Friday, April 7, 2017

சொச்ச பாரத்து வரியும் உழவர்(விவசாய) வரியும்

இந்தியாவில் மைய அரசு நிறுவனங்களில் நடத்தப்படும் எந்தவிதமான பண பரிவர்த்தனைகளிலும் சொச்ச பாரத்து வரி என்ற ஒன்றை சேற்று வாங்குகின்றார்கள். அப்போ இது வரையில் இந்தியாவில் தூய்மை பணியாளர்களை வேலைக்கு எடுப்பதும் சம்பளம் கொடுப்பதும் எல்லாம் சுன்னாச்சுக்கும் என்று இருந்தாகவும் என்னமோ பாசக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்தியாவே தூய்மை ஆக்க துவங்கியதாகவும் அந்த தூய்மையை மைய அரசு உறுதிபடுத்த இந்த வரியை கட்டாய வரியாக வசூலிப்பதாகவும் செயல் படுத்துகிறார்கள்.

இந்த வசூல் பணத்தின் தேவைகள் என்ன, யார் யாருக்கும் எவைகளுக்கும் இந்த பணம் சென்று செல்கின்றது என்று கேட்டோமேயானால் ஒன்று உனக்கு எல்லாம் பதில் சொல்ல எனக்கு எந்த அவசியமும் இல்லை என்று இறுமாப்புடனோ அல்லது ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு இந்தியருக்கும்  ரூ15 லட்சம் கொடுப்போம் என்று 3 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார்களே அது போல ஏதாவது சொல்லி சிரிப்பார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாகவே உழவு பெரும் வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டு வருகின்றது, சமையலுக்கு அன்றாடம் பயன் படும் வெங்காயம் கூட வெளி நாட்டில் இருந்து இறக்குமதியாகும் கொடுமையான காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்று எத்தனை மக்களுக்கு புரிய போகின்றது.

பாசக ஆளும் மாநிலமானால் கேட்காமலே உழவர்களின் கடன்களில் இருந்து எல்லா சலுகைகளும் கொடுக்கப்படும்.

அதுவே பாசக ஆளாத மாநிலமாக இருந்தால் உலக வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. உலக பொருளாதாரத்துக்கு எதிரானது அல்லது பழைய காங்கிரசு அரசு கொண்டு வந்தது என்று நொண்டி சாக்குகளை சொல்வார்கள்.

அது மட்டும் இல்லாது மாநில அரசுகளுக்கும் எந்த வித சலுகைகளும் கொடுக்ககூடாது என்று கட்டுப்படுத்துவார்கள், இல்லை என்றால் நிதி அயோக்கியர்கள் உங்கள் மாநிலங்கள் எல்லாம் நாங்கள் சொல்வதை கேட்பாததால் உங்களுக்கு நிதி இல்லை என்று கையை விரிப்பார்கள்.

ஆகையால் மைய அரசுக்கு மா நில அரசு செலுத்தும் வரிப்பணத்தில் தமிழக உழவர் வரி என்ற ஒன்றை விதித்து, மைய அரசு பண பரிவர்த்தனை செய்யும் அத்தனை இடங்களிலும் குறிப்பாக பெருமுதளாலிகள் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைகளுக்கு உழவர் வரி என்று வசூலிக்க வேண்டும்.

அது மட்டும் இல்லாது தமிழகத்துக்கு வரும் இரயில் சேவை கட்டணத்தில் இருந்து விமான சேவைகள் வரை தமிழக உழவர் வரியை கட்டாயம் ஆக்க வேண்டும். சொச்ச பாரத்து போல் 5 மடங்கு வரியை விதிக்க வேண்டும்.

தமிழகத்தில் வசூல் ஆகும் கட்டண வழி தடங்களில் வசூலிக்கப்படும் தொகையில் 20 முதல் 40% வரை உழவர் வரியை தமிழக அரசு நேரடியாக வசூலிக்க சட்டங்கள் இயற்ற வேண்டும்.

தமிழகத்தின் இயற்கை வளங்களை ஆராய வரும் மைய எண்ணை வள நிறுவங்கள் போன்ற அமைபுகளாலும் அவற்றால் பின்னர் அமைய இருக்கும் வணிபங்களுக்கும் 40% முதல் 60% வரை உழவர் வரியை விதிக்க வேண்டும்.

தமிழகத்தில் விளையாத அல்லது உற்பத்தியாகாத பொருட்களை மற்ற மாநிலங்களில் இருந்து வாங்கும் பொருட்களின் விலையில் 20% முதல் 30% வரை உழவர் வரியை விதிக்க வேண்டும்.

இப்படி வசூலிக்கும் தொகையை கொண்டு ஒரு முதலீட்டு முதலீடை துவங்கி அதில் வரும் வட்டி மற்றும் இலாபத்தில் உழவர் இழப்பை ஈடுகட்ட வேண்டும்.

இந்த நடவடிக்கை தமிழகத்து உணவு உற்பத்தி எவ்வளவு முக்கியம் என்றது மட்டும் அல்லாது எவ்வளவு புன்னியமான தொழில் என்று மறுபடியும் மதிக்க துவங்க உதவும். செய்வார்களா, செய்வீர்களா.....

0 comments: