Friday, April 14, 2017

தமிழகத்தில் பிடிபட்ட வெள்ளை பணம் - மோடியின் வெற்றி தொடரட்டும்

2016 இறுதியில் 50 நாட்களில் இந்தியாவில் இருக்கும் கருப்பு பணத்தை எல்லாம் ஒழித்து கட்டி வெள்ளை பண இந்தியாவாக உருவாக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் நடக்க இருந்த முதல் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதால் மைய அரசால் அறிவிக்கப்பட்டு தேர்த்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

ஒவ்வொரு மனிதருக்கும் 25 ஆயிரம் ரூபாய்க்கள் வரையில் தான் பணம் கொடுப்போம் மேலே எல்லாம் பணம் தரமுடியாது என்று சொல்லும் வெள்ளை பண வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும். ஆதார் அட்டை, பான் அட்டை, குடும்ப அட்டை, தேர்தல் அட்டை, ஓட்டுனர் உரிமம், கடவு சீட்டு, வெளி நாட்டு விசா, சந்திரனுக்கு குடி பெயறும் அட்டை என்று கொண்டு வந்து கொடுத்தாலு தலைக்கு 25 ஆயிரம் மட்டுமே கொடுப்போம் என்றும்.

எதற்கு இப்படி எல்லாம் மக்களை அலைகழிக்கிறீர்கள் என்றால் சுத்த பாரத்தம் உருவாக்க போகின்றோம் இன்றைக்கு அவசரம் அது இது என்று நாங்கள் பணம் கொடுத்துவிட்டால் பிறகு சுத்தபாரதம் கெட்டபாரதம் ஆகிவிடாதா என்று சொன்னார்கள் அந்த கரும வீரர்கள்.

ஒரே ஒரு தினகரனால் மட்டுமே 89 கோடி ரூபாய்க்களை புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளாக கொண்டு வந்து வீதியில் இறைக்க முடிந்தது என்றால் தினகரன் எத்தனை வங்கியின் வாசலில் வரிசையில் நின்று பெற்று இருப்பார் என்று நாம் கேட்க்க கூடாது.

ஒரு கோடி ரூபாய் பணம் பெறுவதற்கே 400 நாட்கள் தினமும் வங்கிக்கு சென்று வரிசையில் நின்று பெற்றால் தான் கிடைக்கும், அப்படி மொத்தம் 89 கோடி ரூபாய்க்களுக்கு கிட்டதட்ட 98 ஆண்டுகள் தினமும் வங்கியில் சென்று வரிசையில் நின்றால் தான் பணம் பெற்று இருக்க முடியும்.

அல்லது 98 தினகரன்கள் வரிசையில் நின்று இருந்தால் ஒரு ஆண்டில் பெற்று இருக்கலாம். ஆனால் புது பணம் புழகத்தில் வந்து 6 மாதகாலங்களே ஆன நிலையில் 196 தினகரன்கள் 6 மாதகாலமாக வரிசையில் நின்று ஆதார் அட்டை, பான் அட்டை, என்று காட்டி வாங்கி வந்து மக்களுக்கு இந்த 89 கோடி ரூவாய் வெள்ளை பணத்தை கொடுத்து இருக்கிறார்கள்.

இந்த நிலையை நிலை நாட்ட தான் 120 கோடி இந்தியர்கள் 50 நாட்களாக வரிசையில் நின்று தியாகம் செய்ததா.

தனது உழைபில் வந்த பணத்தை மாற்றிக்கொடுக்க முடியாது என்று சொல்லி பழைய நோட்டுகளை கொளுத்தி குளிர் காயுங்கள் என்று சொன்னார்களே இப்படி சாதாரணமாக 89 கோடி புதுபணம் ஒரே ஒரு ஆளால் மட்டுமே பெறமுடியும் என்றால் ஏன் மற்ற மக்கள் எல்லாம் இன்னமும் அவதி படுகிறார்கள்.........

இன்னும் இது போல் உலகிலே இல்லாத திட்டங்களாக மோடி அதிரடியாக கொண்டு வந்து படம் காட்டட்டும்.

பாசகவின் சமீபத்திய மதிப்பீட்டில் மிகவும் பின் தங்கிய மா நிலமான தமிழகத்தில்கே 89 கோடி வெள்ளை பணம் பெறமுடிகின்றது என்றால் முன்னேறிய இடங்களில் நிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளலாம்........

இந்தியாவில் ஊழழை ஒழிக்க பிறந்தவர்களே உங்களின் தோல்வியை நீங்களே இப்படி வெளிப்படையாக ஒப்புக்கொளலாமா......

0 comments: