டும் என்றால் அது எல்லாம் தேவை இல்லை என்று இருக்கலாம். ஆனான் அவரது இசையை இரசிக்கும் சாதாரண இரசிகர்களுக்கு எல்லாம் இது மிகவும் தேவையாக இருக்கிறது.

தான் இரசிக்கும் படைப்புகளை படைப்பவர்களுக்கு ஒரு தகுந்த பாராட்டு இல்லை என்றால் எப்படி என்று இருப்பது இயல்பே. இப்படி எல்லாம் கோபமாக இருப்போருக்கு இந்த செய்தி இரு இனிப்பு செய்தி தான்.......
வாழ்த்துகள் இளையராசா, இரகுமான்.

0 comments: