Wednesday, March 4, 2009

விடுதலை புலிகளும் அதன் தலைவரும் நம்பிக்கைக்கு உகந்தவர்களா??

திருடனுக்கு தேள் கொட்டியதை போல் இலங்கை விழி எல்லாம் வெளியில் தள்ளி, வையை இருக்கையால் அழுத்தி அழுகையை அடக்கி மனதுக்குள் அழுது நிற்கின்றது.

இலங்கையின் துடுப்பாட்ட விளையாட்டு குழுவின் மீது நடந்த கொலை வெறித்தாக்குதல், இலங்கை மக்களின் மனதில் அச்சத்தை கொடுத்து இருக்கும். இனி என்ன எல்லாம் நடக்குமோ என்று ஆழ்ந்த கவலையில் இருப்பார்கள்.

தாக்குதல் நடந்த சில மணி துளிக்களுக்கு எல்லாம் தனி விமானத்தில் வீரார்களை நாட்டுக்கு கொண்டுவந்து விடவேண்டும் என்று முடிவு தெரிவித்ததில் இருந்து இலங்கை எவ்வளவு பயந்து போய் இருக்கிறது என்று தெரிகின்றது.

திருடனுக்கு திருடன் துணை என்றது போல், பயங்கரவாதமே நாட்டின் முதலான தொழில் என்று இருக்கும் பாக்கிட்த்தானம். 50 ஆண்டு காலமாக தங்களது சோம்பேறி தனமான வாழ்க்கைக்கு அடுத்தவனின் வாழ்வை சுரண்டி தான் வாழ்வேண், அதற்காக எத்தணை கொலைகள் வேண்டுமானாலும் செய்வோம் என்று சாதி வெறி பிடித்து அலையும் அல்லகை இலங்கையும் நண்பர்களாம்.

இரண்டு அரசுக்குமே பொதுவாக இருக்கும் ஒற்றுமை, அரச அதிகாரத்தை பயன்படுத்தி சாதிவெறியை நாட்டில் தூவி அது கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் குளிர்காய்வது. இந்த இழி நிலையை உலக நாடுகளுக்கு தங்களது பார்வை பொருட்களாக ஆக்கி பணக்கார நாடுகளிடம் பிச்சை எடுப்பதும் இவர்களது பொதுவான செயல்கள்.

அப்படி கிடைக்கும் பிச்சையில் அரச மனிதர்கள் சொகுசான வாழ்க்கையை மேற்கொள்வதும், சாமானியர்கள் வாழாவே சவதும் கூட இரண்டு நாடுகளுக்கும் பொருந்தும்.

இந்த இரண்டு திருட்டு பிச்சைகார நாடுகளும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டியது. அது பாக்கிட்த்தானத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க வருமானத்தை பெற்றுக்கொள்ள என்ன எல்லாம் செய்யலாம் என்று கணக்கு போட்டு வைத்ததில் துடுப்பாடம் கடந்த வருடங்களில் சரியான அதள பாதாளத்தில் விழிந்துள்ளது.

உலககிண்ண போட்டியின் முடிவில் பயிற்சியாளர் கொல்லப்படதை இந்த திருட்டு நாடு மூடிமறைக்கவே படாத பாடாக பட்டது. அந்த நிகழ்வு முதல் கடைசியாக நடந்த பெனசீர் படுகொலை வரை பாக்கிட்த்தானத்தில் திருட்டுக்கூட்டம் கட்டுக்குள் நாடு சென்று விட்டது என்று தெளிவாக தெரிந்ததே.

அதுவும் அமெரிக்க ஆட்சி அதிகாரம் மாறியதில் பெருளாதார உதவிகள் இனிமேல் இல்லை என்று அமெரிக்க அரசு வெளிப்படையாகவே சொல்லியும் வந்துள்ள நிலையில். அந்த இழி நிலைக்கு இந்தியாவின் அயலுறவு துறையின் முயற்சி எடுத்தது தான் என்று அறிந்த பாக்கிட்த்தானம். தனது திருட்டு கூட்டத்தை விட்டு மும்பையில் தாக்குதல்களை தொடுத்தது.

அந்த சீண்டலின் பெயரால் இந்தியா படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அப்படி வரும்கால் ஒரு பெரிய போரை துவக்கி அதிலே நீண்ட காலம் குளிர்காயலாம் என்று பகல்கனவு கண்டது. அந்த செயலில் காயமுற்ற இந்தியாவோ, பாக்கிட்த்தானத்தின் வயிற்றில் அடிக்கும் விதமாக பொருளாதாரத்தில் அடிவிழும் விதமாக துடுப்பாடம் உங்களோடி இனி இல்லை என்று சொன்னதோடு மட்டும் இல்லாது. உங்களது நாட்டில் நாங்கள் வந்தால் பாதுகாப்பு இருக்காது என்றும் அழுத்தம் திருத்தமாக சொன்னது.

முடிவு பாக்கிட்த்தானத்தில் சென்று விளையாட அனைத்து நாடுகளும் மறுக்க துவங்கியது. அந்த நிலையில் தான் இந்தியாவில் நடக்கும் துடுப்பாட்ட போட்டிகள் நடக்கும் இடங்களில் தாக்குதல் நடக்கும் என்று பின் இலேடனை கொண்டு அறிவிக்க செய்து பார்த்தது.இந்தியாவிலும் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது என்ற செய்தியை பரப்பி மீதம் இருக்கும் போட்டிகளை இடை நிறுத்தி வெற்றிகாண நினைத்த அந்த திருட்டு கூட்டத்திற்கு தமிழ் தக்க பதிலடி கொடுத்தது.

தமிழகத்தில் இந்தி மட்டுமே பேசும் கூட்டம் வந்தாலும் சரி, அலைந்தாலும் சரி அகப்படுவது மிகவும் சாதாரணம். ஆகையால் தமிழகத்திற்கு மீதம் இருந்த போட்டிகளை மாற்றி போட்டிகளை செவ்வனே நடத்தி பாக்கிட்த்தானத்தின் முகத்தில் கரியை பூசி சிரித்தது இந்தியா.

இந்த இழி நிலையில் இருந்த பாக்கிட்த்தானம், எப்படியாவது ஒரு போட்டியை நடத்தி உலக நாடுகளை அழைத்து ஒரு போட்டி நடத்தி மறுபடியும் சூதாட்டங்களை நடத்தி பணம் செய்யவேண்டும் என்ற கனவில். இலங்கையை தான் போடும் பிச்சை ஆயுதங்களுக்கு கைமாறாக உங்களது அணியை அனுப்பி விளையாட சொல்லவும் என்று மிரட்டியது.

தனக்கு கிடைக்கும் பிச்சை நின்றுவிடுமே என்று நினைத்த இலங்கையோ தனது வீரர்களை அனுப்பு போட்டியும் நடந்துகொண்டு இருக்க. இன்று 03/03/2009 திடீர் என்று ஒரு எரிகணை தாக்குதலை வீரர்கள் மீது நடத்தி தனது கொலைவெறிக்கு தீனி போட்டுக்கொண்டது பாக்கிட்த்தானம்.

இந்த தாக்குதலில் பாக்கிட்த்தானத்திற்கு சம்பந்தம் இல்லை, வெளி நாட்டவர்கள் தான் செய்தார்கள் என்று பாக்கிட்த்தானம் சொல்லும். அதோடு நிற்காமல் நாங்களும் பயங்கரவாதத்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்ட நாடுதான் என்று அமெரிக்க தொலைக்காட்சிகளில் பாக்கிட்த்தானத்தின் அயலுறவு அமைச்சர் அறிக்கைவிடுவார்.

இந்த திருடர்கள் இப்படி தான் காலம் காலமாக செய்துவருகிறார்கள் சரி. ஆனால் அந்த திருடர்களுடன் கூட்டு திருடில் சேர்ந்து இருக்கும் இந்த இலங்கை திருட்டு கூட்டம் என்ன செய்ய போகிறது.

சமாதானதிற்கான போர் என்று பாக்கிட்தானத்தின் மீது படையை எடுக்குமா. அல்லது தங்களது வீரர்களே ஒரு ஆளை தயார் செய்த்து இப்படி செய்துகொண்டார்கள் என்று சொல்லப்போகின்றது. அல்லது நாங்கள் எல்லாம் அல்லக்கைகள் எங்களுக்கு அந்த மானம் வெட்க்கம் எல்லாம் இல்லை. அதனால் பிச்சைக்காக நாங்கள் எதை பேசவேமாட்டோம் என்று அமைதியாக இருக்கப்போகின்றதா என்று பார்ப்போம்.

இறுதியாக, போர் நடக்கும் இலங்கைக்கு இந்திய வீரர்கள் வந்தார்களே என்று இலங்கை மார்தட்ட வேண்டாம். இந்தியாவுக்கு உங்களின் மேல் உள்ள நம்பிக்கையில் அங்கு வரவில்லை. அவர்களுக்கு உங்களின் மேல் உள்ள நம்பிக்கையை விட புலித்தலைவர் திரு பிரபாகரன் அவர்கள் மீது உள்ள நம்பிக்கையினால்.

நாய்விற்ற காசு குறைக்காது தான், ஆனால் தன்வினை தன்னை சுடும். இது தமிழ் உலக்குக்கு சொன்ன மொழி. இன்னமும் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அய்யோ பாவம் அந்த விளையாட்டு வீரர்கள். இந்த திருட்டு பிச்சைகார கூட்டத்தின் தேனொழுகும் பேச்சை கேட்டு உயிரை கொடுக்க நினைத்தார்களே பாவம் ஆழ்ந்த அனுதாபங்கள்.

5 comments:

Anonymous said...

தலைப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியதாதோ ?

Anonymous said...

இந்தியாவுக்கு உங்களின் மேல் உள்ள நம்பிக்கையில் அங்கு வரவில்லை. அவர்களுக்கு உங்களின் மேல் உள்ள நம்பிக்கையை விட புலித்தலைவர் திரு பிரபாகரன் அவர்கள் மீது உள்ள நம்பிக்கையினால்

முடியல

')) said...

அவர் கூற வந்தது இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நாடுகளில் போட்டி நடந்தால், அந்த நாடுகளுக்கு எதிராக போரிடுபவர்களில் யார் விளையாட்டு வீரர்களின் உயிருக்கு உத்தரவாத தரக்கூடியவர்கள், இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் பாகிஸ்தானின் உளவுப்படைகளும், பாகிஸ்தானில் நடக்கும் போட்டிகலில் இந்தியாவின் உளவுப்படைகளும், இலங்கையில் நடந்தால் விடுதலைப்புலிகளும். எந்த நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு அதிக பாதுகாப்பு எனப்துதான்.

')) said...

அனானி அமைதி அமைதி, ஏன் இந்த கொலை வெறி. ஏன் அனானி உண்மையை சொன்னால் பற்றிக்கொண்டு எரிகின்றதா........வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

')) said...

பிருந்தன் வருகைக்கும் கருத்துக்கும் மற்றும் எனது தரப்பில் விளக்கம் கொடுத்தவைகளுக்கும் நன்றி.