Friday, April 21, 2017

தமிழக உழவர்களே நீங்கள் டெல்லியில் இருந்து இசுலாமாபத்துக்கு போங்கள்

தமிழக உழவர்கள் கிட்டதட்ட ஒரு மாத காலம் போராடியும் இன்னமும் ஒரு தீர்வு வராத நிலையிலும். தமிழக பாசகவினர்கள் சொல்லும் செய்திகளையும் பார்க்கும் போது, இனி தமிழக உழவர்களின் பிரச்சனைகளை இனி இந்திய(பாசக) அரசு கவனிக்கவோ சரி செய்யவோ போவது இல்லை என்று தெள்ளத்தெளிவாக தெரிகின்றது.

பாசக அரசு தமிழகத்தில் அமையும் வரை தமிழகம் பூமிக்குள் சென்றால் கூட என்ன என்று கேட்கக்கூட தயாராக இல்லை என்றது வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ள நிலையில் தமிழக உழவர்கள் என்ன தான் செய்வார்கள்.

வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை அதை தள்ளுபடி செய்யுங்கள் என்றும் மேலும் உழவு பொருட்களின் விலையும், விளைந்த பொருட்களை விற்கும் போதும் விளையும் விலை மாற்றத்தையும் கட்டுப்படுத்தவும் போராடும் உழவர்களை சந்திக்க மறுக்கும் பாசக அரசை நம்பி இனி ஒன்றும் ஆவ போவது இல்லை.

இந்தியா ஏழை நாடுகளாக இருக்கும் பல நாடுகளுக்கு உதவும் விதத்தில் எந்த நிபந்தனைகளையும் விதிகாமல் பணம் கொடுத்து உதவுகின்றது.

அது போல் இந்திய(பாசக) அரசு உதவாது ஒரு கையறு நிலைக்கு வலுக்கட்டாயமாக தள்ள நினைக்கும் இந்த நிலையை ஏழை நாட்டின் நிலைமையாக கருதி ஏழை தமிழ உழவர்களை காப்பாற்றும் படி பாக்கிட்தானை கேட்க வேண்டும்.

இந்தியா மற்ற நாடுகளின் ஏழ்மையை போக்க அந்தந்த நாட்டில் தனது செல்வங்களை செலவிடுவது போல் பாக்கிட்தானின் நல்லெண்ண நடவடிக்கையாக தமிழக உழவர்களுக்கு உதவும் படி கோறுவது ஒன்றும் தேச துராகம் ஆகாது. இப்படி தமிழக உழவர்களை தள்ளிய பாசக அரசு தான் தேச விரோத அரசாகவும் அந்த செயல் தான் தேச துராக நடவடிக்கையாக இருக்கிறது.

ஆகவே போராடும் தமிழ உழவர்கள் டெல்லியில் இருந்து அப்படியே இசுலாமாபத்துக்கு சென்று பாக்கிட்தானத்து பிரதமரை சந்தியுங்கள். அவர் ஒன்றும் வேற்று மனிதர்கள் அல்ல மோடி முன் அறிவிப்பு இல்லாமல் அவர்கள் வீட்டு திருமணத்திற்கு விருந்துக்கு சென்றும் வரும் அளவிற்கு நல்ல நட்பில் இருக்கும் நாடு. ஒரு காலத்தில் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட நாடும் கூட.

பாக்கிட்தானத்தை கேட்போம், அவர்களால் முடியாது என்றால் சீனாவை கேட்ப்போம், அவர்களாலும் முடியாது என்றால் ஐ நா சபையில் நலிந்த நாடுகள் பிரிவின் கீழ் இந்தியாவின் தமிழகத்தை கொண்டு வந்து உதவும் மாறும் கேட்போம்.

தமிழர்களை தங்கள் போக்கிற்கு இணங்காவிட்டால் நசுக்கலாம் என்று பார்க்கின்றது பாசக அரசு. இந்திய அரசாகவே இருந்தாலும் அதுவும் உலகில் தான் இருக்கிறது, வானத்தில் இருந்து வந்த தேவ தூதர்கள் அல்ல என்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

0 comments: